எழுதும் நிலா- மார்கரெட் அட்வுட்; கடல் தாண்டிய சொற்கள் - பகுதி 23
தில்லி உயர்நீதிமன்றத்தில் 6 புதிய நீதிபதிகள் பதவியேற்பு!
தில்லி உயர்நீதிமன்றத்தில் ஆறு புதிய நீதிபதிகளாகப் பதவியேற்றுக் கொண்டனர். இதையடுத்து நீதிபதிகளின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் புதிதாக மாற்றப்பட்ட நீதிபதிகளுக்குத் தில்லி தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.
நீதிபதி வி. காமேஸ்வர் ராவ், நீதிபதி நிதின் வாசுதேவ் சாம்ப்ரே, நீதிபதி விவேக் சௌத்ரி, நீதிபதி அனில் ஷேதர்பால், நீதிபதி அருண் குமார் மோங்கா, நீதிபதி ஓம் பிரகாஷ் சுக்லா ஆகிய ஆறு நீதிபதிகள் நாடு முழுவதும் உள்ள பல்வேறு உயர்நீதிமன்றங்களில் இருந்து மாற்றப்பட்டுள்ளனர்.
தில்லி உயர்நீதிமன்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட 60 நீதிபதிகளில் புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதிகளையடுத்து நீதிபதிகளின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.