செய்திகள் :

எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!

post image

மக்களவையில் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய சில நிமிடங்களிலேயே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்றுமுதல் ஆகஸ்ட் 21 வரை மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. இன்று காலை மக்களவை கூடியவுடன் அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிலையில், மக்களவை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியது.

ஆனால், எதிர்க்கட்சிகளின் நோட்டீஸை ஏற்க மறுத்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, அனைத்து கேள்விகளுக்கும் மத்திய அரசு தரப்பு பதிலளிக்க தயாராக இருப்பதாகவும் தற்போது கேள்வி நேரம் தொடங்கும் என்றும் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி மக்களவை கூட்டத்தொடரில் பங்கேற்றிருக்கும் நிலையில், அவரை ஆபரேஷன் சிந்தூர், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கருத்து குறித்து விளக்கம் அளிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் எழுந்து நின்று முழக்கமிட்டனர்.

எதிர்க்கட்சிகள் எழுப்பும் விவகாரங்கள் குறித்து விவாதிக்கவும் அனைத்து எம்பிக்களுக்கும் நேரம் ஒதுக்கப்படும் என்று ஓம் பிர்லா கூறியதை ஏற்க மறுத்து அமளி தொடர்ந்ததால், பகல் 12 மணிவரை அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

The monsoon session of the Lok Sabha was adjourned minutes after the opposition parties started a ruckus.

இதையும் படிக்க : ஆபரேஷன் சிந்தூர்: நாட்டின் ராணுவ வலிமையை உலக நாடுகளே வியந்தன - பிரதமர் மோடி

குஜராத்தில் ஒரே குடும்பத்தில் 5 பேர் தற்கொலை! அதிர்ச்சி தரும் காரணம்

குஜராத் மாநிலத்தில், மூன்று குழந்தைகளைக் கொன்றுவிட்டு, தம்பதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், நிதிநிலைமைதான் இதற்குக் காரணம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்... மேலும் பார்க்க

பாம்பை வெறும் கைகளால் பிடித்த பாலிவுட் நடிகர் சோனு சூட் !

பாலிவுட் நடிகர் சோனு சூட் தனது வீட்டு வளாகத்திற்குள் நுழைந்த பாம்பை வெறும் கைகளால் பிடித்தார். பாலிவுட் நடிகர் சோனு சூட் சனிக்கிழமை தனது இன்ஸ்டா பக்கத்தில் விடியோ ஒன்றை பதிவேற்றியுள்ளார். அதில் அவர் த... மேலும் பார்க்க

மும்பையில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானத்தின் 3 டயர்கள் வெடித்தது!

மும்பையில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானத்தின் மூன்று டயர்கள் வெடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கேரள மாநிலம் கொச்சியில் இருந்து ஏர் இந்தியாவின் ஏஐ2744 விமானம் இன்று காலை மும்பை சத்திரபதி சிவாஜி சர்வத... மேலும் பார்க்க

உ.பி.யில் அம்பேத்கர் சிலையை கால்வாயில் வீசிய மர்மநபர்களால் பரபரப்பு !

உ.பி.யில் அம்பேத்கர் சிலையை பெயர்த்து கால்வாயில் வீசிய மர்மநபர்களால் பரபரப்பு நிலவியது. உத்தரப் பிரதேச மாநிலம், கங்காநகரில் உள்ள கோடாபூர் கிராமத்தில் பி.ஆர். அம்பேத்கரின் சிலை நிறுவப்பட்டிருந்தது. இந்... மேலும் பார்க்க

சசி தரூருக்கு ஒத்துழைப்பு கொடுக்கமாட்டோம்: காங்கிரஸ் மூத்த தலைவர்

காங்கிரஸ் எம்.பி. சசி தரூருக்கு ஒத்துழைப்பு வழங்கமாட்டோம் என்று கேரள காங்கிரஸ் மூத்த தலைவர் கே. முரளீதரன் கூறியுள்ளார். கடந்த 2022 காங்கிரஸ் தலைவர் தேர்தல் முதலே கட்சியின் மீது சசி தரூர் அதிருப்தியில்... மேலும் பார்க்க

தில்லி உயர்நீதிமன்றத்தில் 6 புதிய நீதிபதிகள் பதவியேற்பு!

தில்லி உயர்நீதிமன்றத்தில் ஆறு புதிய நீதிபதிகளாகப் பதவியேற்றுக் கொண்டனர். இதையடுத்து நீதிபதிகளின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் புதிதாக மாற்றப்பட்ட... மேலும் பார்க்க