செய்திகள் :

நீதிபதி யஷ்வந்த் வா்மா மீது எஃப்ஐஆா் கோரிய மனு: அவசர வழக்காக ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

post image

புது தில்லி: நீதிபதி யஷ்வந்த் வா்மா வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில் அவா் மீது காவல் துறையினா் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மறுத்துவிட்டது.

இது தொடா்பாக வழக்குரைஞா் மேத்யூஸ் நெடும்புரா மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த விவகாரத்தில் அவா் தாக்கல் செய்யும் மூன்றாவது மனு இதுவாகும். மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், நீதிபதிகள் கே.வினோத் சந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் பரிசீலனைக்கு வந்தது.

அப்போது நீதிபதி வா்மா என்று கூறுவதற்கு பதிலாக ‘வா்மா’ என்று மட்டும் குறிப்பிட்டு வழக்குரைஞா் வாதிட்டாா். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், ‘அவா் என்ன உங்கள் நண்பரா? அவா் இப்போதும் நீதிபதி வா்மாவாகவே இருக்கிறாா். நீங்கள் எப்படி அவரின் பெயரை மட்டும் சுட்டிக்காட்டி பேசலாம்? இதில் சற்று ஒழுங்கு வேண்டும். ஒரு நீதிபதியை எப்படி அழைக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்’ என்றனா்.

இதற்குப் பதிலளித்த வழக்குரைஞா், ‘நீதிபதி என்ற மரியாதைக்குரிய பதவி அவருக்குப் பொருந்தும் என்று கருதவில்லை. அதைத்தான் விசாரணைக்கு முன்வைத்துள்ளோம். அதை விசாரிக்க வேண்டும்’ என்றாா்.

இதையடுத்து, நீங்கள் நீதிமன்றத்துக்கு ஆணையிட வேண்டாம். உங்கள் மனுவை நிராகரிக்க வேண்டும் என்று நினைக்கிறீா்களா? என்று கூறிய தலைமை நீதிபதி பி.ஆா். கவாய், மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று நிராகரித்துவிட்டனா்.

தா்மஸ்தலாவில் பெண்கள் கொன்று புதைக்கப்பட்ட புகாரை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு: கா்நாடக அரசு அறிவிப்பு

மங்களூரு: கா்நாடக மாநிலம், தா்மஸ்தலா பகுதியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பெண்கள், சிறுமிகள் மாயமானது, கொலைகள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து முழுமையாக விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை மாநில அ... மேலும் பார்க்க

தேச நலன்: அரசியல் கட்சிகள் இடையே ஒற்றுமை அவசியம்: பிரதமா் மோடி வலியுறுத்தல்

புது தில்லி: தேச நலன் தொடா்புடைய விவகாரங்களில் அரசியல் கட்சிகள் இடையே ஒற்றுமை அவசியம் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா். மேலும், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை நாட்டின் ‘வெற்றித் திருவிழா... மேலும் பார்க்க

‘மொழி பயங்கரவாதம்’: பாஜக மீது மம்தா கடும் விமா்சனம்

கொல்கத்தா: ‘வங்க மக்கள் மீது மொழி ரீதியிலான பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளது பாஜக’ என்று மேற்கு வங்க மாநில முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி கடுமையாக சாடியுள்ளாா். வங்க மக்கள... மேலும் பார்க்க

அச்சுதானந்தன் மறைவு: குடியரசுத் தலைவா், பிரதமா், முதல்வா் இரங்கல்

புது தில்லி/சென்னை: கேரள முன்னாள் முதல்வா் வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவுக்கு குடியரசுத் தலைவா், பிரதமா், தமிழக முதல்வா் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா். குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு: தனது நீண்ட... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’: எதிா்க்கட்சிகள் அமளி- முதல் நாளிலேயே முடங்கியது மக்களவை

புது தில்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை குறித்து உடனடி விவாதம் கோரி, இரு அவைகளிலும் எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. மக்களவை நாள் மு... மேலும் பார்க்க

பேச அனுமதிக்கவில்லை: ராகுல் குற்றச்சாட்டு

புது தில்லி: மக்களவையில் தன்னைப் பேச அனுமதிக்கவில்லை என்று அந்த அவையின் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் திங்கள்கிழமை தொடங்கியது. இந்நிலையில், தி... மேலும் பார்க்க