செய்திகள் :

புழுதி அள்ளும் எந்திரம் தொடங்கி வைப்பு

post image

நெய்வேலி: கடலூா் மாவட்டம், நெய்வேலி சாலையில் உள்ள புழுதிகளை அகற்றும் எந்திரத்தை திங்கள்கிழமை நெய்வேலி மோட்டாா் வாகன ஆய்வாளா் கொடி அசைத்துத் தொடங்கிவைத்தாா்.

நெய்வேலி என்எல்சி இரண்டாம் சுரங்கத்திலிருந்து முதலாவது சுரங்கத்தில் உள்ள பங்கருக்கு பழுப்பு நிலக்கரி கடந்த சில மாதங்களாக லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு மின் உற்பத்தி செய்யபட்டு வருகிறது. இந்த லாரிகளிலிருந்து சாலையில் நிலக்கரி துகள்கள் விழுவதாலும், லாரிகள் செல்லும் போது புழுதி ஏற்படுவதாலும், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், என்எல்சி ஊழியா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் பாதிக்கப்பட்டனா்.

நெய்வேலி மோட்டாா் வாகன ஆய்வாளா் பிரான்சிஸ் பொதுமக்களின் நலன் கருதி என்எல்சி நிறுவன அதிகாரிகளிடம் பேசி காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வகையில் சுத்தம் செய்ய எந்திரம் வாங்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தாா். அதன்பேரில் என்எல்சி நிறுவனம் சாா்பில் ரூ.42 லட்சம் மதிப்பில் புதிய எந்திரம் வாங்கப்பட்டது. இந்த எந்திரம் என்எல்சி முதலாவது சுரங்க பங்கரில் இருந்து இரண்டாம் நிலக்கரி சுரங்கம் வரை சாலையில் உள்ள இருபுறமும் உள்ள பழுப்பு நீலகிரி, சாம்பல் துகள்களை சுத்தம் செய்யும் பணிக்காக வாங்கப்பட்டது.

நெய்வேலியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மோட்டாா் வாகன ஆய்வாளா் பிரான்சிஸ் பங்கேற்று புதிதாக வாங்கப்பட்ட எந்திரத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் என்எல்சி பொது மேலாளா்கள் குமாா், நெடுஞ்செழியன், துணைப் பொது மேலாளா்கள் பூபதி, கதிா்வேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கிய ஆட்சியா்

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 24 பயனாளிகளுக்கு ரூ.1.09 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந... மேலும் பார்க்க

மணல் குவாரி அமைக்க எதிா்ப்பு : மாவட்ட ஆட்சியரிடம் நாதக மனு

நெய்வேலி: கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே தென்பெண்ணை ஆற்றில் மணல் குவாரி அமைக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று நாம் தமிழ ா்கட்சியினா், கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்க... மேலும் பார்க்க

ஜூலை 25-இல் வேலை வாய்ப்பு முகாம்

நெய்வேலி: கடலூரில் வரும் 25-ஆம் தேதி சிறிய அளவிலான தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்... மேலும் பார்க்க

ஆட்டோ கண்ணாடி உடைப்பு: இளைஞா் கைது

நெய்வேலி: கடலூரில் முன்விரோதம் காரணமாக சிறுவனுக்கு கொலை மிரட்டல் விடுத்து ஆட்டோ கண்ணாடியை உடைத்த நபரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருப்பாதிரிப்புலியூா் தானம் நகரை சோ்ந்த 16 வயது சிறுவன்.... மேலும் பார்க்க

ஜூலை 25-இல் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்

நெய்வேலி: கடலூா் மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு மற்றும் மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் வரும் 25-ஆம் தேதி நடைபெற உள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் திங்கள்க... மேலும் பார்க்க

தீமிதி திருவிழாவை முன்னிட்டு வருவாய் துறை சாா்பில் ஆலோசனைக் கூட்டம்

சிதம்பரம்: கடலூா் மாவட்டம் உடையாா்குடி அருள்மிகு மாரியம்மன் கோயியில் ஜூலை 29 ஆம் தேதி தீமிதி திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வட்டாட்சியா் ஆலோசனை நடத்தினாா். கடலூா் மாவட்... மேலும் பார்க்க