செய்திகள் :

அச்சுதானந்தன் மறைவு: தலைவர்கள் இரங்கல்

post image

கேரள முன்னாள் முதல்வரும் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான அச்சுதானந்தன் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளதாவது,

கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் மறைந்த செய்தி வருத்தமளிக்கிறது. இவர், மக்கள் சேவைக்காகவும் கேரளத்தின் வளர்ச்சிக்காகவும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். நாங்கள் இருவரும் மாநில முதல்வர்களாக இருந்தபோது எங்களுக்கிடையே நடந்த உரையாடலை நினைவுகூர்கிறேன். இந்த சோகமான நேரத்தில் அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் ஆதரவாளர்களுக்கும் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.

கேரள முன்னாள் முதல்வரும் மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான அச்சுதானந்தன் (வயது 101) வயது மூப்பு காரணமாக திங்கள்கிழமை (ஜூலை 21) காலமானார்.

ஏற்கெனவே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு கடந்த ஜூன் 23 ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, திருவனந்தபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் ஒரு மாதமாக வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்ததது.

இந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி பிற்பகல் 3.20 மணிக்கு அச்சுதானந்தன் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்!

Achuthanandans passed away Prime Minister narendra modi condoles

பதவிக்காலம் முடிவதற்குள் குடியரசு துணைத் தலைவர் ராஜிநாமா: அடுத்து என்ன நடக்கும்?

குடியரசு துணைத் தலைவர் பதவி வகித்த ஜகதீப் தன்கர் பதவிக்காலம் முடிவதற்குள் ராஜிநாமா செய்துள்ளார்.‘குடியரசு துணைத் தலைவர்' என்னும் இந்திய அரசமைப்பின் இரண்டாவது பெரிய பதவியிலிருக்கும் ஒருவர் தமது பதவிக்க... மேலும் பார்க்க

‘ஏழைகளின் போராளி அச்சுதானந்தன்' - ராகுல் காந்தி இரங்கல்!

கேரள முன்னாள் முதல்வரும் மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான வி. எஸ். அச்சுதானந்தன் மறைவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.ராகுல் காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், ... மேலும் பார்க்க

போர் விமான விபத்து: வங்கதேசத்துக்கு உதவத் தயார் - பிரதமர் மோடி

வங்க தேசத்தில் விமானப் படைக்குச் சொந்தமான போர் விமானம் விபத்துக்குள்ளான விவகாரத்தில் சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பயிற்சியில் ஈடுபட்ட... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் ராஜிநாமா!

குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார். மருத்துவ காரணங்களுக்காக பதவியை ராஜிநாமா செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பார்க்க

முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவு: கேரளத்தில் நாளை பொது விடுமுறை!

முன்னாள் முதல்வர் வி. எஸ். அச்சுதானந்தன் மறைவையொட்டி, கேரளத்தில் 3 நாள்களுக்கு அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படுகிறது. திருவனந்தபுரத்திலுள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வி. எஸ். அச்சுதானந்த... மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வர்மாவை நீக்கக் கோரி மாநிலங்களவை உறுப்பினர்கள் நோட்டீஸ்!

நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்யக் கோரி மாநிலங்களவை உறுப்பினர்கள் நோட்டீஸ் வழங்கியுள்ளதாக அவையின் தலைவர் ஜகதீப் தன்கர் இன்று (ஜூலை 21) தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் உரிய நடவடி... மேலும் பார்க்க