செய்திகள் :

தவெகவும் அதிமுக - பாஜக கூட்டணியில் இணைய வேண்டும்! - விஜய்க்கு இபிஎஸ் அழைப்பு

post image

அதிமுக - பாஜக கூட்டணியில் தவெகவும் இணைய வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழகத்தில் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக - பாஜக கூட்டணியும் முடிவாகியுள்ள நிலையில், நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் ஆகியவை தனித்துப் போட்டிட முடிவெடுத்துள்ளன. இதனால், தமிழகப் பேரவைத் தேர்தலில் கிட்டத்தட்ட மும்முனை அல்லது நான்கு முனை போட்டி நிலவுகிறது.

திமுகவுக்கு எதிரான ஒத்தக் கருத்துடைய நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் ஆகியவையும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையுமா? என்ற எதிர்பார்ப்புகளும் நிலவுகின்றன.

நாம் தமிழர் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமானிடம், அதிமுக கூட்டணியில் இணைவீர்களா? என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, “ராணுவ ரகசியம் போன்றது பின்னர் தெரிவிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், தமிழக வெற்றிக் கழத்தின் முதல்வர் வேட்பாளராக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கான தீர்மானம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவெக இணையுமா? என்பது குறித்து அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தனியார் செய்தி நிறுவனத்துக்கு பதிலளித்துள்ளார்.

அந்தப் பேட்டியில், “அதிமுக-பாஜக கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகமும் இணைய வேண்டும். ஒத்த கருத்துடைய கட்சிகள் எங்களுடன் வரலாம். இது தவெகவுக்கும் பொருந்தும். இருப்பினும், தவெகவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

Regarding EPS's call to Vijay to join the AIADMK-BJP alliance

இதையும் படிக்க :பாஜக விழுங்குவதற்கு பழனிசாமி ஒன்றும் புழுவல்ல: இபிஎஸ் பேச்சு

சீமானுக்கு புதிய பாஸ்போர்ட் வழங்க நீதிமன்றம் உத்தரவு!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு 4 வாரங்களில் புதிய கடவுச்சீட்டு(பாஸ்போர்ட்) வழங்க மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிலுவையில் உள்ள வழக்குகளினால் ம... மேலும் பார்க்க

சேவகனாக பணியாற்றி நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாப்பேன்: ஸ்ரீவாஸ்தவா உறுதி!

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக அல்லாமல் சேவகனாக பணியாற்றி நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாப்பேன் என்று புதிய தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா உறுதி அளித்துள்ளார். சென்னை உயர்நீத... மேலும் பார்க்க

2026 தேர்தலில் வெற்றி பெற்று வரலாறு படைக்கும்! - இபிஎஸ் அழைப்பை நிராகரித்த தவெக!

திமுகவுக்கு எதிரான கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையலாம் என எடப்பாடி பழனிசாமியின் அழைப்பை தமிழக வெற்றிக் கழகம் நிராகரித்துள்ளது.தமிழகத்தில் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கும் நில... மேலும் பார்க்க

நீலகிரி உள்பட 4 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், • வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஓட்டிய பகுதிகளின் மேல்... மேலும் பார்க்க

குரூப் 4 தேர்வை ரத்து செய்ய வேண்டும்! - இபிஎஸ் வலியுறுத்தல்

குரூப் 4 தேர்வில் குளறுபடிகள் நடந்துள்ளதால் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா், தட்டச்சா், சுருக்கெழ... மேலும் பார்க்க

மருத்துவமனையிலிருந்து அலுவல்களைக் கவனிக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

முதல்வர் மு.க. ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்தே அலுவல்களை கவனித்து வருவதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று(திங்கள்கிழமை) காலை நடைப்பயிற்சியின்போது லேசாக தலைசுற்றல் ஏற்ப... மேலும் பார்க்க