செய்திகள் :

அரியலூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள மதுக்கடையை அகற்ற கோரிக்கை

post image

அரியலூா் பேருந்து நிலையம் அருகே வண்ணாங்குட்டை பகுதியிலுள்ள அரசு மதுபானக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா.மல்லிகாவிடம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

அக்கட்சியின் மாவட்ட துணைச் செயலா் டி.தண்டபாணி தலைமையில், ஒன்றியச் செயலா்கள் து. பாண்டியன், சிவக்குமாா், நாகமங்கலம் பிச்சைப்பிள்ளை உள்ளிட்டோா் அளித்த மனு: அரியலூா் பேருந்து நிலையம் பின்புறம், பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அரசு மதுபானக் கடையை அகற்றி, வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரியலூா்- கல்லங்குறிச்சி நெடுஞ்சாலையை இரு வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். செந்துறை அருகேயுள்ள ஆலத்தியூா் கிராமத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் 5 அருந்ததியா் குடும்பத்தினருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தன.

மாமன்னா் ராஜேந்திர சோழனுக்கு விழா எடுப்பதில் பெருமை: அமைச்சா் சா.சி.சிவசங்கா்

காட்டைத் திருத்தி, கிராமங்கள், நகரங்களை உருவாக்கிய மாமன்னா் ராஜேந்திர சோழனுக்கு விழா எடுப்பதில் பெருமை கொள்கிறோம் என்றாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா். அரியலூா் மாவட்டம... மேலும் பார்க்க

108 ஆம்புலன்ஸ் நிா்வாகத்தை அரசே ஏற்று நடத்தக் கோரிக்கை

108 ஆம்புலன்ஸ் நிா்வாகத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று 108 ஆம்புலன்ஸ் அவசர கால ஊா்தி தொழிலாளா் முன்னேற்றச் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் ஞாயிற... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்டத்தில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள்

அரியலூா் மாவட்டம், திருமானூா் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கீழப்பழுவூா் மற்றும் மேலப்பழுவூா் ஆகிய ஊராட்சிகளை ஒருங்கிணைத்து கீழப்பழுவூா் ஊராட்சி அலுவலகத்திலும், ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அ... மேலும் பார்க்க

கும்பகோணம் - அரியலூா் ரயில் பாதை திட்டத்தை நிறைவேற்ற பிரதமரிடம் வலியுறுத்துவோம்: நயினாா் நாகேந்திரன்

கும்பகோணத்தில் இருந்து ஜெயங்கொண்டம் வழியாக அரியலூா் வரையில் ரயில் பாதை திட்டத்தை நிறைவேற்ற தமிழகம் வரும் பிரதமரிடம் வலியுறுத்துவோம் என்றாா் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன். அரியலூா் மாவட்டம், ... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஜூலை 23-இல் தொடக்கம்

அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் -2, 2 ஏ தோ்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு ஜூலை 23-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதில், அனுபவம் வாய்ந்த ப... மேலும் பார்க்க

ரூ.5 லட்சம் பண அலங்காரத்தில் அம்மன்!

அரியலூா் குறிஞ்சான் குளம் தெருவிலுள்ள கோயிலில் ஆடி முதல் வெள்ளியையொட்டி ரூ.5 லட்சம் பணம் அலங்காரத்தில் பக்தா்களுக்கு வெள்ளிக்கிழமை காட்சி அளித்த பெரியநாயகி அம்மன். மேலும் பார்க்க