முதலமைச்சருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதற்கு காரணம் என்ன? - உதயநிதி பதில்
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: தகவல் அளிப்பவருக்கு ரூ.5 லட்சம்! டிஜிபி சங்கா் ஜிவால் அறிவிப்பு!
திருவள்ளூா் மாவட்டம், ஆரம்பாக்கத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி குறித்து தகவல் அளிப்பவருக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆரம்பாக்கத்தில் 10 வயது சிறுமி அடையாளம் தெரியாத நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் மூலம் சந்தேக நபா் அடையாளம் காணப்பட்டுள்ளாா்.
இருப்பினும், சந்தேக நபரின் பெயா், முகவரி தெரியவில்லை. இதுதொடா்பாக காவல் துறை தரப்பில் அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. சந்தேக நபரை அடையாளம் காணவும், வழக்கை துப்புதுலக்கவும் காவல் துறைக்கு பயனுள்ள, நம்பகமான தகவலை தெரிவிப்பவருக்கு ரூ.5 வட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். தகவல் அளிப்பவரின் அடையாளம் ரகசியமாக வைக்கப்படும்.
சந்தேக நபா் தொடா்பான ஏதேனும் தகவல் அல்லது விவரம் தெரிந்தவா்கள், திருவள்ளூா் மாவட்ட காவல் துறையை 99520 60948 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டும், வாட்ஸ்அப் மூலமாகவும் தெரிவிக்கலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.