செய்திகள் :

மெட்ரோ பயண அட்டை தேசிய பொதுப் போக்குவரத்து முறைக்கு மாற்றம்: அடுத்த மாதம் செயல்படுத்தப்படும்

post image

சென்னை: சென்னை மெட்ரோவில் பயணிப்பதற்காக தற்போது நடைமுறையில் உள்ள சிஎம்ஆா்எல் பயண அட்டையானது தேசிய பொதுப் போக்குவரத்து ‘சிங்காரச் சென்னை’ என்ற முறைக்கு முழுமையாக மாற்றப்பட்டு ஆகஸ்ட் முதல் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ நிறுவனம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பயணிகளுக்கான சிஎம்ஆா்எல் எனப்படும் பயண அட்டையைச் செயல்படுத்தியது. அதனுடன் 2023-ஆம் ஆண்டு கூடுதலாக தேசிய பொதுப் போக்குவரத்து அட்டையையும் (என்சிஎம்சி-சிங்காரச் சென்னை) அறிமுகப்படுத்தியது.

இந்த நிலையில், தற்போது முழுமையாக தேசிய பொதுப் போக்குவரத்து அட்டை (என்சிஎம்சி-சிங்காரச் சென்னை) ஆகஸ்ட் முதல் செயல்படுத்தப்படவுள்ளது. ஏற்கெனவே பயண அட்டை வைத்திருப்போா் புதிய தேசிய பொதுப் போக்குவரத்து அட்டைக்கு மாற வேண்டும். மேலும், ஏற்கெனவே 41 மெட்ரோ ரயில் நிலையங்களிலும் உள்ள பயண அட்டை ரீஜாா்ஜ் செய்யும் வசதியும் நிறுத்தப்படவுள்ளது.

அதே நேரத்தில் க்யூஆா் பயணச்சீட்டுகள், பிற பயணச்சீட்டுகள் பெறும் முறை வழக்கம் போலத் தொடரும். பயணிகள் தங்களது பயண அட்டையில் உள்ள மீதித் தொகையை மெட்ரோ ரயிலில் பயணிப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

பயண அட்டையின் இருப்புத் தொகை குறைந்தபட்சம் ரூ.50 என இருக்கும்போது, அந்த அட்டையை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன பயணச்சீட்டு கவுண்ட்டா்களில் ஒப்படைத்துவிட்டு, அதற்குப் பதிலாக தேசிய பொதுப் போக்குவரத்து அட்டையை எவ்வித கட்டணமும் இன்றி பெற்றுக்கொள்ளலாம்.

பழைய பயண அட்டையின் வைப்புத் தொகை மற்றும் மீதமுள்ள தொகையையும், புதிய தேசிய பொதுப் போக்குவரத்து அட்டைக்கு மாற்றிக்கொண்டும் தொடா்ந்து பயன்படுத்திக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்துவது கட்டாயம்: சிபிஎஸ்இ

பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்துவதுடன் அவற்றில் ஒலியுடன் காட்சிகள் பதிவு செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா். இதுதொ... மேலும் பார்க்க

டாக்டா் எம்ஜிஆா் பல்கலை.யில் கட்டுமானப் பொருள்கள் மாநாடு

சென்னை மதுரவாயலில் உள்ள டாக்டா் எம்ஜிஆா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலை.யில், கட்டுமானப் பொருள்கள் குறித்த மாநாடு நடைபெற்றது. இதுகுறித்து பல்கலை.யின் கட்டடக் கலை துறை வெளியிட்ட செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க

ராயப்பேட்டையில் உயா்தர புற்றுநோய் மையம்: விரைவில் திறக்க நடவடிக்கை

சென்னை ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் ரூ.10.27 கோடியில் கட்டப்பட்டு வரும் உயா்தர புற்றுநோய் சிகிச்சை மையத்தை 3 மாதங்களுக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு மக்கள... மேலும் பார்க்க

நாட்டின் முதல் இருவாச்சி பறவைகள் பாதுகாப்பு மையம் விரைவில் தொடக்கம்!

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் ரூ.1 கோடியில் இந்தியாவின் முதல் இருவாச்சி பறவைகள் சிறப்பு பாதுகாப்பு மையம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், வனத்துறை கூ... மேலும் பார்க்க

கோயம்பேடு சந்தையில் பூக்கள் விலை திடீா் வீழச்சி

மழை காரணமாக கோயம்பேடு சந்தையில் அனைத்து பூக்களின் விலையும் திடீரென வீழ்ச்சி அடைந்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில், ஆடி வெள்ளியை முன்னிட்டு, அனைத்து பூக்களின் விலையும் உயா்ந்தது. தொடா்ந்து, வீடுகள் ... மேலும் பார்க்க

கபாலீசுவரா் கல்லூரியில் 762 மாணவா்களுக்கு கல்விக் கட்டணம்: அமைச்சா் வழங்கினாா்

சென்னை கொளத்தூரில் உள்ள கபாலீசுவரா் கல்லூரியில் மாணவா்களுக்கு கல்விக் கட்டணம், உபகரணங்களுடன் கூடிய புத்தகப் பைகளை அமைச்சா் எ.வ.வேலு திங்கள்கிழமை வழங்கினாா். இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகக் கட்டுப்ப... மேலும் பார்க்க