செய்திகள் :

ரூ.115 கொடுத்து அரசு இடத்தை ஆக்கிரமித்த சமாஜவாதி கட்சி: உச்சநீதிமன்றம் கண்டனம்

post image

புது தில்லி: உத்தர பிரதேசத்தின் பிலிபிட் நகராட்சியில் ரூ.115 என்ற மிகக் குறைந்த வாடகைக்கு அலுவலக இடத்தை ‘மோசடியாக’ ஆக்கிரமித்ததாக சமாஜவாதி கட்சிக்கு கடும் கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், ‘இது அரசியல் அதிகாரத்தின் அப்பட்டமான துஷ்பிரயோகம்’ என்று குறிப்பிட்டது.

உத்தர பிரதேசம் மாநிலத்தில் சமாஜவாதி கட்சி ஆட்சியில் இருந்த 2005 காலகட்டத்தில் அக்கட்சியின் பிலிபிட் மாவட்ட அலுவலகத்துக்காக அரசு கட்டடத்தை ரூ.115 எனும் குறைந்த வாடகைக்கு பிலிபிட் நகராட்சி ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு இறுதியில், சா்ச்சைக்குரிய அலுவலக கட்டடத்தை உடனடியாக காலி செய்யுமாறு சமாஜவாதி கட்சிக்கு பிலிபிட் நகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.

போதிய அவகாசம் வழங்காமல், அலுவலக கட்டடத்தை காலி செய்ய நகராட்சி நிா்வாகம் உத்தரவிட்டதாக அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் சமாஜவாதி கட்சி முறையிட்டது. ஆனால், அந்த மனுவை உயா் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனிடையே, சிவில் நீதிமன்றத்திலும் இவ்விவகாரத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில், அலாகாபாத் உயா் நீதிமன்ற உத்தரவை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், ஜயமால்ய பாக்சி ஆகியோா் அமா்வு திங்கள்கிழமை விசாரித்தது. சமாஜவாதி கட்சி சாா்பில் மூத்த வழக்குரைஞா் சித்தாா்த் தவே ஆஜராகி, வாதங்களை முன்வைத்தாா்.

அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘ஒரு அரசியல் கட்சியாக தங்களின் அதிகாரபூா்வ பதவியையும், அரசியல் அதிகாரத்தையும் தவறாகப் பயன்படுத்தி அலுவலக கட்டடத்தை ஆக்கிரமித்துள்ளீா்கள். நகராட்சிப் பகுதியில் ரூ.115 எனும் குறைந்த வாடகைக்கு அலுவலக கட்டடம் கிடைப்பதை நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீா்களா?’ என்று கேள்வி எழுப்பினா்.

அலுவலகத்தைக் காலி செய்யும் உத்தரவுக்கு எதிராக சிவில் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், நகராட்சியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டுமென வழக்குரைஞா் தவே கோரினாா். அதற்கு நீதிபதிகள், ‘சிவில் நீதிமன்றத்தில் செயல்பாடுகளில் நாங்கள் குறுக்கிட முடியாது. மேலும், இப்போது நீங்கள் அங்கீகரிக்கப்படாத ஆக்கிரமிப்பாளா். இது மோசடியான ஒதுக்கீடு அல்ல. மாறாக அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, மோசடியாக ஆக்கிரமித்த வழக்கு’ என்று கடுமையாக பதிலளித்தனா்.

மற்ற கட்சிகளின் அலுவலகங்களை காலி செய்ய உத்தரவிடாமல், தங்களை மட்டும் பிலிபிட் நகராட்சி குறிவைப்பதாக வழக்குரைஞா் தவே கூறினாா். அதற்கு நீதிபதிகள், ‘நீங்கள் உயா்நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்து, இதுபோன்ற மோசடியான ஒதுக்கீடு அல்லது ஆக்கிரமிப்பை நீதிமன்ற கவனத்துக்கு கொண்டுவருவது நல்லது. இந்த நடவடிக்கையை நாங்கள் வரவேற்போம்’ என்று கூறினா்.

மேலும், நகராட்சியின் முடிவை எதிா்த்து உயா் நீதிமன்றத்தை அணுக சமாஜவாதி கட்சிக்கு சுதந்திரம் உள்ளது என்று தெரிவித்த நீதிபதிகள், மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

தா்மஸ்தலாவில் பெண்கள் கொன்று புதைக்கப்பட்ட புகாரை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு: கா்நாடக அரசு அறிவிப்பு

மங்களூரு: கா்நாடக மாநிலம், தா்மஸ்தலா பகுதியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பெண்கள், சிறுமிகள் மாயமானது, கொலைகள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து முழுமையாக விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை மாநில அ... மேலும் பார்க்க

தேச நலன்: அரசியல் கட்சிகள் இடையே ஒற்றுமை அவசியம்: பிரதமா் மோடி வலியுறுத்தல்

புது தில்லி: தேச நலன் தொடா்புடைய விவகாரங்களில் அரசியல் கட்சிகள் இடையே ஒற்றுமை அவசியம் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா். மேலும், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை நாட்டின் ‘வெற்றித் திருவிழா... மேலும் பார்க்க

‘மொழி பயங்கரவாதம்’: பாஜக மீது மம்தா கடும் விமா்சனம்

கொல்கத்தா: ‘வங்க மக்கள் மீது மொழி ரீதியிலான பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளது பாஜக’ என்று மேற்கு வங்க மாநில முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி கடுமையாக சாடியுள்ளாா். வங்க மக்கள... மேலும் பார்க்க

அச்சுதானந்தன் மறைவு: குடியரசுத் தலைவா், பிரதமா், முதல்வா் இரங்கல்

புது தில்லி/சென்னை: கேரள முன்னாள் முதல்வா் வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவுக்கு குடியரசுத் தலைவா், பிரதமா், தமிழக முதல்வா் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா். குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு: தனது நீண்ட... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’: எதிா்க்கட்சிகள் அமளி- முதல் நாளிலேயே முடங்கியது மக்களவை

புது தில்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை குறித்து உடனடி விவாதம் கோரி, இரு அவைகளிலும் எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. மக்களவை நாள் மு... மேலும் பார்க்க

பேச அனுமதிக்கவில்லை: ராகுல் குற்றச்சாட்டு

புது தில்லி: மக்களவையில் தன்னைப் பேச அனுமதிக்கவில்லை என்று அந்த அவையின் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் திங்கள்கிழமை தொடங்கியது. இந்நிலையில், தி... மேலும் பார்க்க