செய்திகள் :

திமுகவில் இணைந்தது ஏன்? அன்வர் ராஜா விளக்கம்

post image

திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் முன்னிலையில் அன்வர் ராஜா சென்னை அண்ணா அறிவாலயத்தில் திங்கள்கிழமை திமுகவில் இணைந்தார்.

பாஜக உடன் அதிமுக மீண்டும் கூட்டணி அமைத்ததால் அன்வர் ராஜா அதிருப்தியில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் கூட்டணிக் கட்சியான பாஜகவை கடுமையாக விமர்சித்தும் அவர் பேட்டி அளித்திருந்தார்.

பாஜகவுடனான கூட்டணியால் சிறுபான்மையினர் வாக்குகள் அதிமுகவுக்கு கிடைக்காது என பேசியிருந்தார். இந்த நிலையில் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் முன்னிலையில் அவர் திமுகவில் இணைந்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பேரறிஞர் அண்ணா தலைமையில் கருத்தியல்ரீதியாக வளர்ந்தவர்கள் நாங்கள். பாஜகவின் கையில் அதிமுக சிக்கியிருக்கிறது. அதிமுக தனது கொள்கைகளுக்கு மாறாக செயல்படுகிறது. அதிமுகவை அழிப்பதுதான் பாஜகவின் நோக்கம்.

அதிமுகவை அழித்துவிட்டு திமுகவுடன் போட்டி போடுவதே பாஜவின் திட்டம். பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்ற என் மனதின் ஆதங்கத்தை தலைமைக்கு தெரிவித்தேன். பாஜகவை தமிழ்நாட்டு மக்கள் ஏற்க மாட்டார்கள். அவர்கள் எதிர்மறை சக்தியாக உள்ளனர்.

மும்பை ரயில் குண்டுவெடிப்பு: குற்றஞ்சாட்டப்பட்ட 12 பேரும் விடுதலை; அரசு தரப்பின் தோல்வி

இதனிடையே அதிமுக அமைப்பு செயலாளராக இருந்த அன்வர் ராஜா அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி அதிமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.

Anwar Raja joined the DMK on Monday at the Anna Arivalayam in Chennai in the presence of DMK president and Chief Minister Stalin.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தலைமைச் செயலர்கள் ஆஜர்

சென்னை: தலைமைச் செயலாளர்களுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டதில் நீதிமன்றம் மகிழ்ச்சி கொள்ளவில்லை, தர்மசங்கடமாகவே கருதுகிறது என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித... மேலும் பார்க்க

முதல்வர் மு.க. ஸ்டாலின் விரைவில் வீடு திரும்புவார்: துரைமுருகன்

முதல்வர் மு.க. ஸ்டாலின் நலமுடன் இருக்கிறார், விரைவில் வீடு திரும்புவார் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(திங்கள்கிழமை) காலை வழக்கமான நடைப்பயிற்சியில் ஈடுபட்டிர... மேலும் பார்க்க

திரெளபதி அம்மன் கோயிலில் காளியாட்டம்!

திரெளபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு நகரின் முக்கிய வீதிகளில் காளி ஆட்டம் நடைபெற்றது.தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் அருள்மிகு திரெளபதி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இந்த... மேலும் பார்க்க

மருத்துவமனையில் முதல்வர் அனுமதி: குடும்பத்தினர், அமைச்சர்கள் வருகை!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலினைப் பார்க்க குடும்பத்தினர், அமைச்சர்கள் மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(திங்கள்கிழமை) காலை நடைப்பயிற்சியில் ஈ... மேலும் பார்க்க

20 ஆண்டு.. 150 சொகுசு கார்கள்! ஒரே ஒரு காரால் சிக்கிய பல நாள் திருடன்!!

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 150-க்கும் மேற்பட்ட சொகுசு காா்களை லாவகமாகத் திருடி சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிக்காமல் இருந்த ராஜஸ்தானைச் சேர்ந்த ஷெகாவத் என்பவர் கைது செய்யப்பட்டார்.பல மாநில... மேலும் பார்க்க

12 கவுன்சிலர்களுக்கு எதிராக நகராட்சித் தலைவர் வழக்கு: நீலகிரி ஆட்சியருக்கு உத்தரவு

நெல்லியாளம் நகராட்சி கவுன்சிலர்கள் 12 பேருக்கு எதிராக நகராட்சித் தலைவர் அளித்த புகாரை 6 வாரங்களில் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க நீலகிரி ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்... மேலும் பார்க்க