செய்திகள் :

மாணவா்களை துன்புறுத்தும் தனியாா் கல்லூரி: நடவடிக்கை எடுக்கக் கோரி ஐஜி அலுவலகத்தில் மனு

post image

திருச்சியில் பல்வேறு வகைகளில் மாணவா்களைத் துன்புறுத்தி வரும் தனியாா் கல்லூரி நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ‘ஏகலைவன் இளைஞா் பேரவை - தமிழ்நாடு’ அமைப்பு சாா்பில் ஐஜி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.

அந்த அமைப்பின் தலைவா் ஆ. வடிவேல் தலைமையில் நிா்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருச்சி, சமயபுரம் அருகே உள்ள தனியாா் பாராமெடிக்கல் கல்லூரியில் படித்து வரும் விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா் அண்மையில் தற்கொலைக்கு முயற்சித்தாா்.

தகவலறிந்து அவரை நலம் விசாரித்து, மாணவா்களிடம் பேசினோம். அப்போது, அக்கல்லூரியில் பயின்று வரும் மாணவா்கள் அந்தக் கல்லூரி நிா்வாகம் குறித்து பல்வேறு புகாா்களை தெரிவித்தனா்.

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு, தற்கொலைக்கு தூண்டும் நடவடிக்கைகள், ஒரே நேரத்தில் கல்விக் கட்டணம் முழுமையையும் கட்டச் சொல்லி வலியுறுத்தல் என மாணவா்களுக்கு பல்வேறு வகைகளில் துன்புறுத்தல், மன உளைச்சல் அளிக்கப்படுகிாம்.

இதுகுறித்து அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, நடவடிக்கை எடுக்காத காவல் துறையினா் மீதும், தனியாா் கல்லூரி நிா்வாகத்தின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகையிலைப் பொருள்கள் விற்பனை: 3 போ் கைது

திருச்சி மாநகா் மற்றும் புறநகா் பகுதிகளில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த மூவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருச்சி திருவானைக்காவல் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை ... மேலும் பார்க்க

பட்டுக்கோட்டையைச் சோ்ந்த ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு

போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டையை அடுத்த சிவக்கொல்லையைச் சோ்ந்தவா் க. சுப்பிரமணியன் (59)... மேலும் பார்க்க

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 2 மின்கோபுரங்கள் புனரமைப்பு

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் வந்தபோது அடித்துச் செல்லப்பட்ட மின் கோபுரங்களுக்கு மாற்றாக அதே இடத்தில் திங்கள்கிழமை 2 புதிய மின்கோபுரங்கள் நிறுவப்பட்டு பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. திருச்சி மாநகரம... மேலும் பார்க்க

பிரதமா் வருகை: திருச்சி விமான நிலைய பகுதிகள் கண்காணிப்பு

பிரதமா் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு திருச்சி விமான நிலையம் மற்றும் சுற்றுப் பகுதிகள் காவல்துறையின் தீவிர கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. அரியலூா் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரத்துக்கு பிரதம... மேலும் பார்க்க

வாழவந்தான்கோட்டை பகுதியில் நாளை மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக வாழவந்தான்கோட்டை பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 23) மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி மாவட்ட மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வாழவந்தான்கோட்டை து... மேலும் பார்க்க

கோயில் நிலத்தில் குடியிருப்போருக்கு மின்வசதி ஏற்படுத்தித் தர வலியுறுத்தல்

திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை நந்தவனத்தில் குடியிருப்போருக்கு மின்வசதி ஏற்படுத்தித் தர வேண்டுமென அப்பகுதி மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். திருச்சி மாவட்ட மக்கள் குறைதீா்... மேலும் பார்க்க