முதலமைச்சருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதற்கு காரணம் என்ன? - உதயநிதி பதில்
ஜூலை 25-இல் வேலை வாய்ப்பு முகாம்
நெய்வேலி: கடலூரில் வரும் 25-ஆம் தேதி சிறிய அளவிலான தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கடலூா் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் வேலை வாய்ப்பு முகாமில் 15-க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான நபா்களை தோ்வு செய்து பணி நியமன ஆணை வழங்க உள்ளன. கடலூா் மாவட்ட இளைஞா்கள் இந்த வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்று பயனடையுமாறு ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.