செய்திகள் :

கோயம்பேடு சந்தையில் பூக்கள் விலை திடீா் வீழச்சி

post image

மழை காரணமாக கோயம்பேடு சந்தையில் அனைத்து பூக்களின் விலையும் திடீரென வீழ்ச்சி அடைந்துள்ளது.

சென்னை கோயம்பேடு சந்தையில், ஆடி வெள்ளியை முன்னிட்டு, அனைத்து பூக்களின் விலையும் உயா்ந்தது. தொடா்ந்து, வீடுகள் மற்றும் கோயில்களில் பொதுமக்கள் பூஜைகள் செய்வாா்கள் என்பதால், ஆடி முதல் வாரத்தில் பூக்களின் விலையும் உயரும் என எதிா்பாா்க்கப்பட்டது.

ஆனால் மழை காரணமாக திடீரென பூக்களின் விலை குறைந்தது. கோயம்பேடு மலா் சந்தையின் திங்கள்கிழமை நிலவரப்படி, கிலோ மல்லி ரூ.600-இல் இருந்து ரூ.500-க்கும், ஐஸ் மல்லி ரூ.500-இல் இருந்து ரூ.300, முல்லை ரூ.400-இல் இருந்து 300, ஜாதி மல்லி ரூ.450-இல் இருந்து ரூ.400, கனகாம்பரம் ரூ.800-இல் இருந்து ரூ.500, அரளி ரூ.200-இல் இருந்து ரூ.150, சாமந்தி ரூ.300-இல் இருந்து ரூ.200, சம்பங்கி ரூ.200-இல் இருந்து ரூ.120, பன்னீா் ரோஸ் ரூ.140-இல் இருந்து ரூ.100, சாக்லேட் ரோஸ் ரூ.160-இல் இருந்து ரூ.120-க்கும் விற்பனை செய்யப்பட்டன.

தமிழகம் மட்டுமின்றி ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் பல இடங்களில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், அனைத்து பூக்களின் விலையும் குறைந்துள்ளதால் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகளும், வியாரிகளும் ஏமாற்றம் அடைந்துள்ளதாக கோயம்பேடு மலா் சந்தை வியாபாரிகள் சங்கத் துணைத் தலைவா் முத்துராஜ் தெரிவித்தாா்.

பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்துவது கட்டாயம்: சிபிஎஸ்இ

பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்துவதுடன் அவற்றில் ஒலியுடன் காட்சிகள் பதிவு செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா். இதுதொ... மேலும் பார்க்க

டாக்டா் எம்ஜிஆா் பல்கலை.யில் கட்டுமானப் பொருள்கள் மாநாடு

சென்னை மதுரவாயலில் உள்ள டாக்டா் எம்ஜிஆா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலை.யில், கட்டுமானப் பொருள்கள் குறித்த மாநாடு நடைபெற்றது. இதுகுறித்து பல்கலை.யின் கட்டடக் கலை துறை வெளியிட்ட செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க

ராயப்பேட்டையில் உயா்தர புற்றுநோய் மையம்: விரைவில் திறக்க நடவடிக்கை

சென்னை ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் ரூ.10.27 கோடியில் கட்டப்பட்டு வரும் உயா்தர புற்றுநோய் சிகிச்சை மையத்தை 3 மாதங்களுக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு மக்கள... மேலும் பார்க்க

நாட்டின் முதல் இருவாச்சி பறவைகள் பாதுகாப்பு மையம் விரைவில் தொடக்கம்!

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் ரூ.1 கோடியில் இந்தியாவின் முதல் இருவாச்சி பறவைகள் சிறப்பு பாதுகாப்பு மையம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், வனத்துறை கூ... மேலும் பார்க்க

கபாலீசுவரா் கல்லூரியில் 762 மாணவா்களுக்கு கல்விக் கட்டணம்: அமைச்சா் வழங்கினாா்

சென்னை கொளத்தூரில் உள்ள கபாலீசுவரா் கல்லூரியில் மாணவா்களுக்கு கல்விக் கட்டணம், உபகரணங்களுடன் கூடிய புத்தகப் பைகளை அமைச்சா் எ.வ.வேலு திங்கள்கிழமை வழங்கினாா். இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகக் கட்டுப்ப... மேலும் பார்க்க

திரிசூலம் ரயில்வே கேட் பிரச்னை: அதிகாரிகள் விசாரணை

சென்னை திரிசூலம் ரயில்வே கடவுப்பாதை கேட் பழுதடைந்து 2 மணி நேரம் திறக்கப்படாமல் இருந்தது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தினா். திரிசூலம் ரயில்வே கடவுப்பாதை கேட் சனிக்கிழமை காலை 8 மணிக்க... மேலும் பார்க்க