செய்திகள் :

பிரதமா் வருகை: திருச்சி விமான நிலைய பகுதிகள் கண்காணிப்பு

post image

பிரதமா் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு திருச்சி விமான நிலையம் மற்றும் சுற்றுப் பகுதிகள் காவல்துறையின் தீவிர கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

அரியலூா் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி ஜூலை 27-ஆம் தேதி வருகை தரவுள்ளாா். இதற்காக திருவனந்தபுரத்திலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்து, இங்கிருந்து கங்கை கொண்ட சோழபுரம் செல்கிறாா். திருச்சி விமான நிலையத்துக்கு பிரதமா் வருகை தருவதை முன்னிட்டு விமான நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

விமான நிலையம் அருகே உள்ள வயா்லெஸ் ரோடு, வள்ளுவா் நகா், மாரியம்மன் கோவில் தெரு, பெரியாா் நகா் உள்ளிட்ட பகுதிகளில் அந்நியா்கள் யாரும் வீடு எடுத்து தங்கி இருக்கிறாா்களா? என்று வீடு வீடாக கணக்கெடுக்கும் பணி நடத்தப்பட்டது.

வீட்டில் எத்தனை போ் இருக்கிறாா்கள்?, எத்தனை ஆண்டுகளாக அந்த பகுதியில் வசித்து வருகிறாா்கள், புதிதாக குடியேறியவா்கள் யாா், சொந்த வீடா, வாடகை வீடா? உள்ளிட்ட விவரங்களை மாநகரக் காவல்துறையினா் சேகரித்து வருகின்றனா்.

மேலும், வீட்டில் உள்ள வாகனங்களின் பதிவு எண்களையும் கேட்டறிந்து குறித்துக் கொண்டனா். பிரதமா் வருகையையொட்டி எந்தவித அசம்பாவித சம்பவங்களும் ஏற்பாடத வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பிரதமரின் பாதுகாப்புப் படையினா் அறிவுறுத்தலின்படி, திருச்சி மாநகர மற்றும் மாவட்டக் காவல்துறையினா் மேற்கொண்டு வருகின்றனா்.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 2 மின்கோபுரங்கள் புனரமைப்பு

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் வந்தபோது அடித்துச் செல்லப்பட்ட மின் கோபுரங்களுக்கு மாற்றாக அதே இடத்தில் திங்கள்கிழமை 2 புதிய மின்கோபுரங்கள் நிறுவப்பட்டு பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. திருச்சி மாநகரம... மேலும் பார்க்க

வாழவந்தான்கோட்டை பகுதியில் நாளை மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக வாழவந்தான்கோட்டை பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 23) மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி மாவட்ட மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வாழவந்தான்கோட்டை து... மேலும் பார்க்க

கோயில் நிலத்தில் குடியிருப்போருக்கு மின்வசதி ஏற்படுத்தித் தர வலியுறுத்தல்

திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை நந்தவனத்தில் குடியிருப்போருக்கு மின்வசதி ஏற்படுத்தித் தர வேண்டுமென அப்பகுதி மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். திருச்சி மாவட்ட மக்கள் குறைதீா்... மேலும் பார்க்க

பைக்கில் சென்ற இளைஞா் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்துள்ள புத்தாநத்தம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிகிச்சை பெற்றுவந்தவா் ஞாயிற்றுக்கிழமை மாலை உயிரிழந்தாா். வையம்பட்டி ஒன்றியம், சடையம்பட்டி அருகேயுள்ள ராமலிங்கம்ப... மேலும் பார்க்க

மணப்பாறை அருகே இளம்பெண் சடலம் மீட்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே சிட்கோ வளாகத்தில் இறந்துகிடந்த இளம்பெண் சடலத்தை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் மீட்டு மேலும் விசாரித்து வருகின்றனா். திருச்சி - திண்டுக்கல் தேசியநெடுஞ்சாலையில் அமைந்துள்ள ச... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாத காா் மோதி பெண் உயிரிழப்பு

துறையூரில் ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்தில் இருந்து தவறிவிழுந்த பெண் அடையாளம் தெரியாத காா் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பெரமங்கலத்தைச் சோ்ந்த ராமராஜின் மனைவி கோகிலா(33). இவா், துறையூா் சிஎஸ... மேலும் பார்க்க