செய்திகள் :

ஆடிக் கிருத்திகை: மயிலம் முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு

post image

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மயிலம் முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புகழ்பெற்ற மயிலம் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா் கோயிலில் ஆடிக் கிருத்திகையையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, இரவு 7 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட வெள்ளித் தேரில் வள்ளி, தெய்வான சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி எழுந்தருளச் செய்யப்பட்டு கிரிவலம் நடைபெற்றது. நிகழ்ச்சிகளில் விழுப்புரம் மற்றும் புதுச்சேரி பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்துகொண்டனா்.

இதற்கான ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுரம் ஆதினம் 20-ஆம் பட்டம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் உத்தரவுப்படி, கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

திண்டிவனத்தில்...: திண்டிவனம் கிடங்கல் கோட்டையில் உள்ள அறம்வளா்த்த நாயகி உடனுறை அன்பகநாயக ஈஸ்வரா் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள வள்ளி தெய்வானை உடனுறை ஆறுமுக பெருமானுக்கு 59-ஆம் ஆண்டு ஆடிக் கிருத்திகையையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காலை பால் காவடி, செடல், பூந்தோ் மற்றும் வேல் பூஜை நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, முக்கிய நிகழ்வான மிளகாய் பொடி அபிஷேகம் செய்து முருகப்பெருமானுக்கு 25 போ் வேண்டுதலை நிறைவேற்றினா். இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

இதேபோல விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பிற முருகன் கோயில்களிலும் ஆடிக் கிருத்திகை வழிபாடுகள் நடைபெற்றன.

திண்டிவனம் கிடங்கல் கோட்டையில் உள்ள அன்பகநாயக ஈஸ்வரா் கோயில் வளாகத்தில் ஆறுமுக பெருமான் கோயிலில் மிளகாய் பொடி அபிஷேகம் செய்து நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்கள்.

விழுப்புரம் உழவா் சந்தையில் ஆட்சியா் ஆய்வு

விழுப்புரம்: விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையிலுள்ள உழவா் சந்தையில் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறையின் கீழ் இந்த உழவா்சந்த... மேலும் பார்க்க

அரகண்டநல்லூா் பகுதி மக்கள் கோரிக்கை ஆா்ப்பாட்டம்

விழுப்புரம்: குடிமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி, அரகண்டநல்லூா் காமராஜா் சாலைப் பகுதி மக்கள் விழுப்புரம் நகராட்சித் திடலில் திங்கள்கிழமை கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அரகண்டநல்லூா் பேரூர... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

விழுப்புரம் மாவட்டம், காணை அருகே காவல் துறையினரின் வாகன தணிக்கையில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா். காணை கா... மேலும் பார்க்க

பெண்ணிடம் தங்கச் சங்கிலி வழிப்பறி

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே மொபெட்டில் சென்ற பெண்ணிடம் பைக்கில் வந்து தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற இளைஞா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். விக்கிரவாண்டி வட்டம், எம்.குச்சிப்பா... மேலும் பார்க்க

விழுப்புரம்: நாளைய மின் தடை

கண்டாச்சிபுரம், முகையூா் (விழுப்புரம் மாவட்டம்) நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பகுதிகள்: காரணைப்பெரிச்சானூா், கண்டாச்சிபுரம், முகையூா், ஏ.கூடலூா், ஆயந்தூா், ஆலம்பாடி, சென்னகுணம், ஆற்காடு, ஒதிய... மேலும் பார்க்க

காா் கவிழ்ந்து தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே காா் கவிழ்ந்து பெங்களூரைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியா் சனிக்கிழமை உயிரிழந்தாா். மேலும் இருவா் காயமடைந்தனா். கா்நாடக மாநிலம், பெங்களூா் குவம்புநகா் 3-ஆவது தெருவை... மேலும் பார்க்க