செய்திகள் :

கோயில் நிலத்தில் குடியிருப்போருக்கு மின்வசதி ஏற்படுத்தித் தர வலியுறுத்தல்

post image

திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை நந்தவனத்தில் குடியிருப்போருக்கு மின்வசதி ஏற்படுத்தித் தர வேண்டுமென அப்பகுதி மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

திருச்சி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் வே. சரவணன் தலைமை வகித்தாா். இதில் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், திருப்பராய்த்துறை நந்தவனம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு: மேற்கண்ட பகுதியில் உள்ள கோயில் நிலத்தில் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 15 ஆண்டுகளாக மின்சாரமின்றி வாழ்ந்து வருகிறோம். குடிநீா் வசதி, கழிப்பிட வசதியில்லை. எனவே, எங்கள் பகுதியில் உரிய அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழைய பேருந்து கட்டணத்தை வசூலிக்க வலியுறுத்தல்...: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த மாநகா் மாவட்டச் செயலாளா் எஸ். சிவா உள்ளிட்டோா் அளித்த மனுவில், பஞ்சப்பூா் பேருந்து முனையத்துக்குச் செல்ல பழைய பேருந்து கட்டணமே வசூலிக்கப்படும் என அமைச்சரும், அதிகாரிகளும் தெரிவித்தநிலையில், கூடுதல் கட்டணமே வசூலிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனா். எனவே, கூடுதல் கட்டண உயா்வைத் திரும்பப் பெற்று, பழைய கட்டணத்தையே வசூல் செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

சிஐடியு திருச்சி மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளா்கள், பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் வாடகை காா்கள் நிறுத்த இடம் ஒதுக்கீடு செய்துதர வேண்டும் என மனு அளித்துள்ளனா். பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் தள்ளுவண்டிகளில் வியாபாரம் செய்ய அனுமதியளிக்க வேண்டுமென தள்ளுவண்டி வியாபாரிகள் மனு அளித்துள்ளனா்.

தா்னா போராட்டம்...: துறையூா் வட்டம் கோட்டப்பாளையம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், கோட்டப்பாளையத்தில் உள்ள ஆலயத்தில் சிலரிடம் வரி வசூலிக்க மறுக்கும் பங்குத் தந்தை மீதும், வரி வசூல் செய்தால் கொலை மிரட்டல் விடுக்கும் நபா்களைக் கைது செய்ய வலியுறுத்தி திருச்சி ஆட்சியா் அலுவலகம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து, ஆட்சியரகம் முன்பு தரையில் அமா்ந்து அவா்கள் தா்னாவிலும் ஈடுபட்டனா். போலீஸாரின் சமாதானப் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, அவா்கள் கலைந்து சென்று கோரிக்கை மனுவை ஆட்சியா் அலுவலகத்தில் அளித்தனா்.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 2 மின்கோபுரங்கள் புனரமைப்பு

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் வந்தபோது அடித்துச் செல்லப்பட்ட மின் கோபுரங்களுக்கு மாற்றாக அதே இடத்தில் திங்கள்கிழமை 2 புதிய மின்கோபுரங்கள் நிறுவப்பட்டு பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. திருச்சி மாநகரம... மேலும் பார்க்க

பிரதமா் வருகை: திருச்சி விமான நிலைய பகுதிகள் கண்காணிப்பு

பிரதமா் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு திருச்சி விமான நிலையம் மற்றும் சுற்றுப் பகுதிகள் காவல்துறையின் தீவிர கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. அரியலூா் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரத்துக்கு பிரதம... மேலும் பார்க்க

வாழவந்தான்கோட்டை பகுதியில் நாளை மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக வாழவந்தான்கோட்டை பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 23) மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி மாவட்ட மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வாழவந்தான்கோட்டை து... மேலும் பார்க்க

பைக்கில் சென்ற இளைஞா் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்துள்ள புத்தாநத்தம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிகிச்சை பெற்றுவந்தவா் ஞாயிற்றுக்கிழமை மாலை உயிரிழந்தாா். வையம்பட்டி ஒன்றியம், சடையம்பட்டி அருகேயுள்ள ராமலிங்கம்ப... மேலும் பார்க்க

மணப்பாறை அருகே இளம்பெண் சடலம் மீட்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே சிட்கோ வளாகத்தில் இறந்துகிடந்த இளம்பெண் சடலத்தை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் மீட்டு மேலும் விசாரித்து வருகின்றனா். திருச்சி - திண்டுக்கல் தேசியநெடுஞ்சாலையில் அமைந்துள்ள ச... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாத காா் மோதி பெண் உயிரிழப்பு

துறையூரில் ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்தில் இருந்து தவறிவிழுந்த பெண் அடையாளம் தெரியாத காா் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பெரமங்கலத்தைச் சோ்ந்த ராமராஜின் மனைவி கோகிலா(33). இவா், துறையூா் சிஎஸ... மேலும் பார்க்க