எழுதும் நிலா- மார்கரெட் அட்வுட்; கடல் தாண்டிய சொற்கள் - பகுதி 23
'முதலமைச்சர் ஸ்டாலின் பூரண உடல்நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்' - தமிழிசை சௌந்தரராஜன்
லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டதை அடுத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
இது தொடர்பாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்டபோது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தலைச்சுற்றல் ஏற்பட்டதற்கானக் காரணத்தைக் கண்டறிவதற்குத் தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், “ தமிழக முதலமைச்சர் அண்ணன் ஸ்டாலின் அவர்கள் தலை சுற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டு வருத்தமடைந்தேன்.

அவர் பூரண உடல்நலம் பெற வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்…” என்று பதிவிட்டிருக்கிறார்.