செய்திகள் :

திண்டுக்கல்: மாநகராட்சி ஒப்பந்ததாரர் காரில் கடத்திக் கொலை; ஐந்து பேர் கைது!

post image

திண்டுக்கல், மேட்டுபட்டியை சேர்ந்தவர் முருகன் என்கிற பாத்ரூம் முருகன் (56). தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள கழிவறைகளை டெண்டர் எடுப்பவர் என்பதால் இவர் பாத்ரூம் முருகன் என்று சுற்றுவட்டார பகுதிகளில் அறியப்படுகிறார். ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் கட்டபஞ்சாயத்துகளில் ஈடுபடுவார் என்றும் இவருக்கு சொந்தமாக திண்டுக்கலில் லாட்ஜ் ஒன்று இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஐந்து பேர் கொண்ட கும்பல் இவரை நேற்று காரில் கடத்தி சென்றுள்ளனர். பாலமேடு அருகே முருகனை கடத்தி வைத்துள்ளதை போலீசார் ட்ராக் செய்து பிடிக்க முயன்ற போது பாலமேட்டில் இருந்து கோபால்பட்டி வந்து கொண்டிருந்தபோதே இவரை காரில் வைத்து குத்தி கொலை செய்துவிட்டு, தப்பி சென்றுள்ளனர்.

போலீசார் தப்பி சென்றவர்களை துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு சென்ற மாவட்ட எஸ்.பி பிரதீப் ஆய்வு செய்தார். திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் உள்ள காளியம்மன் கோவில் வரவு செலவு கணக்கில் ஏற்பட்ட பிரச்னையால் அதே பகுதியை சேர்ந்தவர்களால் பாத்ரூம் முருகன் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக சாணார்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

``பேரல்களை அடுக்கி, சுவர் ஏறி குதித்தேன்" - கண்ணூர் சிறையிலிருந்து தப்பிய கோவிந்தசாமி சொல்வது என்ன?

கேரள மாநிலம், கொச்சியில் இருந்து சொர்ணூர் சென்ற ரயிலில் 2011-ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி பயணித்தார் தனியார் நிறுவன ஊழியரான செளமியா(23). அதே ரயிலில் பயணித்த தமிழ்நாட்டின் விருத்தாச்சலத்தைச் சேர்ந்த கோவ... மேலும் பார்க்க

சென்னை: திருமணமான பெண்ணுடன் குடும்பம் நடத்திய வடமாநில இளைஞர் - கொலையில் முடிந்த கூடா நட்பு!

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்தவர் கணேசமூர்த்தி (47). இலரின் மனைவி சரசு (38). இந்தத் தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் சற்று மூளை வளர்ச்சி குன்றியவர். கணேசமூர... மேலும் பார்க்க

சாத்தான்குளம் லாக்கப் டெத்: அப்ரூவராக மாற விரும்பும் ஸ்ரீதர்; எதிர்க்கும் சிபிஐ.. பின்னணி என்ன?

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்த பணி நீக்கம் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மனுச்செய்துள்ள நிலையில், அதை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று சிபிஐ தரப்பில் எதிர்ப்பு ... மேலும் பார்க்க

கண்ணாடி துகள்; சீனா டிவைஸ்; 100 வழக்குகள் - சொகுசு கார் திருடனின் பகீர் பின்னணி!

சென்னை, அண்ணாநகர் மேற்கு, 16வது மெயின்ரோடு, கதிரவன் காலனியில் குடியிருந்து வருபவர் எத்திராஜ் ரத்தினம். இவர் கடந்த 10.06.2025-ம் தேதி தன்னுடைய Toyoto Fortuner காரை வீட்டின் எதிரில் நிறுத்தி வைத்திருந்த... மேலும் பார்க்க

திருச்சி: கோயில் திருவிழாவில் வாண வெடி வெடித்து குழந்தை பலி; தாய் படுகாயம்; என்ன நடந்தது?

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே இருக்கும் திருப்பைஞ்ஞீலி ஊராட்சியில் உள்ள மூவராயன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பூவரசன். இவர், கொத்தனாராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மனோகரி.இவர்களுக்குத்... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: சகோதரர்கள் வெட்டி கொலை; கொலையாளிகளைத் தேடும் போலீஸ்; அறந்தாங்கியில் அதிர்ச்சி சம்பவம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் உள்ள காமராஜர் நகரைச் சேர்ந்த காத்தமுத்து மகன்கள் கண்ணன் (வயது: 32) மற்றும் கார்த்தி (வயது: 28). இதில், கண்ணனுக்குத் திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில் கார்த்தி... மேலும் பார்க்க