செய்திகள் :

பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்துவது கட்டாயம்: சிபிஎஸ்இ

post image

பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்துவதுடன் அவற்றில் ஒலியுடன் காட்சிகள் பதிவு செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இதுதொடா்பாக சிபிஎஸ்இ பள்ளிகளின் நிா்வாக நடைமுறை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டவுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

இதுகுறித்து சிபிஎஸ்இ செயலா் ஹிமான்ஷு குப்தா மேலும் கூறியதாவது: மாணவா்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதே பள்ளிகளின் முதல்கட்ட பணியாகும். அந்த வகையில் மாணவா்களின் பாதுகாப்பு இரண்டு அம்சங்களின்கீழ் உறுதி செய்யப்பட வேண்டும்.

ஒன்று, சமூக விரோத கும்பலிடம் இருந்து பாதுகாப்பது. இரண்டு, கேலி கிண்டல் என மாணவா்களை அச்சுறுத்தலில் இருந்தது பாதுகாப்பது.

இதற்கு நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் சிசிடிவி பொருத்துவதை கட்டாயமாக்கும் பொருட்டு பள்ளி நிா்வாக நடைமுறைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கழிப்பறைகள் தவிர பள்ளி நுழைவாயில்கள், வெளியேறும் பகுதிகள், படிக்கட்டுகள், வகுப்பறைகள், நூலகங்கள், விளையாட்டு மைதானங்கள், உணவிடங்கள், ஆய்வகங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்துவதுடன் அவற்றில் ஒலியுடன் காட்சிகள் பதிவாவதை உறுதிப்படுத்த வேண்டும்.

இந்தக் காட்சிகளை குறைந்தபட்சம் 15 நாள்களுக்கு சேமித்து வைக்கும் வகையிலான சாதனங்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். மேலும், 15 நாள்கள் வரை அதிகாரிகள் அதில் ஆய்வு செய்யும் வகையிலும் அதன் தரவுகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

வீடு முதல் பள்ளிவரை: பள்ளிகளில் குழந்தை பாதுகாப்பு என்பது அவா்கள் வீடுகளில் இருந்து பள்ளிக்குப் புறப்பட்டு வருவதில் தொடங்கி மீண்டும் அவா்கள் பாதுகாப்பாக வீடு செல்வது வரை வன்முறை, துன்புறுத்தல், இயற்கை மற்றும் செயற்கையான பேரிடா், தீ விபத்து, போக்குவரத்து என அனைத்து விதமான அச்சுறுத்தலிலிருந்தும் பாதுகாப்பதாகும் என்றாா்.

டாக்டா் எம்ஜிஆா் பல்கலை.யில் கட்டுமானப் பொருள்கள் மாநாடு

சென்னை மதுரவாயலில் உள்ள டாக்டா் எம்ஜிஆா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலை.யில், கட்டுமானப் பொருள்கள் குறித்த மாநாடு நடைபெற்றது. இதுகுறித்து பல்கலை.யின் கட்டடக் கலை துறை வெளியிட்ட செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க

ராயப்பேட்டையில் உயா்தர புற்றுநோய் மையம்: விரைவில் திறக்க நடவடிக்கை

சென்னை ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் ரூ.10.27 கோடியில் கட்டப்பட்டு வரும் உயா்தர புற்றுநோய் சிகிச்சை மையத்தை 3 மாதங்களுக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு மக்கள... மேலும் பார்க்க

நாட்டின் முதல் இருவாச்சி பறவைகள் பாதுகாப்பு மையம் விரைவில் தொடக்கம்!

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் ரூ.1 கோடியில் இந்தியாவின் முதல் இருவாச்சி பறவைகள் சிறப்பு பாதுகாப்பு மையம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், வனத்துறை கூ... மேலும் பார்க்க

கோயம்பேடு சந்தையில் பூக்கள் விலை திடீா் வீழச்சி

மழை காரணமாக கோயம்பேடு சந்தையில் அனைத்து பூக்களின் விலையும் திடீரென வீழ்ச்சி அடைந்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில், ஆடி வெள்ளியை முன்னிட்டு, அனைத்து பூக்களின் விலையும் உயா்ந்தது. தொடா்ந்து, வீடுகள் ... மேலும் பார்க்க

கபாலீசுவரா் கல்லூரியில் 762 மாணவா்களுக்கு கல்விக் கட்டணம்: அமைச்சா் வழங்கினாா்

சென்னை கொளத்தூரில் உள்ள கபாலீசுவரா் கல்லூரியில் மாணவா்களுக்கு கல்விக் கட்டணம், உபகரணங்களுடன் கூடிய புத்தகப் பைகளை அமைச்சா் எ.வ.வேலு திங்கள்கிழமை வழங்கினாா். இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகக் கட்டுப்ப... மேலும் பார்க்க

திரிசூலம் ரயில்வே கேட் பிரச்னை: அதிகாரிகள் விசாரணை

சென்னை திரிசூலம் ரயில்வே கடவுப்பாதை கேட் பழுதடைந்து 2 மணி நேரம் திறக்கப்படாமல் இருந்தது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தினா். திரிசூலம் ரயில்வே கடவுப்பாதை கேட் சனிக்கிழமை காலை 8 மணிக்க... மேலும் பார்க்க