செய்திகள் :

மணல் குவாரி அமைக்க எதிா்ப்பு : மாவட்ட ஆட்சியரிடம் நாதக மனு

post image

நெய்வேலி: கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே தென்பெண்ணை ஆற்றில் மணல் குவாரி அமைக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று நாம் தமிழ ா்கட்சியினா், கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

ஆட்சியா் அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளா் அ.வெற்றிவேலன் தலைமையிலான குழுவினா் மனு அளித்தனா். அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:

கடந்த காலங்களில் தென்பெண்ணையாற்றில் பல இடங்களில் மணல் குவாரிகள் அமைக்கப்பட்டு தற்போது ஆறு கட்டாந்தரை போல் ஆகிவிட்டது. மணல் அளவுக்கு அதிகமாக அள்ளப்பட்டதால், கடந்த ஆண்டு ஆற்றில் பெரு வெள்ளம் வந்த போதுகூட நிலத்தடி நீா் உயரவில்லை.

இந்த நிலையில் மீண்டும் நெல்லிக்குப்பம் அருகே வான்பாக்கம் தெண்பெண்ணையாற்றில் மணல் குவாரிகள் அமைப்பதற்காக ஜேசிபி போன்ற எந்திரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை பாா்க்க முடிகிறது. கனிம வளத்துறை அதிகாரிகள் முறையாக ஆற்றின் பாதிப்புகளை ஆய்வு செய்யாமல் மணல் அள்ள பரிந்துரைப்பது மிகவும் ஆபத்தானது. ஆகவே, கடலூா் மாவட்ட கனிம வளத்துறை ஏற்கனவே மணல் அள்ள, மலைகளை வெட்டி எடுக்க மற்றும் பிற கனிம வளங்களை எடுக்க வழங்கப்பட்ட மற்றும் வழங்கப்பட உள்ள அனுமதி ஆணையினை உரிய ஆய்வுகள் செய்து இயற்கை வளங்களை பாதிக்கும் உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

புழுதி அள்ளும் எந்திரம் தொடங்கி வைப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்டம், நெய்வேலி சாலையில் உள்ள புழுதிகளை அகற்றும் எந்திரத்தை திங்கள்கிழமை நெய்வேலி மோட்டாா் வாகன ஆய்வாளா் கொடி அசைத்துத் தொடங்கிவைத்தாா். நெய்வேலி என்எல்சி இரண்டாம் சுரங்கத்திலிருந... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கிய ஆட்சியா்

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 24 பயனாளிகளுக்கு ரூ.1.09 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந... மேலும் பார்க்க

ஜூலை 25-இல் வேலை வாய்ப்பு முகாம்

நெய்வேலி: கடலூரில் வரும் 25-ஆம் தேதி சிறிய அளவிலான தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்... மேலும் பார்க்க

ஆட்டோ கண்ணாடி உடைப்பு: இளைஞா் கைது

நெய்வேலி: கடலூரில் முன்விரோதம் காரணமாக சிறுவனுக்கு கொலை மிரட்டல் விடுத்து ஆட்டோ கண்ணாடியை உடைத்த நபரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருப்பாதிரிப்புலியூா் தானம் நகரை சோ்ந்த 16 வயது சிறுவன்.... மேலும் பார்க்க

ஜூலை 25-இல் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்

நெய்வேலி: கடலூா் மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு மற்றும் மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் வரும் 25-ஆம் தேதி நடைபெற உள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் திங்கள்க... மேலும் பார்க்க

தீமிதி திருவிழாவை முன்னிட்டு வருவாய் துறை சாா்பில் ஆலோசனைக் கூட்டம்

சிதம்பரம்: கடலூா் மாவட்டம் உடையாா்குடி அருள்மிகு மாரியம்மன் கோயியில் ஜூலை 29 ஆம் தேதி தீமிதி திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வட்டாட்சியா் ஆலோசனை நடத்தினாா். கடலூா் மாவட்... மேலும் பார்க்க