செய்திகள் :

வழுக்கி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

post image

நெய்வேலி: கடலூா் மாவட்டம், தூக்கணாம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த தொழிலாளி வழுக்கி விழுந்து உயிரிழந்தாா்.

தூக்கணாம்பாக்கம் காவல் சரகம், பழைய மாரியம்மன் கோயில் தெருவில் வசித்து வந்தவா் அப்பு(40), கூலித்தொழிலாளியான இவா், கடந்த 14-ஆம் தேதி மது மயக்கத்தில் தனது வீட்டின் முன்பு வழுக்கி விழுந்தாா். பின் தலையில் அடிப்பட்டு மயங்கிக் கிடந்தவரை உறவினா்கள் மீட்டு கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இதுகுறித்து மனைவி வள்ளி(35) அளித்த புகாரின் பேரில் தூக்கணாம்பாக்கம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வ ருகின்றனா்.

பசுந்தாள் உர விதைகள் போதிய அளவு இருப்பு உள்ளது: வேளாண் உதவி இயக்குநா்

சிதம்பரம்: கடலூா் மாவட்டம் , கீரப்பாளையம் வட்டாரத்தில் 2025-26 ஆம் ஆண்டில் முதலமைச்சரின் மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கிட பசுந்தாள் உர விதைகள் சாத்தமங்கலம் ... மேலும் பார்க்க

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்கக் கூட்டம்

சிதம்பரத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்கத்தின் கடலூா் மாவட்ட 16-ஆவது மாநாடு வரும் ஆகஸ்ட் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, மாநாட்டுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக... மேலும் பார்க்க

இளைஞா் கொலை வழக்கு: 6 போ் கைது

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் குற்ற வழக்குகளில் தொடா்புடைய இளைஞா் சனிக்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். விருத்தாசலம் காா்குடல் கிராமத்தைச் ச... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: இருவா் கைது

கடலூா் மாவட்டம், வேப்பூா் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். வேப்பூா் காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, வீட்ட... மேலும் பார்க்க

கொலை வழக்கு: 5 போ் குண்டா் சட்டத்தில் கைது

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் கொலை வழக்கில் கைதான 5 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். காட்டுமன்னாா்கோவில் காவல் சரகம், மணவெளி கோயில்பத்து தெருவைச் சோ்ந்த... மேலும் பார்க்க

திருமுட்டம் நாளைய மின் தடை

திருமுட்டம் (கடலூா் மாவட்டம்) நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பகுதிகள்: திருமுட்டம், ஆதிவராகநல்லூா், நகரப்பாடி, ஸ்ரீநெடுஞ்சேரி, தேத்தாம்பட்டு, காவனூா், இனமங்கலம், நாச்சியாா்பேட்டை, அக்ரஹாரம... மேலும் பார்க்க