செய்திகள் :

டெல்லி: 15 தூக்க மாத்திரைகள், எலக்ட்ரிக் ஷாக்.. கணவனைக் கொன்ற பெண்; காட்டிக்கொடுத்த இன்ஸ்டா சாட்டிங்

post image

டெல்லி உத்தம்நகரில் வசித்தவர் கரண் தேவ் (36). இவரது மனைவி சுஷ்மிதா. கடந்த வாரம் எதிர்பாராதவிதமாக எலக்ட்ரிக் ஷாக் பட்டுவிட்டதாகக் கூறி கரண் தேவை அவரது மனைவியும், உறவினர்களும் அங்குள்ள ராணி ரூப்ராணி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

மருத்துவர்கள் அவரைச் சோதித்துப் பார்த்தபோது கரண் தேவ் ஏற்கனவே இறந்துவிட்டது தெரிய வந்தது. இதையடுத்து விபத்து மரணம் என்பதால் பிரேதச் பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று உறவினர்கள் தெரிவித்தனர். ஆனால் கரண் தேவ் வயது போன்ற காரணங்களைக் காட்டி பிரேதப் பரிசோதனை செய்யவேண்டும் என்று போலீஸார் தெரிவித்தனர்.

இதற்கு சுஷ்மிதாவும், அவரது மாமனாரும், சுஷ்மிதாவின் மைத்துனர் ராகுலும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களின் எதிர்ப்பை மீறி கரண் தேவ் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

மரணம் நடந்து மூன்று நாட்கள் கழிந்துவிட்ட நிலையில், கரணின் சகோதரர் குணால் போலீஸாரைச் சந்தித்து தனது சகோதரனை அவரது மனைவியும், எங்களது பெரியப்பா மகன் ராகுல் ஆகியோர் சேர்ந்து கொலை செய்திருக்க வேண்டும் என்று சந்தேகப்படுவதாகத் தெரிவித்தார்.

அதற்கு ஆதாரமாக ராகுலும், சுஷ்மிதாவும் தங்களது இன்ஸ்டாகிராமில் சாட்டிங் செய்த விபரங்களைக் கொடுத்தார். இருவரும் கொலை தொடர்பாக விவாதித்துள்ளனர். அதோடு ராகுலுக்கும், சுஷ்மிதாவிற்கும் திருமணம் தாண்டிய உறவு இருந்ததும் சாட்டிங் மூலம் தெரிய வந்தது.

அவர்களது உறவுக்கு இடையூராக கரண் இருந்ததால் அவரைக் கொலை செய்ய முடிவு செய்துள்ளனர்.

இதற்காக கரணுக்கு இரவு சாப்பாட்டின் போது 15 தூக்க மாத்திரைகளை சுஷ்மிதா கொடுத்துள்ளார். அதன் பிறகு கரண் மயக்கமடையும் வரை சுஷ்மிதா காத்திருந்துள்ளார். தூக்க மாத்திரை சாப்பிட்டால் எவ்வளவு நேரத்தில் மரணம் வரும் என்று இருவரும் கூகுளில் தேடிப் பார்த்துள்ளனர்.

நீண்ட நேரம் கரண் மயக்க நிலையில் இருந்துள்ளார். அதோடு மூச்சுவிட்டுக்கொண்டிருந்ததை சுஷ்மிதா கண்டுபிடித்து இது குறித்து தனது காதலனிடம் தெரிவித்தார்.

அப்படியென்றால் எலக்ட்ரிக் ஷாக் கொடுக்கும்படி இன்ஸ்டாகிராமில் ராகுல் தெரிவித்துள்ளார். அதன் படி சுஷ்மிதா தனது கணவனுக்கு எலக்ட்ரிக் ஷாக் கொடுத்துள்ளார். அப்படி இருந்தும் மெதுவாக இதயத் துடிப்பு இருப்பதாக சுஷ்மிதா தனது காதலனுக்குத் தெரிவித்தார்.

அதற்கு எஞ்சி மாத்திரைகளையும் கொடுக்கும்படி ராகுல் தெரிவித்தார். ஆனால் தன்னால் கரண் வாயைத் திறக்க முடியவில்லை என்றும், என்னால் தண்ணீர் வேண்டுமானால் ஊற்ற முடியும், மருந்து கொடுக்க முடியாது என்றும், நீயும் வந்தால் இரண்டு பேரும் சேர்ந்து மருந்தைக் கொடுக்க முயற்சி செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

இறுதியில் கரண் இறந்த பிறகு அருகில் இருந்த தனது மைத்துனர் ராகுல் வீட்டிற்குச் சென்று தனது கணவருக்கு எலக்ட்ரிக் ஷாக் அடித்து கீழே மயங்கி விழுந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர்கள் கரணை மருத்துவமனைக்குத் தூக்கிச்சென்றனர்.

