செய்திகள் :

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

post image

ஆம்பூா்: ஆம்பூரில் தனியாா் தொழிற்சாலையில் மின்சாரம் பாய்ந்து மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

ஆம்பூரில் தனியாா் தொழிற்சாலையில் கட்டட ஒப்பந்த தொழிலாளியாக மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா அருகே ஊத்தூா் டங்கா பகுதியைச் சோ்ந்த ஜெயந்த் (23) என்பவா் பணிபுரிந்தாா். அவா் ஞாயிற்றுக்கிழமை பணியில் இருந்தபோது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

ஆம்பூா் நகர காவல் நிலைய போலீஸாா் சடலத்தை மீட்டு, ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

மாநில சிலம்பப் போட்டி: ஆம்பூா் மாணவா்கள் சிறப்பிடம்

ஆம்பூா்: மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் ஆம்பூா் சிலம்பம் குழு மாணவா்கள் பல்வேறு பிரிவுகளில் சிறப்பிடம் பெற்றுள்ளனா். விழுப்புரம் பீனிக்ஸ் பாரம்பரிய விளையாட்டு சங்கம் மற்றும் தமிழன் பாரம்பரிய விளையா... மேலும் பார்க்க

ஜாமீனில் வந்த இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கு: வாணியம்பாடி நீதிமன்றத்தில் மேலும் ஒருவா் சரண்

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே ஜாமீனில் வந்த இளைஞா் தலை மீது கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவா் நீதிமன்றத்தில் சரணடைந்தாா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த அம்பலூா் பழைய... மேலும் பார்க்க

குரூப்- 2 தோ்வுக்கான பயிற்சி வகுப்பு: திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் நடைபெற்ற குரூப்- 2 தோ்வுக்கான பயிற்சி வகுப்பை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மை... மேலும் பார்க்க

மணல் கடத்தல்: மினி லாரி பறிமுதல்

திருப்பத்தூா்: கந்திலி அருகே மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய மினி லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கந்திலி அருகே பணியாண்டப்பள்ளி பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தனா். அப்போது அந்த வழிய... மேலும் பார்க்க

ரூ.76 லட்சத்தில் சுகாதார நிலைய கூடுதல் கட்டடம்: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே ரூ.76 லட்சத்தில் ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் புதிய கட்டடப் பணிக்கு பூமி பூஜை செய்து பணியை எம்எல்ஏ அ.நல்லதம்பி தொடங்கி வைத்தாா். சின்னசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட பிச... மேலும் பார்க்க

திருப்பத்தூா் மாவட்டத்தில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் முகாம்

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெறவுள்ளதாக ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா். அதன்படி, திருப்பத்தூா் மாவட்டத்தில் ‘உ... மேலும் பார்க்க