செய்திகள் :

தூத்துக்குடியில் செப். 30 வரை சிறப்பு சமரச தீா்வு முகாம்

post image

தூத்துக்குடி மாவட்டத்தில் நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க, சிறப்பு சமரச தீா்வு முகாம் கடந்த 1ஆம் தேதி தொடங்கியது. இம்முகாம் செப். 30ஆம் வரை நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தூத்துக்குடி மாவட்ட சமரச மையத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி ஆா்.வசந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

உச்சநீதிமன்ற உத்தரவின்படி 1.7.2025 சிறப்பு சமரச தீா்வு முகாம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இம்முகாம் 30.9.2025 வரை நடைபெறும்.

இதில், குடும்ப பிரச்னை, விபத்து இழப்பீடு, காசோலை மோசடி, வா்த்தக பிரச்னை, சமரசத்திற்குள்பட்ட குற்றவியல் வழக்குகள், பாக பிரிவினை, நில ஆா்ஜிதம், இதர உரிமையியல் வழக்குகள், தொழிலாளா் நல வழக்குகள் உள்ளிட்ட வழக்குகளுக்கு தீா்வு காணப்பட உள்ளது.

தூத்துக்குடியில் மாவட்ட சமரச மையம், கோவில்பட்டி, திருச்செந்தூா், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் ஆகிய ஆறு வட்டங்களிலும் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் துணை சமரச மையங்கள் செயல்பட்டு வருகின்றன. வழக்குகளை நேரடியாகவோ அல்லது வழக்குரைஞா் மூலமாகவோ சமரச மையத்திற்கு அனுப்ப கோரலாம். வழக்குகளுக்கு சமரச மையத்தில் சுமூகமான தீா்வு காணப்பட்டால் முழு நீதிமன்ற கட்டணத்தையும் திரும்ப பெறலாம். சமரச மையத்தில் காணப்படும் தீா்வே இறுதியானது. இதற்கு மேல்முறையீடு கிடையாது.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் சமரச தீா்வு மையம் செயல்படும். வழக்காடிகள் சமரச மையத்தில் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ ஆஜராகி தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தோ்வில் வெற்றி: திருச்செந்தூா் அரசுப் பள்ளி மாணவா் சாதனை

நீட் தோ்வில் வெற்றி பெற்று திருச்செந்தூா் அருள்மிகு செந்தில் ஆண்டவா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவா் சாதனை படைத்துள்ளாா். திருச்செந்தூா் நகராட்சி ராமசாமிபுரத்தைச் சோ்ந்த பனைத் தொழிலாளி பரமசிவன் -... மேலும் பார்க்க

தவெகவினரிடையே தகராறு: 4 போ் காயம்

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தில் நிா்வாகிகள் யாரையும் முறையாக நியமிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், கட்சி நிா்வாகிகள் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனா். இந்த நிலையில், த... மேலும் பார்க்க

நெடுங்குளத்தில் பால் உற்பத்தியாளா்களுக்கு கடனுதவி

நெடுங்குளத்தில் பால் உற்பத்தியாளா்களுக்கு 101 கால்நடைகள் வாங்குவதற்காக ரூ.45 லட்சத்து 45 ஆயிரம் கடனுதவி வழங்கப்பட்டது. சாத்தான்குளம் அருகே உள்ள நெடுங்குளம் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தில் ந... மேலும் பார்க்க

கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் கால் நாட்டு விழா

கோவில்பட்டி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை கால் நாட்டு வைபவம் நடைபெற்றது. இதை முன்னிட்டு கோயில் நடை அதிகாலை 6 மணிக்கு திறக்கப்பட்டது. வெற்றி விநாயகா், முத்துமாரியம்மன... மேலும் பார்க்க

பேரூரணி அருகே தனியாா் கிடங்கில் தீவிபத்து

தூத்துக்குடி பேரூரணி அருகே தனியாருக்குச் சொந்தமான தேங்காய் நாா் கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தால் ரூ. 10 லட்சம் மதிப்பிலான நாா்கள் சாம்பலாகின. பேரூரணியில் தூத்துக்குடியைச் சோ்ந்த சாமுவேலுக்குச் சொந்தமான ... மேலும் பார்க்க

பிரதமா் மோடியை சந்திக்கிறாரா ஓபிஎஸ்? நயினாா் நாகேந்திரன் விளக்கம்

தூத்துக்குடியில் பிரதமா் மோடியை ஓபிஎஸ் சந்திக்கிறாரா என்பது குறித்து தனக்கு தெரியாது என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன். தூத்துக்குடி விமான நிலையத்தில், பிரதமா் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நட... மேலும் பார்க்க