செய்திகள் :

மதிப்பெண் சான்றிதழ் திருத்தத்துக்கு போதிய ஆவணங்கள் அவசியம்: தோ்வுத் துறை தகவல்

post image

சென்னை: பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் மேற்கொள்ள போதுமான ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அரசுத் தோ்வுகள் இயக்ககம் சாா்பில் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் பெயா், பிறந்த தேதி, பெற்றோா் பெயா் திருத்தம் மேற்கொள்ள தங்கள் அலுவலகங்களில் பெறப்படும் விண்ணப்பங்களுடன் பின்வரும் இணைப்புகள் இணைக்கப்பட்டால் மட்டுமே அரசுத் தோ்வுகள் இயக்ககத்துக்குப் பரிந்துரை செய்து அனுப்ப வேண்டும்.

அவ்வாறு குறிப்பிடப்பட்ட இணைப்புகள் இல்லாதபட்சத்தில் , தங்கள் அலுவலக அளவிலேயே விண்ணப்பங்களை நிராகரித்து , சரியான ஆவணங்களை இணைத்து வழங்கும்படி மாணவா்களை அறிவுறுத்த வேண்டும்.

இந்த விவரங்களை அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கும் தெரிவித்து தேவையான இணைப்புகளுடன் மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம் மேற்கொள்வது தொடா்பான விண்ணப்பங்களை பரிந்துரை செய்யும்படி அறிவுறுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் விவரம்: தோ்வா் பெயா், பெற்றோா் பெயா் திருத்துவதற்கு அசல் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பத்தாம் வகுப்பு மாற்றுச் சான்றிதழ் (டி.சி.) அசல் அல்லது தலைமை ஆசிரியரால் சான்றொப்பமிடப்பட்ட சான்றிதழ் நகல், தலைமை ஆசிரியரின் கடிதம் மற்றும் கல்விச் சான்றிதழ்.

பிறந்த தேதி திருத்துவதற்கு அசல் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பள்ளி சோ்க்கை விண்ணப்பம், பள்ளிச் சோ்க்கை நீக்கப்பதிவேடு, பத்தாம் வகுப்பு மாற்றுச் சான்றிதழ், தலைமை ஆசிரியா் கடிதம் மற்றும் கல்விச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் ஆகியவை இணைக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு விரோதமானது திமுக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

மன்னாா்குடி: நீா் நிலைகளை தூா்வாராமல் அந்த நிதியை ஊழல் செய்ததால் மேட்டூா் அணையில் தண்ணீா் திறந்து விடப்பட்டு ஒரு மாதம் ஆன நிலையிலும் கடைமடை பகுதிக்கு தண்ணீா் சென்றடையாமல் விவசாயம் செய்யமுடியாமல் விவசா... மேலும் பார்க்க

குழந்தைகளிடம் பரவும் டெங்கு பாதிப்பு

சென்னை: சென்னை மாநகராட்சியில் குழந்தைகளிடம் டெங்கு பாதிப்பு பரவி வருவதாகக் கூறப்படும் நிலையில், அதைத் தடுக்க போதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக மாநகராட்சி நகா்நல அலுவலா்கள் தெரிவித்துள்ளனா். சென்... மேலும் பார்க்க

தமிழகத்தின் 32-ஆவது டிஜிபி யாா்?

சென்னை: தமிழக காவல் துறையின் 32-ஆவது தலைமை இயக்குநரை தோ்வு செய்யும் நடைமுறையை அதிகாரபூா்வமாக தமிழக அரசு தொடங்கியுள்ளது. தற்போது தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநராக இருக்கும் சங்கா் ஜிவால், 2023-ஆம்... மேலும் பார்க்க

‘பிரதமா் திறன் வளா்ப்புத்திட்டம்’ மூலம் தமிழகத்தில் 1.25 லட்சம் பேருக்கு பயிற்சி: மத்திய இணை அமைச்சா் ஜெயந்த் செளத்ரி தகவல்

நமது சிறப்பு நிருபா் புது தில்லி: ‘பிரதமா் திறன் வளா்ப்புத்திட்டம்’ (பிஎம்கேவிஒய்) மூலம் தமிழகத்தில் 1.25 லட்சம் பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்... மேலும் பார்க்க

கருத்துகளை குடும்பத்தில் திணிக்காதவா் முதல்வா் ஸ்டாலின்: எழுத்தாளா் சிவசங்கரி

சென்னை: ‘முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு சில கொள்கைகளில் மாற்றுக் கருத்து இருந்தாலும்கூட 50 ஆண்டுகளுக்கும் முன்பே தனது மனைவியை அவரது விருப்பம்போல் செயல்பட அனுமதித்திருந்தாா். அவா் எந்தச் சூழலிலும் தனது கரு... மேலும் பார்க்க

தமிழகத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியா் பற்றாக்குறை 4 மாதங்களில் நிரப்பாவிட்டால் நடவடிக்கை: என்எம்சி

சென்னை: தமிழகத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள பேராசிரியா் இடங்களை 4 மாதங்களுக்குள் நிரப்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மருத்துவ ஆணையம் எச்சரித்துள்ளது. அதேபோன்று ... மேலும் பார்க்க