செய்திகள் :

தஞ்சாவூர்: மருத்துவக்கல்லூரியில் எழும் பாலியல் குற்றச்சாட்டுகள்- நடவடிக்கை எடுக்குமா விசாகா கமிட்டி?

post image

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவர் அல்லாத மருத்துவம் சார்ந்த பட்டய படிப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு பயிலும் மாணவர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட மாணவி சில தினங்களுக்கு முன்பு பெண்கள் மீதான பாலியல் உள்ளிட்ட பிரச்னைகளை விசாரிக்கும் விசாகா கமிட்டிக்கு புகார் அனுப்பியுள்ளார்.

மாணவிக்கு பாலியல் தொல்லை மாணவர்கள் போராட்டம்

ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சொல்லப்படுகிறது. இதையடுத்து, மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்த மாணவரை உடனடியாக கல்லூரியில் இருந்து நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வகுப்பை புறக்கணித்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி வளாகம் முன்பு கூடி போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து கல்லூரி முதல்வர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியன் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், பாலியல் தொல்லை அளித்த மாணவன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பின்னர், முதல்வர் பாலசுப்பிரமணியன் கூறுகையில், ``தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் பயிலும் மருத்துவ மாணவர் மீது விசாகா கமிட்டியில், மாணவி ஒருவர் கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த, விசாகா கமிட்டி குழு அறிவுரையின்படி சம்பந்தப்பட்ட மாணவர் ஒரு மாத காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேல் நடவடிக்கைக்கு மருத்துவ கல்வி இயக்குநருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது” என்றார்.

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி

இதே போல், கடந்த வருடம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மயக்கவியல் துறை பேராசிரியர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் விசாகா கமிட்டிக்கு புகார் அனுப்பினார். அப்போது பெண் பயிற்சி மருத்துவர்களுக்கு அளிக்கப்படும் பாலியல் தொல்லை குறித்து புகார் தெரிவித்தால், படிப்பு, செய்முறை தேர்வில் கை வைப்பதாக குற்றச்சாட்டு கிளம்பியது. இந்த நிலையில் அந்த மருத்துவரை காப்பாற்றவே பலரும் முனைப்பு காட்டினர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதன் பிறகு விசாகா கமிட்டி விசாரித்து அவர் மீது நடவடிக்கை எடுத்ததா, அந்த விவகாரம் என்ன ஆனது என்பது குறித்து எந்த செய்தியும் வெளிவரவில்லை எனவும் மாணவர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

`உன்னைக் கொன்று பொட்டலமாக அனுப்பி வைப்போம்’ - மாடியிலிருந்து தள்ளிவிடப்பட்ட மனைவி; எஸ்.ஐ மகன் கைது

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகிலுள்ள மேல்நெல்லி கிராமத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் நர்கீஸ். பி.எஸ்.சி பட்டதாரியான நர்கீஸிக்கும், திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகாவுக்குஉட்பட்ட சோழவரம் கி... மேலும் பார்க்க

``அதிக சொத்து யாருக்கு?'' - தந்தையின் இறுதிச்சடங்கை நடத்தவிடாமல் 4 சகோதரர்கள் அடிதடி..

குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகில் உள்ள சரஸ்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஜலுபாய் (78) நேற்று முன் தினம் இறந்து போனார். அவருக்கு மொத்தம் 7 பிள்ளைகள். அதில் 2 பேர் இறந்துவிட்ட நிலையில் 4 மகன்களும், ஒரு ... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: பிரிந்து சென்ற மனைவி மீது சந்தேகம்; கூலிப்படை வைத்து கொன்ற கணவன்; சாயல்குடியில் கொடூரம்

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ளது வெட்டுக்காடு கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெர்மின் (34). இவருக்கும் எல்லை பாதுகாப்புப் படை வீரரான விஜய கோபால் என்பவருக்கும் இடையே 10 ஆண்டுகளுக்கு ... மேலும் பார்க்க

மும்பை: காதலன் துணையோடு கணவனைக் கொன்று வீட்டிற்குள் புதைத்து டைல்ஸ் பதித்த பெண்; சிக்கியது எப்படி?

மும்பை மேற்கு புறநகர்ப் பகுதியில் உள்ள நாலாசோபாரா பகுதியில் வசிப்பவர் விஜய் செளகான். இவரது மனைவி சமன் தேவி (28). கடந்த சில நாட்களாக விஜய் போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அதே பகுதியில் வசிக்கு... மேலும் பார்க்க

திருவள்ளூர் சிறுமி பாலியல் வழக்கு: திணறும் காவல்துறை; ரூ.5 லட்சம் சன்மானம் - என்ன நடக்கிறது?

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தைச் சேர்ந்த சிறுமி, அங்குள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார்.கடந்த 12-ம் தேதி பள்ளி முடிந்து, நண்பகல் நேரத்தில் வீட்டி... மேலும் பார்க்க

வேலூர்: "மொட்டை மாடியில் இருந்து என் கணவர் தள்ளிவிட்டார்"- வரதட்சணைக் கொடுமை புகார் அளித்தப் பெண்

வேலூர் மாவட்டத்தில் கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் தன்னை மாடியில் இருந்து தள்ளிவிட்டதாகக் கூறி பாதிக்கப்பட்ட பெண், கை, கால் உடைந்த நிலையில், ஆம்புலன்சில் வந்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்த சம்ப... மேலும் பார்க்க