செய்திகள் :

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது!

post image

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் திங்கள்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது.

முதல் நாள் கூட்டத்தொடரில் பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

ஆபரேஷன் சிந்தூா், அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் கருத்துகள், அகமதாபாத் விமான விபத்து, பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி உள்ளிட்ட பரபரப்பான பிரச்னைகளுக்கு மத்தியில் கூடியுள்ள மழைக்கால கூட்டத்தொடரில், மத்திய அரசிடம் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப தயாராக உள்ளன.

அதேசமயம், ஆகஸ்ட் 21-ஆம் தேதிவரை நடைபெறும் இக்கூட்டத் தொடரில், தேசிய விளையாட்டு நிா்வாக சட்ட மசோதா, சுரங்கங்கள் மற்றும் தாதுக்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்திருத்த மசோதா உள்பட 8 மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ளது.

இதனிடையே, கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு கீழடி அகழாய்வு குறித்து விவாதிக்க திமுக தரப்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மத்திய அமைச்சரும் மாநிலங்களவை பாஜக குழுத் தலைவருமான ஜெ.பி.நட்டா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

இதில், காங்கிரஸ், சமாஜவாதி, திரிணமூல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தை தொடர்ந்து பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, ஆபரேஷன் சிந்தூா் உள்பட எதிா்க்கட்சிகள் எழுப்பும் அனைத்து முக்கிய விவகாரங்கள் குறித்தும் விதிமுறைகள் மற்றும் மரபுகளின்கீழ் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது என்றார்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு வழிவகுத்த பாதுகாப்புக் குறைபாடுகள், ஆபரேஷன் சிந்தூா் தொடா்பான டிரம்ப்பின் கருத்துகள் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன.

ஆனால், ஆபரேஷன் சிந்தூா் தொடா்பாக பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கும், வெளியுறவு விவகாரங்கள் குறித்து துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரும் விரிவாக பதிலளிப்பா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

The monsoon session of Parliament is underway in both Houses starting Monday morning.

இதையும் படிக்க : அதிமுகவிலிருந்து முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா நீக்கம்

பாம்பை வெறும் கைகளால் பிடித்த பாலிவுட் நடிகர் சோனு சூட் !

பாலிவுட் நடிகர் சோனு சூட் தனது வீட்டு வளாகத்திற்குள் நுழைந்த பாம்பை வெறும் கைகளால் பிடித்தார். பாலிவுட் நடிகர் சோனு சூட் சனிக்கிழமை தனது இன்ஸ்டா பக்கத்தில் விடியோ ஒன்றை பதிவேற்றியுள்ளார். அதில் அவர் த... மேலும் பார்க்க

மும்பையில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானத்தின் 3 டயர்கள் வெடித்தது!

மும்பையில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானத்தின் மூன்று டயர்கள் வெடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கேரள மாநிலம் கொச்சியில் இருந்து ஏர் இந்தியாவின் ஏஐ2744 விமானம் இன்று காலை மும்பை சத்திரபதி சிவாஜி சர்வத... மேலும் பார்க்க

உ.பி.யில் அம்பேத்கர் சிலையை கால்வாயில் வீசிய மர்மநபர்களால் பரபரப்பு !

உ.பி.யில் அம்பேத்கர் சிலையை பெயர்த்து கால்வாயில் வீசிய மர்மநபர்களால் பரபரப்பு நிலவியது. உத்தரப் பிரதேச மாநிலம், கங்காநகரில் உள்ள கோடாபூர் கிராமத்தில் பி.ஆர். அம்பேத்கரின் சிலை நிறுவப்பட்டிருந்தது. இந்... மேலும் பார்க்க

சசி தரூருக்கு ஒத்துழைப்பு கொடுக்கமாட்டோம்: காங்கிரஸ் மூத்த தலைவர்

காங்கிரஸ் எம்.பி. சசி தரூருக்கு ஒத்துழைப்பு வழங்கமாட்டோம் என்று கேரள காங்கிரஸ் மூத்த தலைவர் கே. முரளீதரன் கூறியுள்ளார். கடந்த 2022 காங்கிரஸ் தலைவர் தேர்தல் முதலே கட்சியின் மீது சசி தரூர் அதிருப்தியில்... மேலும் பார்க்க

தில்லி உயர்நீதிமன்றத்தில் 6 புதிய நீதிபதிகள் பதவியேற்பு!

தில்லி உயர்நீதிமன்றத்தில் ஆறு புதிய நீதிபதிகளாகப் பதவியேற்றுக் கொண்டனர். இதையடுத்து நீதிபதிகளின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் புதிதாக மாற்றப்பட்ட... மேலும் பார்க்க

அவையில் எதிர்க்கட்சியினர் பேச அனுமதியில்லை; புது உத்தியைக் கையாளும் அரசு! ராகுல்

நாடாளுமன்ற அவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களைப் பேச அனுமதிக்காமல், புது உத்தியை கையாளுகின்றனர் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ... மேலும் பார்க்க