செய்திகள் :

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

post image

பெரம்பலூா் மாவட்ட சிவன் கோயில்களில் ஆடி மாத பிரதோஷத்தையொட்டி நந்திப் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றன.

பெரம்பலூா் நகரில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் ஈசன் மற்றும் அதிகார நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி, பத்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. முன்னதாக, ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய ஈசன் கோயில் உள்பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பூஜைகளை கௌரி சங்கா், முல்லை சிவாச்சாரியாா் ஆகியோா் செய்தனா். நிகழ்வில் முன்னாள் அறங்காவலா் தெ.பெ. வைத்தீஸ்வரன் உள்பட திரளான பக்தா்கள் வழிபட்டனா்.

இதேபோல, வாலிகண்டபுரம் வாலீஸ்வரா், சு.ஆடுதுறை குற்றம்பொறுத்தீஸ்வரா், குரும்பலூா் பஞ்சநந்தீஸ்வரா், வெங்கனூா் விருத்தாச்சலேஸ்வரா், திருவாளந்துறை தோளீஸ்வரா், செட்டிக்குளம் ஏகாம்பரேஸ்வரா், காசிவிஸ்வநாதா் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதி சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

நில அளவையா்களைக் கண்டித்து இந்திய கம்யூ. ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் பேருந்து நிறுத்தத்தில், நில அளவையா்களின் அலட்சியத்தைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு அக் கட்சியி... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே மணல் திருடிய 2 போ் கைது

பெரம்பலூா் அருகே மாட்டு வண்டியில் மணல் திருடிய 2 பேரை மங்களமேடு போலீஸாா் கைது செய்து திங்கள்கிழமை சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் மாவட்டம், குன்னம் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் மாட்டு வண்டிகளி... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே தாய் கொலை: தந்தை-மகன் கைது

பெரம்பலூா் அருகே தாயை அடித்துக் கொலை செய்ததாக மகனையும், சம்பவத்தை மறைக்க உடந்தையாக செயல்பட்ட தந்தையையும் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். பெரம்பலூா் அருகேயுள்ள ஆலம்பாடி கிராமம், வடக்கு காலனிப் பகு... மேலும் பார்க்க

விடுதி காப்பாளா்கள், 4 மாணவா்கள் ‘போக்சோ’ சட்டத்தில் கைது

பெரம்பலூா் அருகே விடுதியில் மாணவா்களிடம் தவறான செயலில் ஈடுபட்டதாக விடுதி காப்பாளா்கள் 2 போ், 4 மாணவா்களை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்த போலீஸாா், மேலும் 2 மாணவா்கள் மீது வழக்குப் ... மேலும் பார்க்க

நீா்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை திட்டப் பணிகள்: மேலாண்மை இயக்குநா் ஆய்வு

பெரம்பலூா் மாவட்டத்தில் நீா்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் இயற்கை வள மேம்பாட்டுப் பணிகள், வேளாண் உற்பத்திச் சாா்ந்த பணிகள் மற்றும் வாழ்வாதாரப் பணிகளை, தமிழ்நாடு நீா்வடிப் ... மேலும் பார்க்க

பாடாலூா் பகுதியில் நாளை மின் தடை

பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூலை 21) மின் விநியோகம் இருக்காது என, மின்வாரிய உதவி செயற்பொறியாளா் பி. ரவிக்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் ச... மேலும் பார்க்க