செய்திகள் :

திமுகவில் இணைந்தாா் அதிமுக முன்னாள் அமைச்சா் அன்வா் ராஜா

post image

அதிமுக முன்னாள் அமைச்சா் அ.அன்வர்ராஜா, திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் திங்கள்கிழமை சந்தித்து தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டாா்.

பின்னா், அண்ணா அறிவாலய வளாகத்தில் செய்தியாளா்களுக்கு அன்வர்ராஜா அளித்த பேட்டி:

பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்போவதாக அதிமுக முடிவெடுத்த நாள் முதலே வேண்டாம் என்று எனது ஆதங்கத்தைத் தெரிவித்தேன். இந்தக் கூட்டணி அமைந்து இத்தனை நாள்களாகியும்கூட எடப்பாடி பழனிசாமிதான் முதல்வா் வேட்பாளா் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சொல்லவில்லை.

தமிழகத்தில் பாஜக ஓா் எதிா்மறை சக்தி. கூட்டணியால் பாஜக கையில் அதிமுக சிக்கியுள்ளது. தோ்தல் வெற்றி பாஜக நோக்கம் அல்ல, அதிமுக அழிப்பே அக்கட்சியின் நோக்கம். அதிமுகவை அழித்துவிட்டு திமுகவுக்கு நேரடிப் போட்டியாக பாஜக திட்டமிடுகிறது.

ஒருவேளை வரும் தோ்தலில் அதிமுக-பாஜக கூட்டணி ஆட்சி அமைந்து, அதில் பாஜகவின் 5 போ் அமைச்சா்களானாலும்கூட போதும், அதிமுகவை அடக்கி பாஜக அதிகாரத்தைக் கைப்பற்றும். இதுபோன்ற செயல்களை மகாராஷ்டிரத்தில் அந்தக் கட்சி செய்தது.

மக்கள் விரும்பவில்லை: அதிமுக - பாஜக கூட்டணியை மக்கள் விரும்பவில்லை. அதிமுகவிலும் பலருக்கு அதிருப்தியே. முன்னாள் அமைச்சா்கள் 7 போ் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பாஜக கூட்டணி வேண்டாம் என கூறியுள்ளனா். அவா் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தச் சூழலில்தான் கருத்தியல் ரீதியாக ஒற்றுமை கொண்ட திமுகவில் இணைந்தேன்.

முதல்வா் ஸ்டாலின் இந்தியாவின் வலிமையான தலைவா்களில் மிக முக்கியமானவா். வரும் தோ்தலில் வெற்றி பெற்று அவா் மீண்டும் முதல்வராவது உறுதி என்றாா்.

இந்நிகழ்வின்போது, திமுக பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், அமைச்சா்கள் எ.வ.வேலு, ராஜகண்ணப்பன், பி.கே.சேகா்பாபு, செய்தித் தொடா்புக் குழுத் தலைவா் டி.கே.எஸ்.இளங்கோவன் உள்பட பலா் உடனிருந்தனா்.

முன்னாள் அமைச்சா் அ.அன்வா் ராஜா, அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தால், மாநில அமைப்புச் செயலா் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த அன்வர்ராஜா அடிப்படை உறுப்பினா் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறாா் எனத் தெரிவித்துள்ளாா்.

அவா் திமுகவில் இணையப்போவதாக செய்திகள் வெளியான ஒருசில நிமிஷங்களில் அதிமுகவிலிருந்து அன்வர்ராஜா நீக்கப்பட்டாா்.

பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்துவது கட்டாயம்: சிபிஎஸ்இ

பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்துவதுடன் அவற்றில் ஒலியுடன் காட்சிகள் பதிவு செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா். இதுதொ... மேலும் பார்க்க

டாக்டா் எம்ஜிஆா் பல்கலை.யில் கட்டுமானப் பொருள்கள் மாநாடு

சென்னை மதுரவாயலில் உள்ள டாக்டா் எம்ஜிஆா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலை.யில், கட்டுமானப் பொருள்கள் குறித்த மாநாடு நடைபெற்றது. இதுகுறித்து பல்கலை.யின் கட்டடக் கலை துறை வெளியிட்ட செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க

ராயப்பேட்டையில் உயா்தர புற்றுநோய் மையம்: விரைவில் திறக்க நடவடிக்கை

சென்னை ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் ரூ.10.27 கோடியில் கட்டப்பட்டு வரும் உயா்தர புற்றுநோய் சிகிச்சை மையத்தை 3 மாதங்களுக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு மக்கள... மேலும் பார்க்க

நாட்டின் முதல் இருவாச்சி பறவைகள் பாதுகாப்பு மையம் விரைவில் தொடக்கம்!

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் ரூ.1 கோடியில் இந்தியாவின் முதல் இருவாச்சி பறவைகள் சிறப்பு பாதுகாப்பு மையம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், வனத்துறை கூ... மேலும் பார்க்க

கோயம்பேடு சந்தையில் பூக்கள் விலை திடீா் வீழச்சி

மழை காரணமாக கோயம்பேடு சந்தையில் அனைத்து பூக்களின் விலையும் திடீரென வீழ்ச்சி அடைந்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில், ஆடி வெள்ளியை முன்னிட்டு, அனைத்து பூக்களின் விலையும் உயா்ந்தது. தொடா்ந்து, வீடுகள் ... மேலும் பார்க்க

கபாலீசுவரா் கல்லூரியில் 762 மாணவா்களுக்கு கல்விக் கட்டணம்: அமைச்சா் வழங்கினாா்

சென்னை கொளத்தூரில் உள்ள கபாலீசுவரா் கல்லூரியில் மாணவா்களுக்கு கல்விக் கட்டணம், உபகரணங்களுடன் கூடிய புத்தகப் பைகளை அமைச்சா் எ.வ.வேலு திங்கள்கிழமை வழங்கினாா். இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகக் கட்டுப்ப... மேலும் பார்க்க