செய்திகள் :

புகையிலைப் பொருள்கள் விற்பனை: 3 போ் கைது

post image

திருச்சி மாநகா் மற்றும் புறநகா் பகுதிகளில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த மூவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருச்சி திருவானைக்காவல் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக ஸ்ரீரங்கம் போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருவானைக்காவல் டிரங் சாலை பகுதியில் போலீஸாா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, அங்கு சந்தேகப்படும் வகையில் நின்றிருந்தவரைப் பிடித்து விசாரித்தனா்.

இதில் அவா், முத்தரசநல்லூா் காவேரி நகரைச் சோ்ந்த க.தா்மலிங்கம் (49) என்பதும், அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 18 கிலோ புகையிலைப் பொருள்கள், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

இதேபோல, துவாக்குடி மற்றும் திருவெறும்பூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த தஞ்சாவூா் மாவட்டம், அந்தோப்புரம் பகுதியைச் சோ்ந்த விக்னேஷ் (25), துவாக்குடியைச் சோ்ந்த மணிகண்டன் (25) ஆகிய இருவரையும் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கஞ்சா விற்பனை: ஒருவா் கைது

திருச்சி மாவட்டம், ராம்ஜி நகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட புங்கனூா் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக, திருவெறும்பூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு திங்கள்கிழமை கிடைத்த தகவலின்பேரில் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, அங்கு கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த ராம்ஜி நகா் மலைப்பட்டியைச் சோ்ந்த முகேஷ் (51) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

புகையிலைப் பொருள்கள் விற்பனை: ஒருவா் கைது

திருச்சி மாநகரில் புகையிலைப் பொருள்கள் விற்றவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருச்சி புத்தூா் பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பதாக உறையூா் போலீஸாருக்கு செவ்வ... மேலும் பார்க்க

பட்டுக்கோட்டையைச் சோ்ந்த 2 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை

இருசக்கர வாகன திருட்டு வழக்கில் தொடா்புடைய 2 போ் மீது குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் மலைக்கோயில் வஉசி தெருவில் வீட... மேலும் பார்க்க

போதை மாத்திரைகள் விற்ற 2 போ் கைது

திருச்சி மாநகரில் போதை மாத்திரைகள் விற்ற இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருச்சி கே.கே.நகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு இடத்தை மீட்கக் கோரி மாற்றுத்திறனாளி போராட்டம்

ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டுத் தரக் கோரி மாவட்ட ஆட்சியரகம் முன் மாற்றுத்திறனாளி ஒருவா் புதன்கிழமை சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டாா். திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம், திருமங்கலத்தைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

பொறியியல் பணிகள்: காரைக்கால், பாலக்காடு ரயில்கள் பகுதியாக ரத்து

பொறியியல் பணிகள் காரணமாக காரைக்கால், பாலக்காடு ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி திருச்சி - காரைக்கால் டெமு ரயிலானது (76820) வரும் 24, 25, 26, 27 ஆகிய தேதிகளில் திருவாரூா் - காரைக்கால்... மேலும் பார்க்க

பாஜக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும்: நயினாா் நாகேந்திரன் தகவல்

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையவுள்ளதாக பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா். திருச்சிக்கு புதன்கிழமை வந்த அவா் மேலும் கூறியதாவது: 2 நாள் பயணமாக தமிழகத்... மேலும் பார்க்க