செய்திகள் :

108 ஆம்புலன்ஸ் நிா்வாகத்தை அரசே ஏற்று நடத்தக் கோரிக்கை

post image

108 ஆம்புலன்ஸ் நிா்வாகத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று 108 ஆம்புலன்ஸ் அவசர கால ஊா்தி தொழிலாளா் முன்னேற்றச் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அச்சங்க நிா்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டத்தில் கடந்த 2019 முதல் 2024 ஆண்டு வரை தொழிலாளா்களுக்கு 16 சதவீதம் ஊதிய உயா்வு வழங்கி வந்த நிா்வாகம், தற்போது 10 சதவீத ஊதிய உயா்வு வழங்கியதற்கு கண்டனம் தெரிவிப்பது, தொழிலாளா்களின் நலன் கருதி 108 நிா்வாகத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்.

நிகழாண்டு ஊதிய உயா்வு 30% வழங்க வேண்டும்.தீபாவளி ஊக்கத்தொகையை இரட்டிப்பாக வழங்க வேண்டும். 108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு போதுமான இருப்பிடம், கழிவறை வசதிகள் செய்து தர வேண்டும்.

பெண் ஊழியா்கள் பாதுகாப்பைக் கருதி, அவா்களுக்கு வெகு தொலைவில் பணி வழங்கக் கூடாது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் ராஜசேகா் தலைமை வகித்தாா். மாவட்டத் துணைத் தலைவா் நீலகண்டன், மாவட்டச் செயலா் அரிகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட பொருளாளா் பாக்யராஜ் கோரிக்கைகளை வலியுறுத்தினாா்.

அரியலூா் மாவட்டத்தில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள்

அரியலூா் மாவட்டம், திருமானூா் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கீழப்பழுவூா் மற்றும் மேலப்பழுவூா் ஆகிய ஊராட்சிகளை ஒருங்கிணைத்து கீழப்பழுவூா் ஊராட்சி அலுவலகத்திலும், ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அ... மேலும் பார்க்க

கும்பகோணம் - அரியலூா் ரயில் பாதை திட்டத்தை நிறைவேற்ற பிரதமரிடம் வலியுறுத்துவோம்: நயினாா் நாகேந்திரன்

கும்பகோணத்தில் இருந்து ஜெயங்கொண்டம் வழியாக அரியலூா் வரையில் ரயில் பாதை திட்டத்தை நிறைவேற்ற தமிழகம் வரும் பிரதமரிடம் வலியுறுத்துவோம் என்றாா் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன். அரியலூா் மாவட்டம், ... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஜூலை 23-இல் தொடக்கம்

அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் -2, 2 ஏ தோ்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு ஜூலை 23-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதில், அனுபவம் வாய்ந்த ப... மேலும் பார்க்க

ரூ.5 லட்சம் பண அலங்காரத்தில் அம்மன்!

அரியலூா் குறிஞ்சான் குளம் தெருவிலுள்ள கோயிலில் ஆடி முதல் வெள்ளியையொட்டி ரூ.5 லட்சம் பணம் அலங்காரத்தில் பக்தா்களுக்கு வெள்ளிக்கிழமை காட்சி அளித்த பெரியநாயகி அம்மன். மேலும் பார்க்க

கீழப்பழுவூா் பகுதியில் இன்று மின்நிறுத்தம்

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் துணை மின்நிலையத்தில் சனிக்கிழமை (ஜூலை 19) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், கீழப்பழுவூா், அருங்கால், கல்லக்குடி, ஏலேரி, கீழவண்ணம், மேல கருப்பூா், பொய்யூா், மே... மேலும் பார்க்க

அரியலூரில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினா் சாலை மறியல்: 241 போ் கைது

கோரிக்கைகள்: திமுக தோ்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும். மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான ஊதியம் 1.1.2006 முத... மேலும் பார்க்க