கொலை - Murder

கொலையை இரண்டு பேரும் சேர்ந்து விபத்தாக மாற்றுவதற்கு முயற்சி செய்துள்ளனர். ஆனால் இருவரும் சேர்ந்து இதற்காக இன்ஸ்டாகிராமில் சாட்டிங் செய்த விவரம் கரணின் சகோதரர் குணாலுக்குத் தெரிய வந்ததால் இருவரும் சிக்கிக்கொண்டனர்.

குணால் கொடுத்த சாட்டிங் ஆதாரங்களின் அடிப்படையில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து இரண்டு பேரையும் அழைத்துச்சென்று விசாரித்தனர். விசாரணையில் இரண்டு பேரும் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

சுஷ்மிதா அளித்துள்ள வாக்குமூலத்தில், கர்வா சவுத் பண்டிகையின் போது கரண் தன்னை அடித்துத் துன்புறுத்தியதாகவும், அடிக்கடி பணம் கேட்டுத் துன்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

மதுரை: வரதட்சணை கேட்டு மனைவிக்குக் கொடூர சித்திரவதை; தலைமறைவான போலீஸ் கணவன் கைது

கூடுதலாக வரதட்சணை கேட்டு மனைவியைக் கொடூரமாகச் சித்திரவதை செய்த மதுரையைச் சேர்ந்த காவலர் பூபாலன் திருப்பூரில் கைது செய்யப்பட்டார்.கைதுதனியார்ப் பள்ளி ஆசிரியையான தங்கபிரியாவுக்கும், மதுரை அப்பன் திருப்ப... மேலும் பார்க்க

``என் மரணத்துக்கு காரணம்..'' - நொய்டா பல்கலை. மாணவி கடிதம்; பேராசிரியர்கள் கைது.. என்ன நடந்தது?

டெல்லி அருகில் உள்ள கிரேட்டர் நொய்டாவில் இருக்கும் சார்தா பல்கலைக்கழகத்தில் பல் மருத்துவம் படித்து வந்த மாணவி ஜோதி விடுதியில் தற்கொலை செய்து கொண்டார்.அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கடிதம் ஒன்றை... மேலும் பார்க்க

இன்ஸ்டாவில் பழகி, லிவ் இன் உறவில் இருந்த பெண் போலீஸை கொன்ற CRPF வீரர்.. என்ன நடந்தது?

குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் உள்ள அஞ்சார் போலீஸ் நிலையத்தில் உதவி சப் இன்ஸ்பெக்டராக இருப்பவர் அருணாபென். இவருக்கு கடந்த 2021ம் ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர் திலீப் என்பவ... மேலும் பார்க்க

சிகிச்சையில் இருந்த மனைவியை மருத்துவமனைக்குள் புகுந்து குத்தி கொன்ற கணவர்; குளித்தலையில் கொடூரம்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பட்டவர்த்தி பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ரூத். இவர், ஆக்டிங் டிரைவர் ஆக வேலை பார்த்து வருகிறார் இவருக்கும் ஸ்ருதி (வயது: 27) என்பவருக்கும் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள... மேலும் பார்க்க

நாமக்கல்: கடன் தொல்லையால் ரூ. 4 லட்சத்திற்கு கிட்னியை விற்ற பெண்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், குமாரபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பல ஆண்டுகளாக ஏழை தொழிலாளிகளைக் குறிவைத்து சிலர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, அவர்களின் கிட்னியை விற்பதாகப் புக... மேலும் பார்க்க

மும்பை ரயில் நிலையம்: பாலியல் உறவுக்கு மறுத்த பெண்; ரயிலில் தள்ளிக் கொன்ற நபர்; என்ன நடந்தது?

மும்பை ரயில் நிலையங்களில் பொதுவாகவே எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும். மும்பை புறநகரில் உள்ள திவா ரயில் நிலையத்திலிருந்து மகாராஷ்டிராவின் கொங்கன் பகுதிக்கு நீண்ட தூர ரயில்கள் இயக்கப்படுகின்றன.இந்த ர... மேலும் பார்க்க