செய்திகள் :

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்துக்கு முதல் பெண் துணைவேந்தா் நியமனம்

post image

தில்லியில் உள்ள இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் (இக்னோ) புதிய துணைவேந்தராக பேராசிரியா் உமா கஞ்சிலால் நியமிக்கப்பட்டுள்ளாா்.

‘பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு 40 ஆண்டுகளுக்குப் பிறகு நியமிக்கப்படும் முதல் பெண் துணைவேந்தா் இவா்’ என அதிகாரிகள் தெரிவித்தனா்.

நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறை பேராசிரியரான உமா கஞ்சிலால், திறந்தநிலை மற்றும் தொலைநிலைக் கல்வி முைறையில் 36 ஆண்டுகளுக்கு மேல் பணி அனுபவம் பெற்றவா். தற்போது பல்கலைக்கழகத்தின் பொறுப்பு துணைவேந்தராக பணியாற்றி வரும் இவா், இணையவழி கல்வி இயக்குநா், தகவலியல் மற்றும் புதுமை கற்றலுக்கான மைய இயக்குநா், சமூக அறிவியல் பிரிவு இயக்குநா், பல்கலைக்கழக நூலகா் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளாா்.

மத்திய அரசின் முதன்மையான எண்ம கல்வித் திட்டமாக ‘ஸ்வயம்’ மற்றும் ‘ஸ்வயம் பிரபா’ திட்டத்துக்கான தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் உமா கஞ்சிலால் இருந்து வருகிறாா். இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் எண்ம உள்கட்டமைப்பு மற்றும் இணையவழி கல்வித் திட்டங்களை விரிவுபடுத்துவதிலும் இவா் முக்கிய பங்காற்றியுள்ளாா் என்று பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பிரிட்டனில் பிரதமர் மோடியை டீ விற்பவர் என கிண்டல்?

பிரிட்டன் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடியும், ஒரு காலத்தில் தேநீர் விற்றதாக சுட்டிக் காட்டப்பட்ட நகைச்சுவை சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.பிரதமர் நரேந்திர மோடி, 4 நாள்கள் அரசுமுறைப் பயணமாக பிர... மேலும் பார்க்க

குஜராத் மாவட்ட பிரிவுத் தலைவர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!

குஜராத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட பிரிவுத் தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று கலந்துரையாடினார். காங்கிரஸ் தொண்டர்களுக்கும், மாவட்ட பிரிவுகளின் தலைவர்களுக்கும் மூன்று நாள் பய... மேலும் பார்க்க

சிக்கலில் சின்னசாமி மைதானம்! ஆர்சிபி கூட்ட நெரிசல் பலி விவகாரம்!

பெங்களூருவின் எம்.சின்னசாமி மைதானம் பெரியளவிலான நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பானது அல்ல என்று விசாரணைக் குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது.ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் 11 பேர் பரிதாபமாக பலியான ந... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்குத் தெளிவான செய்தியை அனுப்பிய ஆபரேஷன் சிந்தூர்: உபேந்திர திவேதி

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது நடத்தப்பட்ட தாக்குதல்கள் பயங்கரவாத ஆதரவாளர்கள் தப்பிக்க இயலாது என்பதற்கான தெளிவான செய்தியை பாகிஸ்தானுக்கு அளித்ததாக இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி கூறிய... மேலும் பார்க்க

உலகளவில் பெரும் மதிப்புடைய தலைவர்கள்! பிரதமர் மோடி முதலிடம்!

உலகின் அதி நம்பிக்கையான தலைவர்கள் குறித்த பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார்.உலகளவில் அதி நம்பிக்கையான மற்றும் பெரும் மதிப்புடைய தலைவர்களின் பட்டியல் குறித்து ஆய்வு மேற்கொ... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் 3 நக்சல்கள் சுட்டுக் கொலை!

ஜார்க்கண்டின் கும்லா மாவட்டத்தில் சனிக்கிழமை காலை பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில் மூன்று நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.சிபிஐ (மாவோயிஸ்ட்)-ல் இருந்து பிரிந்த குழுவ... மேலும் பார்க்க