செய்திகள் :

ஜக்தீப் தன்கர் ராஜிநாமாவுக்கு ஏதோ அரசியல் காரணங்கள் உள்ளது: காங்கிரஸ்!

post image

குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் ராஜிநாமாவில் ஏதோ அரசியல் காரணங்கள் உள்ளதாக உள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் 14-வது குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தனது பதவியை திங்கள்கிழமை திடீரென ராஜிநாமா செய்யப்போவதாக குடியரசுத் தலைவர் முர்முக்கு அவர் ராஜிநாமா கடிதத்தைத் திங்களன்று கடிதம் அனுப்பினார். அவருக்கு இன்னும் சுமார் 2 ஆண்டுகள் பதவிக்காலம் உள்ள நிலையில் உடல்நலனுக்கு முக்கியத்துவம் அளிக்க இந்த முடிவை எடுத்ததாக தனது ராஜிநாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் ஜக்தீப் தன்கர் ராஜிநாமாவில் ஏதோ அரசியல் நோக்கம் இருப்பதாக அவர் தனது முடிவைத் திரும்பப்பெற வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளதாவது,

ஜகதீப் தன்கரின் இந்த முடிவு அதிர்ச்சியளிக்கிறது. நேற்று நண்பகல் 12.30 மணிக்கு அலுவல் ஆலோசனைக் குழுவுக்குத் தலைமை தாங்கினார். நட்டா, கிரண் ரிஜிஜூ உள்ளிட்ட பெரும்பாலான உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். சிறிது நேர விவாதம் முடிந்த பின்னர் மீண்டும் மாலை 4.30 மணிக்கு அவை கூட முடிவு செய்தது.

அதேபோல் மாலை 4.30 மணிக்கு ஜக்தீப் தன்கர் தலைமையில் மீண்டும் குழு கூடியது. ஆனால் நட்டா, கிரன் ரிஜிஜூ வருகைக்காகக் காத்திருந்தபோது, அவர்கள் வரவேயில்லை. இரண்டு மூத்த அமைச்சர்களும் கலந்துகொள்ளாதது ஐக்தீப் தன்கருக்கு தெரிவிக்கப்படவில்லை. அவர் கோபமடைந்த அன்றைய நாள் முழுவதும் அலுவல் ஒத்திவைத்தார்.

நேற்று மதியம் ஏதோ ஒன்று நடந்திருக்கிறது. இப்போது ஜக்தீப் தன்கர் ராஜிநாமா செய்துள்ளார். அதற்கு அவர் உடல்நல பாதிப்பு பற்றி காரணங்களைச் சொல்லியுள்ளார்.

பிகாரில் 52 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்! - தேர்தல் ஆணையம்

ராஞ்சி: பிகார் மாநிலத்தில் 52 லட்சம் வாக்காளா்கள் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.7 லட்சம் போலி வாக்காளர்கள் பதிவு செய்திருப்பது தேர்தல் ஆணையத்தின் வாக்க... மேலும் பார்க்க

கிராமப்புற வேலைவாய்ப்புக்காக மாநிலங்களுக்கு ரூ. 44,000 கோடி விடுவிப்பு: மத்திய அரசு

புது தில்லி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் மாநிலங்களுக்கு ரூ. 44,323 கோடி விடுவிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு மாநிலங்களவையில் பதிலதித்துள்ளது.நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜூலை 21 த... மேலும் பார்க்க

35 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களுக்கு 5.9 லட்சம் பேர் விண்ணப்பம்!

மேற்கு வங்கத்தில் ஆசிரியர் பணிக்கு 5.9 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக அம்மாநில பள்ளிக் கல்வி சேவை ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த 2016 உடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை இரு மடங்காகியுள்ளதாகவும் தெரிவித்... மேலும் பார்க்க

தரையிறங்கிய உடனே தீப்பற்றி எரிந்த ஏர் இந்தியா விமானம்: பயணிகள் பத்திரமாக மீட்பு!

புது தில்லி: தரையிறங்கிய உடனே ஏர் இந்தியா விமானம் தீப்பற்றி எரிந்ததால் தில்லி சர்வதேச விமான நிலையத்தில் பதற்றமான சூழல் நிலவியது.ஏர் இந்தியாவின் ஏஐ 315 விமானம் ஹாங் காங்கிலிருந்து புறப்பட்டு தில்லியில்... மேலும் பார்க்க

ஆதார், ரேஷன், வாக்காளர் அடையாள அட்டை நம்பகமான ஆவணங்கள் அல்ல: உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்

பிகாரில் நடைபெற்றுவரும் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு ஆதார், குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நம்பகமான ஆவணங்கள் அல்ல என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.மேலும், சிறப்... மேலும் பார்க்க

பாஜக ஆளும் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரிப்பு - முன்னாள் முதல்வர் கண்டனம்!

புவனேசுவரம் : ஒடிஸாவில் அண்மைக்காலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகமாக நடைபெறுவதாக நவீன் பட்நாயக் குறிப்பிட்டுள்ளார். பாஜக ஆளும் ஒடிஸாவில் காவல் நிலைய விவகாரங்களில் உள்ளூர் தலைவர்களின... மேலும் பார்க்க