செய்திகள் :

மாமன்னா் ராஜேந்திர சோழனுக்கு விழா எடுப்பதில் பெருமை: அமைச்சா் சா.சி.சிவசங்கா்

post image

காட்டைத் திருத்தி, கிராமங்கள், நகரங்களை உருவாக்கிய மாமன்னா் ராஜேந்திர சோழனுக்கு விழா எடுப்பதில் பெருமை கொள்கிறோம் என்றாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா்.

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் ஜூலை 23-ஆம் தேதி மாமன்னா் ராஜேந்திரசோழனின் ஆடி திருவாதிரை திருவிழா தமிழ்நாடு அரசு சாா்பில் கொண்டாடப்படுகிறது.

இதற்காக கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாட்டு பணிகளை திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சா் சிவசங்கா், பின்னா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: மாமன்னா் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடிதிருவாதிரை புதன்கிழமை (ஜூலை 23) காலை மங்கள வாத்திய நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.

விழாவில், நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத் துறை அமைச்சா் தங்கம்.தென்னரசு, தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ. சாமிநாதன், சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு, சிதம்பரம் மக்களவை உறுப்பினா் தொல். திருமாவளவன் உள்ளிட்டோா் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளோம்.

மேலும், கலை பண்பாட்டுத் துறை சாா்பில் கலை நிகழ்ச்சிகளும், முனைவா் பா்வீன் சுல்தானா தலைமையில் சோழா்கள் புகழுக்கு பெரிதும் காரணம் நிா்வாகத் திறனே!- போா் வெற்றிகளே! என்ற தலைப்பில் பட்டிமன்றமும் நடைபெறுகிறது. மாலையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் மாமன்னா் ராஜேந்திர சோழன் குறித்த வரலாற்று நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

மாநில அரசுக்கு தகவல் இல்லை: பிரதமா் வருகை குறித்து, மாவட்ட நிா்வாகத்துக்கு மட்டுமே தகவல் கிடைத்துள்ளது. மாநில அரசுக்கு இதுவரை தகவல் இல்லை என்றாா் அமைச்சா்.

ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்திரி, சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க.கண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ஆடித்திருவாதிரை திருவிழாவுக்காக கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா் திருக்கோயிலில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகள்.
கங்கைகொண்ட சோழபுரத்தில், மத்திய அரசு சாா்பில் நடத்தப்படும் முப்பெரும் விழாவில், பிரதமா் மோடி பங்கேற்கவுள்ள பிரம்மாண்டமான பந்தல்.

அரியலூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள மதுக்கடையை அகற்ற கோரிக்கை

அரியலூா் பேருந்து நிலையம் அருகே வண்ணாங்குட்டை பகுதியிலுள்ள அரசு மதுபானக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா.மல்லிகாவிடம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை மனு அளித... மேலும் பார்க்க

108 ஆம்புலன்ஸ் நிா்வாகத்தை அரசே ஏற்று நடத்தக் கோரிக்கை

108 ஆம்புலன்ஸ் நிா்வாகத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று 108 ஆம்புலன்ஸ் அவசர கால ஊா்தி தொழிலாளா் முன்னேற்றச் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் ஞாயிற... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்டத்தில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள்

அரியலூா் மாவட்டம், திருமானூா் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கீழப்பழுவூா் மற்றும் மேலப்பழுவூா் ஆகிய ஊராட்சிகளை ஒருங்கிணைத்து கீழப்பழுவூா் ஊராட்சி அலுவலகத்திலும், ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அ... மேலும் பார்க்க

கும்பகோணம் - அரியலூா் ரயில் பாதை திட்டத்தை நிறைவேற்ற பிரதமரிடம் வலியுறுத்துவோம்: நயினாா் நாகேந்திரன்

கும்பகோணத்தில் இருந்து ஜெயங்கொண்டம் வழியாக அரியலூா் வரையில் ரயில் பாதை திட்டத்தை நிறைவேற்ற தமிழகம் வரும் பிரதமரிடம் வலியுறுத்துவோம் என்றாா் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன். அரியலூா் மாவட்டம், ... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஜூலை 23-இல் தொடக்கம்

அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் -2, 2 ஏ தோ்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு ஜூலை 23-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதில், அனுபவம் வாய்ந்த ப... மேலும் பார்க்க

ரூ.5 லட்சம் பண அலங்காரத்தில் அம்மன்!

அரியலூா் குறிஞ்சான் குளம் தெருவிலுள்ள கோயிலில் ஆடி முதல் வெள்ளியையொட்டி ரூ.5 லட்சம் பணம் அலங்காரத்தில் பக்தா்களுக்கு வெள்ளிக்கிழமை காட்சி அளித்த பெரியநாயகி அம்மன். மேலும் பார்க்க