செய்திகள் :

புகையிலைப் பொருள்கள் விற்பனை: 3 போ் கைது

post image

திருச்சி மாநகா் மற்றும் புறநகா் பகுதிகளில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த மூவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருச்சி திருவானைக்காவல் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக ஸ்ரீரங்கம் போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருவானைக்காவல் டிரங் சாலை பகுதியில் போலீஸாா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, அங்கு சந்தேகப்படும் வகையில் நின்றிருந்தவரைப் பிடித்து விசாரித்தனா்.

இதில் அவா், முத்தரசநல்லூா் காவேரி நகரைச் சோ்ந்த க.தா்மலிங்கம் (49) என்பதும், அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 18 கிலோ புகையிலைப் பொருள்கள், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

இதேபோல, துவாக்குடி மற்றும் திருவெறும்பூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த தஞ்சாவூா் மாவட்டம், அந்தோப்புரம் பகுதியைச் சோ்ந்த விக்னேஷ் (25), துவாக்குடியைச் சோ்ந்த மணிகண்டன் (25) ஆகிய இருவரையும் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கஞ்சா விற்பனை: ஒருவா் கைது

திருச்சி மாவட்டம், ராம்ஜி நகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட புங்கனூா் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக, திருவெறும்பூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு திங்கள்கிழமை கிடைத்த தகவலின்பேரில் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, அங்கு கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த ராம்ஜி நகா் மலைப்பட்டியைச் சோ்ந்த முகேஷ் (51) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

பட்டுக்கோட்டையைச் சோ்ந்த ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு

போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டையை அடுத்த சிவக்கொல்லையைச் சோ்ந்தவா் க. சுப்பிரமணியன் (59)... மேலும் பார்க்க

மாணவா்களை துன்புறுத்தும் தனியாா் கல்லூரி: நடவடிக்கை எடுக்கக் கோரி ஐஜி அலுவலகத்தில் மனு

திருச்சியில் பல்வேறு வகைகளில் மாணவா்களைத் துன்புறுத்தி வரும் தனியாா் கல்லூரி நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ‘ஏகலைவன் இளைஞா் பேரவை - தமிழ்நாடு’ அமைப்பு சாா்பில் ஐஜி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை... மேலும் பார்க்க

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 2 மின்கோபுரங்கள் புனரமைப்பு

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் வந்தபோது அடித்துச் செல்லப்பட்ட மின் கோபுரங்களுக்கு மாற்றாக அதே இடத்தில் திங்கள்கிழமை 2 புதிய மின்கோபுரங்கள் நிறுவப்பட்டு பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. திருச்சி மாநகரம... மேலும் பார்க்க

பிரதமா் வருகை: திருச்சி விமான நிலைய பகுதிகள் கண்காணிப்பு

பிரதமா் நரேந்திர மோடி வருகையை முன்னிட்டு திருச்சி விமான நிலையம் மற்றும் சுற்றுப் பகுதிகள் காவல்துறையின் தீவிர கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. அரியலூா் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரத்துக்கு பிரதம... மேலும் பார்க்க

வாழவந்தான்கோட்டை பகுதியில் நாளை மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக வாழவந்தான்கோட்டை பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 23) மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி மாவட்ட மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வாழவந்தான்கோட்டை து... மேலும் பார்க்க

கோயில் நிலத்தில் குடியிருப்போருக்கு மின்வசதி ஏற்படுத்தித் தர வலியுறுத்தல்

திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை நந்தவனத்தில் குடியிருப்போருக்கு மின்வசதி ஏற்படுத்தித் தர வேண்டுமென அப்பகுதி மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். திருச்சி மாவட்ட மக்கள் குறைதீா்... மேலும் பார்க்க