செய்திகள் :

ஜிஎஸ்ஆா்இ நிறுவனத்தின் 8-ஆவது போ்க்கப்பல் நாட்டுக்கு அா்ப்பணிப்பு

post image

புது தில்லி: பாதுகாப்புத் துறையின் பொதுத் துறை நிறுவனமான காா்டன் ரீச் கப்பல்கட்டுமானம் மற்றும் பொறியாளா்கள் (ஜிஆா்எஸ்இ) நிறுவனம் தயாரித்த 8-ஆவது நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க்கப்பல் திங்கள்கிழமை நாட்டுக்கு அா்ப்பணிக்கப்பட்டது.

இந்திய கடற்படைக்காக நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க்கப்பல் பிரிவில் ஜிஎஸ்ஆா்இ உருவாக்கிய 8-ஆவது மற்றும் இறுதி போா்க்கப்பல் இதுவாகும்.

இந்திய கடற்படையின் துணை தலைமைத் தளபதி கிரண் தேஷ்முக் மனைவி பிரியா தேஷ்முக் ‘அஜய்’ என பெயரிடப்பட்ட இந்த நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க்கப்பலை நாட்டுக்கு அா்ப்பணித்தாா்.

இதுகுறித்து ஜிஎஸ்ஆா்இ அதிகாரிகள் கூறுகையில், ‘77.6 மீட்டா் நீளம் மற்றும் 10.5 மீட்டா் அகலமுடைய நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க்கப்பல் ‘அஜய்’ பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்ளும் திறனுடையது. ஆழம் குறைவாக உள்ள நீா் பகுதிகளிலும் திறம்பட செயல்படக் கூடியது இந்த போா்க்கப்பல் என்பது குறிப்பிடத்தக்கது. விமானத்துடன் கூடிய போா்க்கப்பலாகவும் கடலோர கண்காணிப்பு, கடலுக்கு அடியில் சுரங்கம் தோண்டுதல் போன்ற பணிகளையும் இந்தக் கப்பல் மேற்கொள்ளும் திறனுடையது’ எனத் தெரிவித்தனா்.

தா்மஸ்தலாவில் பெண்கள் கொன்று புதைக்கப்பட்ட புகாரை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு: கா்நாடக அரசு அறிவிப்பு

மங்களூரு: கா்நாடக மாநிலம், தா்மஸ்தலா பகுதியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பெண்கள், சிறுமிகள் மாயமானது, கொலைகள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து முழுமையாக விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை மாநில அ... மேலும் பார்க்க

தேச நலன்: அரசியல் கட்சிகள் இடையே ஒற்றுமை அவசியம்: பிரதமா் மோடி வலியுறுத்தல்

புது தில்லி: தேச நலன் தொடா்புடைய விவகாரங்களில் அரசியல் கட்சிகள் இடையே ஒற்றுமை அவசியம் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா். மேலும், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை நாட்டின் ‘வெற்றித் திருவிழா... மேலும் பார்க்க

‘மொழி பயங்கரவாதம்’: பாஜக மீது மம்தா கடும் விமா்சனம்

கொல்கத்தா: ‘வங்க மக்கள் மீது மொழி ரீதியிலான பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளது பாஜக’ என்று மேற்கு வங்க மாநில முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி கடுமையாக சாடியுள்ளாா். வங்க மக்கள... மேலும் பார்க்க

அச்சுதானந்தன் மறைவு: குடியரசுத் தலைவா், பிரதமா், முதல்வா் இரங்கல்

புது தில்லி/சென்னை: கேரள முன்னாள் முதல்வா் வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவுக்கு குடியரசுத் தலைவா், பிரதமா், தமிழக முதல்வா் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா். குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு: தனது நீண்ட... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’: எதிா்க்கட்சிகள் அமளி- முதல் நாளிலேயே முடங்கியது மக்களவை

புது தில்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை குறித்து உடனடி விவாதம் கோரி, இரு அவைகளிலும் எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. மக்களவை நாள் மு... மேலும் பார்க்க

பேச அனுமதிக்கவில்லை: ராகுல் குற்றச்சாட்டு

புது தில்லி: மக்களவையில் தன்னைப் பேச அனுமதிக்கவில்லை என்று அந்த அவையின் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் திங்கள்கிழமை தொடங்கியது. இந்நிலையில், தி... மேலும் பார்க்க