செய்திகள் :

சசி தரூருக்கு ஒத்துழைப்பு கொடுக்கமாட்டோம்: காங்கிரஸ் மூத்த தலைவர்

post image

காங்கிரஸ் எம்.பி. சசி தரூருக்கு ஒத்துழைப்பு வழங்கமாட்டோம் என்று கேரள காங்கிரஸ் மூத்த தலைவர் கே. முரளீதரன் கூறியுள்ளார்.

கடந்த 2022 காங்கிரஸ் தலைவர் தேர்தல் முதலே கட்சியின் மீது சசி தரூர் அதிருப்தியில் இருந்து வருகிறார். தற்போது காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராக உள்ள சசி தரூர், சமீபமாக கட்சியின் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூா் ஆகிய விஷயங்களிலும் மத்திய அரசுக்கு ஆதரவாக சசி தரூா் கருத்து தெரிவித்தாா்.

சமீபத்தில் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட அவசரநிலையை விமர்சித்திருந்தது கட்சியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து கேரள மாநில காங்கிரஸ் நிா்வாகிகள் சசி தரூரை கடுமையாக விமா்சித்து வருகின்றனா்.

இந்நிலையில் திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் கே. முரளீதரன் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில்,

"சசி தரூர் விவகாரத்தில் காங்கிரஸ் தலைமைக்குத்தான் அதிகாரம் உள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுப்பதா அல்லது கட்சியில் நீடிக்க அனுமதிப்பதா என்பதை அவர்கள் முடிவு செய்வார்கள். கேரளத்தைப் பொருத்தவரை சசி தரூருக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இல்லை. காங்கிரஸ் மற்றும் இந்திரா காந்தியை அவர் விமர்சித்து பேசி வருகிறார். தேவையில்லாமல் சஞ்சய் காந்தி பற்றியும் பேசி வருகிறார்.

ராகுல் காந்தியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். கேரளத்தில் அவரது செயல்பாடுகள் குறித்து நாங்கள் மிகவும் வருத்தத்தில் இருக்கிறோம். மக்களவைத் தேர்தலில் அவரது வெற்றிக்காக தொண்டர்கள் பலரும் தியாகம் செய்துள்ளார்கள்.

எனவே, வருகிற உள்ளாட்சித் தேர்தலில் நாங்கள் அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்கமாட்டோம் என்று முடிவு செய்துள்ளோம். காங்கிரஸ் தலைமை ஏதேனும் கூறினால் அதன்படி பின்பற்றுவோம். மற்றபடி சசி தரூருக்கு எந்த ஒத்துழைப்பும் கொடுக்க மாட்டோம்" என்று கூறியுள்ளார்.

Senior Congress leader K Muraleedharan said that We are not ready to cooperate with Congress MP Shashi Tharoor

இதையும் படிக்க | முதல்வர் மு.க. ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி!

அச்சுதானந்தன் மறைவு: தலைவர்கள் இரங்கல்

கேரள முன்னாள் முதல்வரும் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான அச்சுதானந்தன் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளதாவது, கேர... மேலும் பார்க்க

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்!

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் (வயது 101) வயது மூப்பு காரணமாக திங்கள்கிழமை காலமானார்.மாரடைப்பு மற்றும் வயது தொடர்பான உடல்நலக் குறைவு காரணமாக அச்சுதானந்தன் கடந்த ஜூன் 23 ஆம் தேதி திருவனந்தபுரத்தி... மேலும் பார்க்க

மும்பை ரயில் குண்டுவெடிப்பு.. 19 ஆண்டுகளுக்குப் பின் 12 பேர் விடுதலை செய்யப்பட்டது ஏன்?

2006ஆம் ஆண்டு மும்பையில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புச் சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட 12 பேரையும் மும்பை உயர் நீதிமன்றம் இன்று விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.மும்பையில் புறநகர் ரயில்களில் அடுத்தடுத்து... மேலும் பார்க்க

குஜராத்தில் ஒரே குடும்பத்தில் 5 பேர் தற்கொலை! அதிர்ச்சி தரும் காரணம்

குஜராத் மாநிலத்தில், மூன்று குழந்தைகளைக் கொன்றுவிட்டு, தம்பதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், நிதிநிலைமைதான் இதற்குக் காரணம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்... மேலும் பார்க்க

பாம்பை வெறும் கைகளால் பிடித்த பாலிவுட் நடிகர் சோனு சூட் !

பாலிவுட் நடிகர் சோனு சூட் தனது வீட்டு வளாகத்திற்குள் நுழைந்த பாம்பை வெறும் கைகளால் பிடித்தார். பாலிவுட் நடிகர் சோனு சூட் சனிக்கிழமை தனது இன்ஸ்டா பக்கத்தில் விடியோ ஒன்றை பதிவேற்றியுள்ளார். அதில் அவர் த... மேலும் பார்க்க

மும்பையில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானத்தின் 3 டயர்கள் வெடித்தது!

மும்பையில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானத்தின் மூன்று டயர்கள் வெடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கேரள மாநிலம் கொச்சியில் இருந்து ஏர் இந்தியாவின் ஏஐ2744 விமானம் இன்று காலை மும்பை சத்திரபதி சிவாஜி சர்வத... மேலும் பார்க்க