செய்திகள் :

ஒகேனக்கல் காவிரியில் பரிசல் இயக்க அனுமதி !

post image

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 20,000 குறைந்துள்ளதால், காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

கர்நாடக அணிகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் அவ்வப்போது நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் நீர்வரத்து ஞாயிற்றுக்கிழமை காலை விநாடிக்கு 43,000 கனஅடியாக அதிகரித்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

பின்னர் மாலையில் திடீரென குறைந்து விநாடிக்கு 32,000 கன அடியாகவும், திங்கள்கிழமை காலை விநாடிக்கு 20,000 கன அடியாக குறைந்து தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. தற்போது காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளதால் சின்னாறு பரிசல் துறையிலிருந்து, மணல்மேடு வரை காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்குவதற்கு மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் அனுமதி அளித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது!

தடை நீக்கப்பட்டுள்ளதால் சின்னாறு பரிசல் துறை மீண்டும் திறக்கப்பட்டது. தொடர்ந்து ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கு 3 ஆவது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளதால், காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தின் அளவுகளை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

The district administration has granted permission to operation of Parisal (Coracle) service in the Hogenakkal Cauvery river.

கீழடி அறிக்கை நிராகரிப்பா? அமர்நாத் ராமகிருஷ்ணன் மாற்றம் ஏன்? மக்களவையில் விளக்கம்

மக்களவையில் கீழடி விவகாரம் குறித்து திமுக எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் எழுத்துப்பூர்வமாக எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய கலாசாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பதிலளித்துள்ளார்.நாடாளுமன்ற மழைக்கா... மேலும் பார்க்க

பள்ளிக் கட்டடங்கள் மீது அலட்சியமா? - அண்ணாமலை கேள்வி

தமிழகத்தில் அனைத்து பள்ளிக் கட்டடங்களையும் தர உறுதிப் பரிசோதனைக்கு உள்ளாக்க வேண்டும் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.ஈரோடு கோபிசெட்டிபாளையம் அருகே கூகலூர் ஊராட்சி ஒன்றிய ... மேலும் பார்க்க

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தலைமைச் செயலர்கள் ஆஜர்

சென்னை: தலைமைச் செயலாளர்களுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டதில் நீதிமன்றம் மகிழ்ச்சி கொள்ளவில்லை, தர்மசங்கடமாகவே கருதுகிறது என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித... மேலும் பார்க்க

முதல்வர் மு.க. ஸ்டாலின் விரைவில் வீடு திரும்புவார்: துரைமுருகன்

முதல்வர் மு.க. ஸ்டாலின் நலமுடன் இருக்கிறார், விரைவில் வீடு திரும்புவார் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(திங்கள்கிழமை) காலை வழக்கமான நடைப்பயிற்சியில் ஈடுபட்டிர... மேலும் பார்க்க

திரெளபதி அம்மன் கோயிலில் காளியாட்டம்!

திரெளபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு நகரின் முக்கிய வீதிகளில் காளி ஆட்டம் நடைபெற்றது.தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் அருள்மிகு திரெளபதி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இந்த... மேலும் பார்க்க

மருத்துவமனையில் முதல்வர் அனுமதி: குடும்பத்தினர், அமைச்சர்கள் வருகை!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலினைப் பார்க்க குடும்பத்தினர், அமைச்சர்கள் மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(திங்கள்கிழமை) காலை நடைப்பயிற்சியில் ஈ... மேலும் பார்க்க