செய்திகள் :

Shashi Tharoor: `அவர் கங்கிரஸாரில் ஒருவரா?’ - சசி தரூர் விசுவாசத்தை கேள்வி கேட்ட மூத்த தலைவர்

post image

கேரள காங்கிரஸ் மூத்த தலைவர் கே. முரளிதரன், காங்கிரஸ் எம்.பி சசி தரூரை மீண்டும் தாக்கி பேசியிருக்கிறார். தேசிய பாதுகாப்பு விவகாரங்களில் சசி தரூர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் வரை அவர் காங்கிரஸில் ஒருவராக கருதப்பட மாட்டார் என்றும், மாநில தலைநகரில் நடக்கும் எந்த காங்கிரஸ் நிகழ்ச்சிக்கும் அழைக்கப்பட மாட்டார் என்றும் கூறியுள்ளார்.

Shashi Tharoor என்ன சொல்கிறார்?

சசிதரூர் தேசத்தின் எல்லை விவகாரங்களில் ராணுவம் மற்றும் மத்திய அரசுக்கு ஆதரவாக கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்.

K Muraleedharan with Rahul Gandhi
K Muraleedharan with Rahul Gandhi

கட்சிகாக தனது நிலைப்பாட்டைக் கட்சிக்காக மாற்றிக்கொள்ள முடியாது என்றும், கட்சியை விட தேசத்தின் நலனே முக்கியம் என்றும் பேசியுள்ளார். இதனால் அவர்மீது பலதரப்பிலிருந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.

இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது கே முரளிதரன், "அவரது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாதவரை திருவனந்தபுரத்தில் நடக்கும் எந்தவொரு கட்சி நிகழ்ச்சிக்கும் அவரை அழைக்கப்போவதில்லை. அவர் எங்களுடன் இல்லை..." எனக் கூறியுள்ளார்.

சசி தரூர் தான் தேசிய பாதுகாப்புக்காக மற்ற கட்சியுடன் ஒத்துழைப்பது, சொந்த கட்சிக்கு எதிராக செயல்படுவதாகப் பார்க்கப்படுகிறது எனக் கூறியுள்ளார்.

சசி தரூர்
சசி தரூர்

எந்தப்பக்கம் தான் நிற்கிறீர்கள்... குழப்பும் Shashi Tharoor!

முன்னதாக யு.டி.எஃப் கூட்டணியின் சிறந்த முதலமைச்சர் வேட்பாளர் தேர்வாக சசி தரூர் இருப்பார் என்ற கணிப்பை சசி தரூர் பகிர்ந்தபோது, "அவர் முதலில் எந்த கட்சியில் இருக்கிறார் என்பதை முடிவு செய்ய வேண்டும்" என விமர்சித்திருந்தார் கே முரளிதரன்.

பஹல்காம் தாக்குதலில் சசி தரூர் பாஜகவின் கூற்றுகளை ஆதரிப்பது கட்சிக்கும் அவருக்குமான விசரிசல்களைத் தொடங்கி வைத்தது. இந்தியன் எக்ஸ்பிரஸில் கேரள கம்யூனிஸ்ட் கட்சியின் பொருளாதார வழிநடத்துதலை பாராட்டி எழுதிய கட்டுரையும் மாநில காங்கிரஸினர் மத்திதில் சலசலப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து எமர்ஜென்சி குறித்து இந்திராகாந்தியை விமர்சித்து சசி தரூர் மலையாள தினசரியில் எழுதிய பத்தியும் விமர்சனத்துள்ளாக்கியது.

இதனால் சசி தரூர் எந்த பக்கம்தான் நிற்கிறார் என்பதை முதலில் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என கேரள காங்கிரஸார் கொந்தளித்துள்ளனர்.

இதற்கிடையில் இன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதனால் சசி தரூர் மீது காங்கிரஸினர் கவனம் குவிந்துள்ளது.

'முதலமைச்சர் ஸ்டாலின் பூரண உடல்நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்' - தமிழிசை சௌந்தரராஜன்

லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டதை அடுத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.இது தொடர்பாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன... மேலும் பார்க்க

ஓரணியில் தமிழ்நாடு: `மக்களிடம் OTP விவரங்களைக் கேட்கக் கூடாது!' - உயர் நீதிமன்றம் தடை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கும் நிலையில் இப்போதே `ஓரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின்பேரில் மாநிலம் முழுவதும் வீடு வீடாகச் சென்று உறுப்பினர்கள... மேலும் பார்க்க

`நடைபயிற்சியின் போது லேசான மயக்கம்' - அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் அனுமதி

முதல்வர் ஸ்டாலின் இன்று காலையில் வழக்கமான நடைபயிற்சி மேற்கொண்டபோது அவருக்கு லேசான மயக்கம் ஏற்பட்டதைத்தொடர்ந்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.அபோல்லோ மருத்துவமனை அறிக்க... மேலும் பார்க்க

`மாநில அரசின் கடமை; முதல்வர் தலையிட்டு தீர்வு காண்பார்கள் என்று நம்புகிறேன்!’ - ஜோதிமணி

"2024-2025 ஆம் ஆண்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகளுக்கு ஆறு மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் சாத்தியக்கூறு கூட வரவில்லை. கரூர் சட்டமன்றத் தொகுதிக்குள் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒதுக்கீடு செய்யப்பட நி... மேலும் பார்க்க

தர்மஸ்தலா கோயில்: 100-க்கும் மேற்பட்ட பெண்கள் புதைப்பு? குவியும் புகார்கள்; புலனாய்வுக் குழு அமைப்பு

கர்நாடகா மாநிலம் தட்சின கன்னடாவில் உள்ளது தர்மஸ்தலா. இங்கே மஞ்சு நாதர் கோயில் உள்ளது. இது மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் ஆகும்.தூய்மைப் பணியாளரின் புகார் கடந்த ஜூன் மாதம், தர்மஸ்தலா மஞ்சு நாதர் கோயில்... மேலும் பார்க்க