செய்திகள் :

அண்ணா அறிவாலயத்தில் அன்வர் ராஜா... கட்சியில் இருந்து நீக்கிய அதிமுக! - தகிக்கும் அரசியல் களம்

post image

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மற்றும் எம்.பி அன்வர் ராஜா. எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கிய காலத்தில் இருந்தே, அந்தக் கட்சியில் இருக்கும் சீனியர் இவர்.

அன்வர் ராஜாவும், பாஜக உடனான கூட்டணியும்!

அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்துள்ளது.

இந்த நிலையில், அன்வர் ராஜா, இந்த மாதத்தில் முதல் வாரத்தில், "தமிழ்நாட்டில் பாஜக ஒருபோதும் காலூன்ற முடியாது என்பது எனது தனிப்பட்ட கருத்து” என்று கூறி, பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

இது குறித்து, பாஜக உடன் அதிமுக கூட்டணி வைத்ததில், அன்வர் ராஜாவிற்கு விருப்பம் இல்லை என்று கூறப்பட்டது.

பாஜக - அதிமுக கூட்டணி
பாஜக - அதிமுக கூட்டணி

அண்ணா அறிவாலயத்தில் அன்வர் ராஜா

இந்தப் பரபரப்புகள் அடங்குவதற்கு முன்பே, இன்று அன்வர் ராஜா திமுகவில் இணைய அண்ணா அறிவாலயத்திற்கு வந்தார்.

இதனையடுத்து, அதிமுகவில் இருந்து அன்வர் ராஜாவை நீக்குவதாக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அன்வர் ராஜாவை அதிமுகவில் இருந்து நீக்குவது இது முதல்முறையல்ல.

2021-ம் ஆண்டும்...

2021-ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், 66 இடங்களை மட்டுமே கைப்பற்றி, ஆட்சியை தி.மு.க-விடம் இழந்தது அ.தி.மு.க.

இந்தத் தோல்விக்குக் காரணம் அ.ம.மு.க உருவானதும், பா.ஜ.க-உடனான கூட்டணி எனப் பல கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

அன்வர் ராஜா
அன்வர் ராஜா

குறிப்பாக, முன்னாள் அமைச்சர்களான சி.வி.சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டோர் தங்களின் தோல்விக்கு பாஜக-வுடனான கூட்டணிதான் முக்கியக் காரணம் எனத் தெரிவித்தனர்.

அதே கருத்தை, அதிமுக சீனியரான அன்வர் ராஜாவும் முன்வைத்தார். ஆனால், அதோடு நிற்காமல், தலைமை குறித்து கடுமையான விமர்சனம் வைத்ததோடு, சசிகலாவை மீண்டும் கட்சிக்குள் கொண்டுவர வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.

நீக்கமும்.. இணைப்பும்...

இது தொடர்பாக, 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திலும் பேசினார்.

இதனால், அப்போது சி.வி.சண்முகத்துக்கும் அன்வர் ராஜாவுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து, கூட்டத்திலிருந்து வெளியேறினார் அன்வர் ராஜா. பின்னர், அவர் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக தலைமை அறிவித்தது.

2023-ம் ஆண்டு அ.தி.மு.க-வில் அன்வர் ராஜா இணைந்த போது....
2023-ம் ஆண்டு அ.தி.மு.க-வில் அன்வர் ராஜா இணைந்த போது....

இந்தச் சம்பவம் நடைபெற்று ஒன்றரை ஆண்டு கடந்த நிலையில் 2023-ம் ஆண்டு, மீண்டும் அன்வர் ராஜா கட்சியில் இணைக்கப்பட்டார்.

ஆக, அன்வர் ராஜா முன்பு இருந்தே அதிமுக பாஜக உடன் கூட்டணி வைப்பதை விரும்பவில்லை.

இந்த நிலையில் தான், அவர் தற்போது திமுகவில் சேர உள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

ஓரணியில் தமிழ்நாடு: `மக்களிடம் OTP விவரங்களைக் கேட்கக் கூடாது!' - உயர் நீதிமன்றம் தடை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கும் நிலையில் இப்போதே `ஓரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின்பேரில் மாநிலம் முழுவதும் வீடு வீடாகச் சென்று உறுப்பினர்கள... மேலும் பார்க்க

`நடைபயிற்சியின் போது லேசான மயக்கம்' - அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் அனுமதி

முதல்வர் ஸ்டாலின் இன்று காலையில் வழக்கமான நடைபயிற்சி மேற்கொண்டபோது அவருக்கு லேசான மயக்கம் ஏற்பட்டதைத்தொடர்ந்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.அபோல்லோ மருத்துவமனை அறிக்க... மேலும் பார்க்க

`மாநில அரசின் கடமை; முதல்வர் தலையிட்டு தீர்வு காண்பார்கள் என்று நம்புகிறேன்!’ - ஜோதிமணி

"2024-2025 ஆம் ஆண்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகளுக்கு ஆறு மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் சாத்தியக்கூறு கூட வரவில்லை. கரூர் சட்டமன்றத் தொகுதிக்குள் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒதுக்கீடு செய்யப்பட நி... மேலும் பார்க்க

தர்மஸ்தலா கோயில்: 100-க்கும் மேற்பட்ட பெண்கள் புதைப்பு? குவியும் புகார்கள்; புலனாய்வுக் குழு அமைப்பு

கர்நாடகா மாநிலம் தட்சின கன்னடாவில் உள்ளது தர்மஸ்தலா. இங்கே மஞ்சு நாதர் கோயில் உள்ளது. இது மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் ஆகும்.தூய்மைப் பணியாளரின் புகார் கடந்த ஜூன் மாதம், தர்மஸ்தலா மஞ்சு நாதர் கோயில்... மேலும் பார்க்க

`லாக்கப் டெத், கீழடி அறிக்கை, மகளிர் இடஒதுக்கீடு’ - நாடாளுமன்றத்தில் அதிமுக எழுப்பும் விவகாரங்கள்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 21) முதல் தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 21 வரை ஒரு மாத காலம் நடைபெறவிருக்கிறது.இதனை முன்னிட்டு, நேற்று நாடாளுமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்... மேலும் பார்க்க