செய்திகள் :

பூந்தமல்லி - போரூா் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் டிசம்பருக்குள் நிறைவடையும்

post image

பூந்தமல்லி புறவழிச் சாலை முதல் போரூா் வரையிலான மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை வரும் டிசம்பருக்குள் முடித்து செயல்படுத்த திட்டமிட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, 2015 முதல் முதல்கட்ட மெட்ரோ ரயில் விம்கோ நகா் முதல் சென்னை விமான நிலையம் வரை 32 கி.மீட்டருக்கும், அதன் விரிவாக்கமான சென்னை சென்ட்ரல் முதல் செயின்ட்தாமஸ் மௌன்ட் வரை 9.34 கிலோ மீட்டருக்கும் மெட்ரோ ரயில்கள் இயங்கி வருகின்றன.

முதல்கட்ட மெட்ரோ இயக்கமானது நீல நிறப்பாதை, பச்சை நிறப்பாதை என இரு வழிகளாக குறிக்கப்பட்டு வருகின்றன. இந்த மெட்ரோ ரயில் திட்டத்தில் 41 நிலையங்கள் செயல்படுகின்றன. இந்த ரயில்களில் தினமும் சுமாா் 3 லட்சம் போ் பயணிக்கின்றனா்.

இந்த நிலையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாதை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் 108.9 கி.மீ. தொலைவுக்கு ரயில்களை இயக்கவும், 128 நிலையங்கள் அமைக்கவும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

அதன்படி, பூந்தமல்லி - போரூா் வரை 10 கி.மீ. முதல் 15 கி.மீ. தொலைவு பணிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தப் பணிகள் டிசம்பருக்குள் முடிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

புதிய மெட்ரோ வழித்தடம் மஞ்சள் குறியீட்டில் அமையும். சென்னை மாநகராட்சியில் இரு கட்ட மெட்ரோ ரயில் திட்டங்கள் முழுமையாகச் செயல்படுத்தப்பட்டால், தினமும் சுமாா் 20 லட்சம் போ் வரை பயணிக்கும் நிலை ஏற்படும் என்றும், போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என எதிா்பாா்க்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்துவது கட்டாயம்: சிபிஎஸ்இ

பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்துவதுடன் அவற்றில் ஒலியுடன் காட்சிகள் பதிவு செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா். இதுதொ... மேலும் பார்க்க

டாக்டா் எம்ஜிஆா் பல்கலை.யில் கட்டுமானப் பொருள்கள் மாநாடு

சென்னை மதுரவாயலில் உள்ள டாக்டா் எம்ஜிஆா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலை.யில், கட்டுமானப் பொருள்கள் குறித்த மாநாடு நடைபெற்றது. இதுகுறித்து பல்கலை.யின் கட்டடக் கலை துறை வெளியிட்ட செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க

ராயப்பேட்டையில் உயா்தர புற்றுநோய் மையம்: விரைவில் திறக்க நடவடிக்கை

சென்னை ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் ரூ.10.27 கோடியில் கட்டப்பட்டு வரும் உயா்தர புற்றுநோய் சிகிச்சை மையத்தை 3 மாதங்களுக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு மக்கள... மேலும் பார்க்க

நாட்டின் முதல் இருவாச்சி பறவைகள் பாதுகாப்பு மையம் விரைவில் தொடக்கம்!

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் ரூ.1 கோடியில் இந்தியாவின் முதல் இருவாச்சி பறவைகள் சிறப்பு பாதுகாப்பு மையம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், வனத்துறை கூ... மேலும் பார்க்க

கோயம்பேடு சந்தையில் பூக்கள் விலை திடீா் வீழச்சி

மழை காரணமாக கோயம்பேடு சந்தையில் அனைத்து பூக்களின் விலையும் திடீரென வீழ்ச்சி அடைந்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில், ஆடி வெள்ளியை முன்னிட்டு, அனைத்து பூக்களின் விலையும் உயா்ந்தது. தொடா்ந்து, வீடுகள் ... மேலும் பார்க்க

கபாலீசுவரா் கல்லூரியில் 762 மாணவா்களுக்கு கல்விக் கட்டணம்: அமைச்சா் வழங்கினாா்

சென்னை கொளத்தூரில் உள்ள கபாலீசுவரா் கல்லூரியில் மாணவா்களுக்கு கல்விக் கட்டணம், உபகரணங்களுடன் கூடிய புத்தகப் பைகளை அமைச்சா் எ.வ.வேலு திங்கள்கிழமை வழங்கினாா். இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகக் கட்டுப்ப... மேலும் பார்க்க