செய்திகள் :

அதிமுகவை எதிர்க்காதது ஏன்? தவெக விளக்கம்!

post image

அதிமுகவை எதிர்க்காதது ஏன் என்றால், அதிமுக தொண்டர்கள் அனைவரும் தவெகவில் இணைந்து விட்டனர் என்று தவெக தேர்தல் பிரசார மேலாண்மைப்பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார்.

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள போஸ் திடலில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மை மேலாண்மைப்பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா கொள்கைப் பரப்புச் செயலாளர் ராஜ்மோகன் ஆகியோர் பங்கேற்றனர்.

தேர்தல் மேலாண்மைப்பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசுகையில், “70 வயதுக்கு மேற்பட்டவர்களைக் கொண்டவர்களாக திமுக இருக்கிறது. நாட்டின் அரசியலை தீர்மானிக்கும் இளைஞர்களைக் கொண்டவர்களாக தவெக இருக்கிறது.

அண்ணா, திமுகவை ஆரம்பிக்கும்போது முற்றிலும் இளைஞர்களைக் கொண்டவர்களாக இருந்தது. அதைப் போலவே தற்போது தமிழக வெற்றிக்கழகம் உள்ளது. ஆனால் நம்மைப் பார்த்து திமுக கேள்வி கேட்கிறது.

பேசிப் பேசி வளர்ந்த திமுகவிற்கு, இன்றைக்கு பேச ஆள் இல்லை. அதனால்தான், திமுக ஐஏஎஸ் அதிகாரிகளை பேச பயன்படுத்துகிறது.

ஆட்சி அதிகாரத்திற்கு வராத தவெக-ஐ பார்த்து ஏகப்பட்ட கேள்விகளை கேட்கிறார்கள். ஆனால், திமுகவை பார்த்து எந்த கேள்விகளும் கேட்கப்படுவதில்லை.

தீயசக்தியாக ஒரே குடும்பம் ஆண்டு கொண்டிருந்ததை எதிர்த்து அதிமுகவை எம்.ஜி.ஆர் உருவாக்கினார். அதே உணர்வுடன், விஜய் தவெக உருவாக்கியுள்ளார்.

அதிமுகவில் ஜெயலலிதா மோடியா? லேடியா? என குரல் எழுப்பிய நிலை இன்று இல்லை. இன்றைக்கு பாரதிய ஜனதாக் கட்சியுடன் கூட்டணி அமைத்து விட்டு, இன்றைக்கு அந்தக் கூட்டணிக்கு யார் தலைவர் என்றே தெரியவில்லை.

நாங்கள் ஏன் அதிமுகவை எதிர்க்கவில்லை என்றால், அதிமுக தொண்டர்கள் அனைவரும் தவெகவில் இணைந்து விட்டார்கள் என்பதால்தான்.

எவ்வளவு பெரிய கூட்டணியாக இருந்தாலும் மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டால் யாராலும் வெற்றி பெற முடியாது” என்றார்.

ஜூலை 27ல் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை?

தமிழகம் வரும் பிரதமர் மோடி வருகிற ஜூலை 27 ஆம் தேதி தஞ்சாவூரில் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடி வருகிற ஜூலை 26 ஆம் தேதி தமிழகம் வரு... மேலும் பார்க்க

சீமானுக்கு புதிய பாஸ்போர்ட் வழங்க நீதிமன்றம் உத்தரவு!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு 4 வாரங்களில் புதிய கடவுச்சீட்டு(பாஸ்போர்ட்) வழங்க மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிலுவையில் உள்ள வழக்குகளினால் ம... மேலும் பார்க்க

சேவகனாக பணியாற்றி நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாப்பேன்: ஸ்ரீவாஸ்தவா உறுதி!

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக அல்லாமல் சேவகனாக பணியாற்றி நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாப்பேன் என்று புதிய தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா உறுதி அளித்துள்ளார். சென்னை உயர்நீத... மேலும் பார்க்க

2026 தேர்தலில் வெற்றி பெற்று வரலாறு படைக்கும்! - இபிஎஸ் அழைப்பை நிராகரித்த தவெக!

திமுகவுக்கு எதிரான கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையலாம் என எடப்பாடி பழனிசாமியின் அழைப்பை தமிழக வெற்றிக் கழகம் நிராகரித்துள்ளது.தமிழகத்தில் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கும் நில... மேலும் பார்க்க

நீலகிரி உள்பட 4 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், • வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஓட்டிய பகுதிகளின் மேல்... மேலும் பார்க்க

குரூப் 4 தேர்வை ரத்து செய்ய வேண்டும்! - இபிஎஸ் வலியுறுத்தல்

குரூப் 4 தேர்வில் குளறுபடிகள் நடந்துள்ளதால் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா், தட்டச்சா், சுருக்கெழ... மேலும் பார்க்க