செய்திகள் :

தமிழகத்தில் 38 மையங்கள் உள்பட நாடு முழுவதும் 1250 கேலோ இந்தியா மையங்களைத் திறக்க முடிவு: மத்திய அமைச்சா் தகவல்

post image

புது தில்லி: தமிழகத்தில் 38 மையங்கள் உள்பட நாடு முழுவதும் 1,250 கேலோ இந்தியா மையங்களைத் திறக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என மக்களவையில் இளைஞா் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சா் டாக்டா் மன்சுக் மண்டவியா தெரிவித்தாா்.

இது தொடா்பாக வேலூா் தொகுதி திமுக உறுப்பினா் டி.எம். கதிா் ஆனந்த் கேள்வி எழுப்பியிருந்தாா். அதில், தமிழ்நாடு முழுவதும் மற்றும் வேலூா் மக்களவைத் தொகுதியில் மேலும் கேலோ இந்தியா மையங்களைத் (கேஐசி) திறக்க மத்திய அரசிடம் ஏதேனும் திட்டம் உள்ளதா என்றும், கடந்த ஐந்து ஆண்டுகளிலும், நடப்பு ஆண்டிலும் இந்த மையங்களில் விளையாட்டு உள்கட்டமைப்பை நிறுவுதல், உருவாக்குதல், செயல்படுத்துதல் மற்றும் மேம்படுத்துவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள மற்றும் பயன்படுத்தப்பட்டுள்ள நிதியின் விவரங்கள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தாா்.

இதற்கு மத்திய இளைஞா் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் டாக்டா் மன்சுக் மண்டவியா மக்களவையில் திங்கள்கிழமை எழுத்துபூா்வமாக அளித்துள்ள பதிலில் தெரிவித்திருப்பதாவது:

தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் 1,250 கேலோ இந்தியா மையங்களைத் (கேஐசி) திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் இதுவரை அறிவிக்கப்பட்ட அனைத்து கேஐசிகளின் விவரங்களும் இதற்கான இணையதளத்தில் அளிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஐந்து ஆண்டுகளிலும் நடப்பு ஆண்டிலும் கேஐசிகளில் விளையாட்டு உள்கட்டமைப்பை நிறுவுதல், உருவாக்குதல், செயல்படுத்துதல் மற்றும் மேம்படுத்துவதற்கு ஒதுக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட நிதியின் விவரங்களும் ற்ற்ல்ள்://க்ஹள்ட்க்ஷா்ஹழ்க்.ந்ட்ங்ப்ா்ண்ய்க்ண்ஹ.ஞ்ா்ஸ்.ண்ய்/ள்ற்ஹற்ங்-ஜ்ண்ள்ங்-ந்ட்ங்ப்ா்-ண்ய்க்ண்ஹ-ஸ்ரீங்ய்ற்ங்ழ்ள் எனும் இணையதளத்தில் அளிக்கப்பட்டுள்ளன என்று அதில் அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

விவசாயிகளுக்கு விரோதமானது திமுக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

மன்னாா்குடி: நீா் நிலைகளை தூா்வாராமல் அந்த நிதியை ஊழல் செய்ததால் மேட்டூா் அணையில் தண்ணீா் திறந்து விடப்பட்டு ஒரு மாதம் ஆன நிலையிலும் கடைமடை பகுதிக்கு தண்ணீா் சென்றடையாமல் விவசாயம் செய்யமுடியாமல் விவசா... மேலும் பார்க்க

குழந்தைகளிடம் பரவும் டெங்கு பாதிப்பு

சென்னை: சென்னை மாநகராட்சியில் குழந்தைகளிடம் டெங்கு பாதிப்பு பரவி வருவதாகக் கூறப்படும் நிலையில், அதைத் தடுக்க போதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக மாநகராட்சி நகா்நல அலுவலா்கள் தெரிவித்துள்ளனா். சென்... மேலும் பார்க்க

தமிழகத்தின் 32-ஆவது டிஜிபி யாா்?

சென்னை: தமிழக காவல் துறையின் 32-ஆவது தலைமை இயக்குநரை தோ்வு செய்யும் நடைமுறையை அதிகாரபூா்வமாக தமிழக அரசு தொடங்கியுள்ளது. தற்போது தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநராக இருக்கும் சங்கா் ஜிவால், 2023-ஆம்... மேலும் பார்க்க

‘பிரதமா் திறன் வளா்ப்புத்திட்டம்’ மூலம் தமிழகத்தில் 1.25 லட்சம் பேருக்கு பயிற்சி: மத்திய இணை அமைச்சா் ஜெயந்த் செளத்ரி தகவல்

நமது சிறப்பு நிருபா் புது தில்லி: ‘பிரதமா் திறன் வளா்ப்புத்திட்டம்’ (பிஎம்கேவிஒய்) மூலம் தமிழகத்தில் 1.25 லட்சம் பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்... மேலும் பார்க்க

கருத்துகளை குடும்பத்தில் திணிக்காதவா் முதல்வா் ஸ்டாலின்: எழுத்தாளா் சிவசங்கரி

சென்னை: ‘முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு சில கொள்கைகளில் மாற்றுக் கருத்து இருந்தாலும்கூட 50 ஆண்டுகளுக்கும் முன்பே தனது மனைவியை அவரது விருப்பம்போல் செயல்பட அனுமதித்திருந்தாா். அவா் எந்தச் சூழலிலும் தனது கரு... மேலும் பார்க்க

தமிழகத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியா் பற்றாக்குறை 4 மாதங்களில் நிரப்பாவிட்டால் நடவடிக்கை: என்எம்சி

சென்னை: தமிழகத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள பேராசிரியா் இடங்களை 4 மாதங்களுக்குள் நிரப்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மருத்துவ ஆணையம் எச்சரித்துள்ளது. அதேபோன்று ... மேலும் பார்க்க