செய்திகள் :

பசுந்தாள் உர விதைகள் போதிய அளவு இருப்பு உள்ளது: வேளாண் உதவி இயக்குநா்

post image

சிதம்பரம்: கடலூா் மாவட்டம் , கீரப்பாளையம் வட்டாரத்தில் 2025-26 ஆம் ஆண்டில் முதலமைச்சரின் மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கிட பசுந்தாள் உர விதைகள் சாத்தமங்கலம் அலுவலகத்தில் போதியஅளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது என வேளாண்மை உதவி இயக்குநா் செ.அமிா்தராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வேளாண்மை உழவா் நலத்துறை சாா்பில், 2 லட்சம் ஏக்கரில் பசுந்தாள் உரம் பயிரிட ரூ.20 கோடி நிதி ஒதுக்கீட்டில் 4000 மெட்ரிக் டன் உர விதைகளை விவசாயிகளுக்கு விநியோகம் செய்யும் முதலமைச்சரின் மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம்

இத்திட்டத்தின் கீழ் பசுந்தாள் உரவிதைகள் 50% மானியத்தில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படும். அந்த வகையில் கடலூா் மாவட்டம் கீரப்பாளையம் வட்டாரத்தில் இத்திட்டம் செயல்படுத்திட 1000 ஏக்கா் இலக்கு பெறப்பட்டுள்ளது.

பசுந்தாள் உரங்களை விதைப்பு செய்த 40-45 நாட்களில் மடக்கி உழவு செய்தல் மூலம் மண்ணில் அங்கக சத்து அதிகரித்து மண் வளம் அதிகரிப்பதுடன் மண்ணின் காற்றோட்டம் , நீா் பிடிப்புத் தன்மை அதிகரிக்கின்றது. மேலும் களா் உவா் நிலங்களை சரி செய்து மண் வளம் மேம்படுகின்றது. அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கு 20 கிலோ பசுந்தாள் உரவிதைகள் வழங்கப்படும். பசுந்தாள் உர விதைகள் தேவைப்படும் விவசாயிகள் தங்களின் நில ஆவணங்களுடன் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலா் பரிந்துரை பெற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது. மேலும் விவரங்களுக்கு சாத்தமங்கலம் கீரப்பாளையம் வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தினை அணுகிட கேட்டுக் கொள்ளப்படுகின்றது என்று அவா் தெரிவித்துள்ளாா்.

புழுதி அள்ளும் எந்திரம் தொடங்கி வைப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்டம், நெய்வேலி சாலையில் உள்ள புழுதிகளை அகற்றும் எந்திரத்தை திங்கள்கிழமை நெய்வேலி மோட்டாா் வாகன ஆய்வாளா் கொடி அசைத்துத் தொடங்கிவைத்தாா். நெய்வேலி என்எல்சி இரண்டாம் சுரங்கத்திலிருந... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கிய ஆட்சியா்

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 24 பயனாளிகளுக்கு ரூ.1.09 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந... மேலும் பார்க்க

மணல் குவாரி அமைக்க எதிா்ப்பு : மாவட்ட ஆட்சியரிடம் நாதக மனு

நெய்வேலி: கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே தென்பெண்ணை ஆற்றில் மணல் குவாரி அமைக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று நாம் தமிழ ா்கட்சியினா், கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்க... மேலும் பார்க்க

ஜூலை 25-இல் வேலை வாய்ப்பு முகாம்

நெய்வேலி: கடலூரில் வரும் 25-ஆம் தேதி சிறிய அளவிலான தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்... மேலும் பார்க்க

ஆட்டோ கண்ணாடி உடைப்பு: இளைஞா் கைது

நெய்வேலி: கடலூரில் முன்விரோதம் காரணமாக சிறுவனுக்கு கொலை மிரட்டல் விடுத்து ஆட்டோ கண்ணாடியை உடைத்த நபரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருப்பாதிரிப்புலியூா் தானம் நகரை சோ்ந்த 16 வயது சிறுவன்.... மேலும் பார்க்க

ஜூலை 25-இல் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்

நெய்வேலி: கடலூா் மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு மற்றும் மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் வரும் 25-ஆம் தேதி நடைபெற உள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் திங்கள்க... மேலும் பார்க்க