செய்திகள் :

ஜூலை 24-ல் அறிமுகமாகிறது ரியல் மீ 15 ப்ரோ! சிறப்பம்சங்கள் என்னென்ன?

post image

ரியல் மீ நிறுவனம் புதிதாக இரு மத்திய ரக ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளது. ரியல் மீ 15 மற்றும் ரியல் மீ 15 ப்ரோ ஆகிய இரு ஸ்மார்ட்போன்கள் ஜூலை 24ஆம் தேதி இரவு 7 மணிக்கு அறிமுகமாகிறது.

சீனாவை தலைமையிடமாகக் கொண்ட ரியல் மீ நிறுவனம் இந்திய பயனர்களைக் கவரும் வகையில் பல்வேறு அம்சங்களுடன் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது.

அந்தவகையில் தற்போது மத்திய ரகத்தில் ரியல் மீ 15 மற்றும் ரியல் மீ 15 ப்ரோ ஆகிய இரு ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது.

சில்வர், வெல்வெட் பச்சை, ஊதா ஆகிய நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ரியல் மீ விலை ரூ. 25,000 என்றும், ரியல் மீ 15 ப்ரோ விலை ரூ. 39,999 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ரியல் மீ 15 ப்ரோ அடிப்படை வேரியன்ட் விலை ரூ. 30,000.

ரியல் மீ 15 சிறப்பம்சங்கள் என்னென்ன?

  • ரியல் மீ 15 ஸ்மார்ட்போனானது 6.8 அங்குல அமோலிட் திரை கொண்டது. திரையின் பிரகாசம் 6,500 nits அளவுடையது. பயன்படுத்துவதற்கு திரை சுமுகமாக இருக்கும் வகையில்144Hz திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

  • மீடியாடெக் டைமன்சிட்டி 7300+ புராசஸர் உடையது.

  • 7,000 mAh பேட்டரி திறனுடன், வேகமாக சார்ஜ் செய்யும் வகையில் 80W திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

  • பின்புறம் 50MP முதன்மை கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 8MP அல்ட்ரா வைட் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபி பிரியர்களுக்காக 50MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

  • பேட்டரி திறன் அதிகமாக உள்ளதால், 7.66mm தடிமன் கொண்டதாக இருக்கும்.

  • தூசி மற்றும் நீர் புகாத்தன்மையுடன் இருக்கும் வகையில் IP68 மற்றும் IP69 திறன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ரியல் மீ 15 ப்ரோ சிறப்பம்சங்கள் என்னென்ன?

  • ரியல் மீ 15க்கு கொடுக்கப்பட்டுள்ள சிறப்பம்சங்களுடன் கூடுதலாக அல்ட்ரா வைட் லென்ஸுக்காக 50MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

  • ரியல் மீ 15-ஐ விட சற்று அதிகமாக, இந்த மாடல் 7.69 மி.மீ. தடிமன் உடையது.

இதையும் படிக்க |

15% ஏற்றத்துடன் வெற்றி ஓட்டத்தில் எடர்னல்!

புதுதில்லி: ஜூன் வரையான காலாண்டு வருவாய்க்கு பிறகு, ஜொமாடோ மற்றும் பிளிங்கிட் பிராண்டுகளுக்குச் சொந்தமான உணவு விநியோக மற்றும் விரைவு வர்த்தக நிறுவனமான எடர்னல் பங்குகள் சுமார் 15 சதவிகிதம் உயர்ந்தன.பிஎ... மேலும் பார்க்க

சோலெக்ஸ் எனர்ஜியின் வருவாய் 84% அதிகரிப்பு!

புதுதில்லி: சோலார் தகடுகளை தயாரிப்பாளர் மற்றும் இ.பி.சி. சேவை வழங்குநருமான சோலெக்ஸ் எனர்ஜி ஏப்ரல் முதல் ஜூன் முடிய உள்ள காலாண்டில் அதன் வருவாய் 84 சதவிகிதம் அதிகரித்து ரூ.260 கோடியாக உள்ளதாக தெரிவித்த... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் குறைந்து ரூ.86.36 ஆக நிறைவு!

மும்பை: ஆகஸ்ட் 1 காலக்கெடுவிற்கு முன்னதாக அமெரிக்க-இந்தியா வர்த்தக ஒப்பந்தம் குறித்த நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில், இன்றைய வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 5 காசுகள் குறைந்து ரூ.... மேலும் பார்க்க

நிலையற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 25,060.90 புள்ளிகளாகவும் சென்செக்ஸ் 82,186.81 புள்ளிகளாக நிறைவு!

மும்பை: இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 337.83 புள்ளிகள் உயர்ந்து 82,538.17 ஆக இருந்தது. நேரம் செல்ல செல்ல வேகம் இழந்தது, 30-பங்கு கொண்ட சென்செக்ஸ் 13.53 புள்ளிகள் சரிந்து 82,186.81 ஆகவும் 5... மேலும் பார்க்க

விவோ எக்ஸ் 200 எஃப்இ விற்பனை நாளை முதல் இந்தியாவில் தொடக்கம்!

விவோ எக்ஸ் 200 எஃப்இ ஸ்மார்ட்போன் கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகமான நிலையில், இதன் விற்பனை நாளை (ஜூலை 23) முதல் இந்திய சந்தைகளில் தொடங்கவுள்ளது. சிறந்த போட்டோகிராபி, பேட்டரி திறன், திரையின் தரம் ஆகியவ... மேலும் பார்க்க

லாபக் கணக்கில் ரிலையன்ஸ் பவர்! அனில் அம்பானியின் ஏறுமுகத்துக்கு என்ன காரணம்?

கடன், நஷ்டம் போன்ற செய்திகளால் மட்டும் பிரபலமடைந்து வந்த தொழிலதிபர் அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் பவர் நிறுவனம் தற்போது, தொடர்ச்சியான காலாண்டுகளில் லாபம் ஈட்டியுள்ளதாக அறிவித்துள்ளது. தொடர்ந்து இ... மேலும் பார்க்க