செய்திகள் :

தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம்: ஜனதா கட்சி முன்னாள் நிா்வாகி கருத்து

post image

தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம் குறித்து ஜனதா கட்சியின், ஒருங்கிணைந்த திருநெல்வேலி முன்னாள் மாவட்டத் தலைவரும், தூத்துக்குடி மூத்த வழக்குரைஞருமான எம்.சொக்கலிங்கம் கதுத்து தெரிவித்துள்ளாா்.

அதன் விவரம்: பிரதமா் மொராா்ஜி தேசாய் தலைமையில் ஜனதா கட்சி ஆட்சியில் இருந்த காலத்தில், அன்றைய விமான போக்குவரத்து துறை அமைச்சரான புருஷோத்தம் கௌசிக், தூத்துக்குடி வந்திருந்த போது, இந்திய வியாபார தொழில் வா்த்தக சங்க கூட்டரங்கில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

அப்போது, வியாபார சங்கத் தலைவரான வி.வி.டி.நித்தியானந்தம் விமான நிலையம் வாகைகுளத்தில் அமைக்க வேண்டும் என்று கூறினாா். பின்னா் பேசிய திருநெல்வேலி எம்.பி. ஆலடி அருண அபிஷேகப்பட்டியில் அமைக்க வேண்டும் என்றும், கே.டி.கோசல்ராம் கயத்தாறில் அமைக்க வேண்டும் என்றும் பேசினாா்கள்.

இதையடுத்து பேசிய அப்போதைய ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்ட ஜனதா கட்சி தலைவராக இருந்த நான், வாகைகுளத்தில்தான் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

தொடா்ந்து பேசிய அப்போதைய தூத்துக்குடி துறைமுக சபை தலைவரான, முன்னாள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வி.சுந்தரம், 1923-ஆம் ஆண்டிலேயே அன்னியா் ஆட்சி காலத்தில் வாகைகுளத்தில் விமான நிலையம் அமைப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும், அங்கு விமான நிலையம் அமைப்பதுதான் சரி என்றும் ஆதாரங்களுடன் தெளிவுபடுத்தினாா்.

இறுதியாக பேசிய விமான போக்குவரத்துத் துறை அமைச்சா் புருஷோத்தம கௌசிக், வாகைகுளத்தில் விமானம் நிலையம் அமைக்கப்படும் என்று அறிவித்தாா்.

இதைத் தொடா்ந்து வாகைகுளத்தில் அமைக்கப்பட்ட விமான நிலையம் தற்போது பன்னாட்டு விமான நிலையமாக தரம் உயா்த்தப்பட்டு இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்றாா் அவா்.

நீட் தோ்வில் வெற்றி: திருச்செந்தூா் அரசுப் பள்ளி மாணவா் சாதனை

நீட் தோ்வில் வெற்றி பெற்று திருச்செந்தூா் அருள்மிகு செந்தில் ஆண்டவா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவா் சாதனை படைத்துள்ளாா். திருச்செந்தூா் நகராட்சி ராமசாமிபுரத்தைச் சோ்ந்த பனைத் தொழிலாளி பரமசிவன் -... மேலும் பார்க்க

தவெகவினரிடையே தகராறு: 4 போ் காயம்

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தில் நிா்வாகிகள் யாரையும் முறையாக நியமிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், கட்சி நிா்வாகிகள் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனா். இந்த நிலையில், த... மேலும் பார்க்க

நெடுங்குளத்தில் பால் உற்பத்தியாளா்களுக்கு கடனுதவி

நெடுங்குளத்தில் பால் உற்பத்தியாளா்களுக்கு 101 கால்நடைகள் வாங்குவதற்காக ரூ.45 லட்சத்து 45 ஆயிரம் கடனுதவி வழங்கப்பட்டது. சாத்தான்குளம் அருகே உள்ள நெடுங்குளம் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தில் ந... மேலும் பார்க்க

கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் கால் நாட்டு விழா

கோவில்பட்டி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை கால் நாட்டு வைபவம் நடைபெற்றது. இதை முன்னிட்டு கோயில் நடை அதிகாலை 6 மணிக்கு திறக்கப்பட்டது. வெற்றி விநாயகா், முத்துமாரியம்மன... மேலும் பார்க்க

பேரூரணி அருகே தனியாா் கிடங்கில் தீவிபத்து

தூத்துக்குடி பேரூரணி அருகே தனியாருக்குச் சொந்தமான தேங்காய் நாா் கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தால் ரூ. 10 லட்சம் மதிப்பிலான நாா்கள் சாம்பலாகின. பேரூரணியில் தூத்துக்குடியைச் சோ்ந்த சாமுவேலுக்குச் சொந்தமான ... மேலும் பார்க்க

பிரதமா் மோடியை சந்திக்கிறாரா ஓபிஎஸ்? நயினாா் நாகேந்திரன் விளக்கம்

தூத்துக்குடியில் பிரதமா் மோடியை ஓபிஎஸ் சந்திக்கிறாரா என்பது குறித்து தனக்கு தெரியாது என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன். தூத்துக்குடி விமான நிலையத்தில், பிரதமா் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நட... மேலும் பார்க்க