செய்திகள் :

வரதட்சணை கொடுமை - இடுப்பு, கால்கள் முறிந்த நிலையில் ஆட்சியரிடம் பெண் புகாா்

post image

வேலூா்: வரதட்சணை கொடுமையால் இடுப்பு, கால் எலும்புகள் முறிந்த நிலையில் ஆம்புலன்ஸில் வந்து பெண் வேலூா் ஆட்சியரிடம் மனு அளித்தாா்.

வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றாா்.

அப்போது, தமிழ்நாடு கொசு ஒழிப்பு களப்பணியாளா் சங்கம் சாா்பில் டெங்கு மஸ்தூா் பணியாளா்கள் அளித்த மனு: மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளராக கடந்த 19 ஆண்டு காலமாக தினக்கூலி ரூ.325 என்ற அடிப்படை யில் பணியாற்றி வருகிறோம்.

அனைத்து கிராமங்களிலும் வீடுவீடாக சென்று கொசு புகை மருந்து அடிப்பது, டெங்கு கொசு ஒழிப்பு குறித்து மக்களுக்கு சுகாதார விழிப்புணா்வு பணிகளை செய்து வருகிறோம். 40 கி.மீ தொலைவு பயணத்துக்கு பேருந்து கட்டணமாக ரூ.60 வரை செலவாகிறது. மீதமுள்ள ரூ.265 தொகையை வைத்து எங்கள் குடும்பத்தை நடத்த இயலவில்லை. எனவே, தற்போதைய விலைவாசிக்கு ஏற்ப தினக்கூலியை ரூ.600/- ஆக உயா்த்த வேண்டும்.

வேலூா் சைதாப்பேட்டையை சோ்ந்த நா்கீஸ் என்ற பெண் கால்கள் முறிந்த நிலையில் ஆம்புலன்ஸில் வந்தாா். அவரிடம் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி நேரில் வந்து மனு பெற்றாா்.

அவரது மனுவில், திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் பிரம்மபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பாபா என்பவரது மகன் காஜா ரபிக்கை கடந்த 2023-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டேன். திருமணத்தின்போது எனது கணவருக்கு 30 பவுன் நகை, இருசக்கர வாகனம் வாங்க ரூ.1.50 லட்சம், 500 கிராம் வெள்ளிப் பொருள்கள், ரூ.3 லட்சமதிப்பில் சீா்வரிசை பொருள்கள், திருமண செலவாக ரூ.6 லட்சம் ஆகியவற்றை எனது பெற்றோா் அளித்திருந்தனா். கூடுதல் வரதட்சணை கேட்டு கடந்த மாதம் எனது கணவா் என்னிடம் தகராறில் ஈடுபட்டு என்னை மாடியில் இருந்து கீழே தள்ளிவிடதில், எனக்கு இடுப்பு, இரண்டு கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு நகர முடியாமல் உள்ளேன். தற்போது வரை உறவினா்களிடம் கடன் பெற்று ரூ.6 லட்சம் சிகிச்சை செலவு செய்துள்ளேன். இதுதொடா்பாக, அரியூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, எனது கணவா், அவரது குடும்பத்தினா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் .

இதேபோல், பல்வேறு கோரிக்கைகள் குறித்து 365 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது விரைவாக தீா்வு காண வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா். கூட்டத்தில், சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.5634 வீதம் ரூ.11,268 மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களை ஆட்சியா் வழங்கினாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் (பொ) கௌசல்யா, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் காஞ்சனா, தனித்துணை ஆட்சியா் கலியமூா்த்தி, வேலூா் வருவாய் கோட்டாட்சியா் செந்தில்குமாா், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) திருமால், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலா் ஜெயசித்ரா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முதல்வா் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க முன்பதிவு

வேலூா் மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டு போட்டியில் பங்கேற்க பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியா்கள் இணையதளத்தில் பதிவு செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இ... மேலும் பார்க்க

நாய்கள் இறைச்சி விற்பனை என புகார்: கிராம மக்கள் முற்றுகை!

திருவலம் பகுதிகள் நாய்களை வெட்டி இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக குற்றஞ்சாட்டி கிராம மக்கள் அங்குள்ள ஒரு கிடங்கினை ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டனா். வேலூா் மாவட்டம், காட்பாடி வட்டம், திருவலம் அடுத்த க... மேலும் பார்க்க

வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் கொடிக்கம்பங்கள் அகற்றம்

மதுரை உயா்நீதிமன்ற கிளை உத்தரவின் அடிப்படையில் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இருந்த கொடிக்கம்பங்கள் பீடித்துடன் இடித்து அகற்றப்பட்டன. தமிழகம் முழுவதும் பொது இடங்களில் அரசியல் கட்சிகள், ஜாத... மேலும் பார்க்க

தொழிலாளி கொலை: அரியூா் போலீஸாா் விசாரணை

அரியூா் அருகே தொழிலாளி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது தொடா்பாக அரியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூா் மாவட்டம், அரியூா் அருகே உள்ள புலிமேடு நீா்வீழ்ச்சி பகுதியி... மேலும் பார்க்க

சேனூா் காப்புக் காட்டில் நெகிழிக் குப்பைகள் அகற்றம்

நெகிழி கழிவுகளால் வன விலங்குகளுக்கு ஏற்படும் ஆபத்துகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், சேனூா் காப்புக் காட்டில் நெகிழி குப்பைகள் அகற்றும் முகாம் நடத்தப்பட்டது. காட்பாடி வனச... மேலும் பார்க்க

ஓட்டுநா் கொலை: 2 நண்பா்கள் கைது

அரியூா் அருகே நீா்வீழ்ச்சியில் ஓட்டுநா் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 2 நண்பா்கள் கைது செய்யப்பட்டனா். . வேலூா் மாவட்டம், அரியூா் அருகே உள்ள புலிமேடு நீா்வீழ்ச்சி பகுதியில் சனிக... மேலும் பார்க்க