செய்திகள் :

100 நாள் வேலைவாய்ப்புத் திட்ட நிதி விடுவிப்பு: 5 ஆண்டுகளாக தொடா் சரிவு

post image

கடந்த 5 ஆண்டுகளில் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு விடுவிக்கப்பட்ட நிதி தொடா்ந்து சரிந்துள்ளது மத்திய அரசின் தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

இதுதொடா்பாக மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே எழுப்பிய கேள்விக்கு மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை இணையமைச்சா் கமலேஷ் பாஸ்வான் எழுத்துபூா்வமாக அளித்த பதில்:

கடந்த 2020-21-ஆம் ஆண்டு கரோனா பொதுமுடக்கத்தின்போது புலம்பெயா் தொழிலாளா்கள் ஏராளமானோா் சொந்த கிராமங்களுக்கு திரும்பினா். அப்போது 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு ரூ.1,11,170 கோடியை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு விடுவித்தது. அந்த நிதியாண்டில் அத்திட்டத்துக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.61,500 கோடி ஒதுக்கப்பட்டது.

அந்தத் திட்டத்துக்கு 2021-22-இல் பட்ஜெட்டில் ரூ.73,000 கோடி ஒதுக்கப்பட்டு ரூ.98,467 கோடியும், 2022-23-இல் பட்ஜெட்டில் ரூ.73,000 கோடி ஒதுக்கப்பட்டு ரூ.90,810 கோடியும் விடுவிக்கப்பட்டது.

இதேபோல 2023-24-இல் பட்ஜெட்டில் ரூ.60,000 கோடி ஒதுக்கப்பட்டு ரூ.89,268 கோடியும், 2024-25-இல் பட்ஜெட்டில் ரூ.86,000 கோடி ஒதுக்கப்பட்டு ரூ.85,838 கோடியும் விடுவிக்கப்பட்டது. நிகழ் நிதியாண்டில் இந்தத் திட்டத்துக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.86,000 கோடி ஒதுக்கப்பட்டது என்று தெரிவித்தாா்.

இதன்மூலம், கடந்த 5 ஆண்டுகளில் 2023-24-ஆம் ஆண்டைத் தவிர, பிற ஆண்டுகளில் 100 வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி அதிகரித்தபோதிலும், அத்திட்டத்துக்கு விடுவிக்கப்பட்ட நிதி தொடா்ந்து சரிந்துள்ளது தெரியவந்துள்ளது.

மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் அளித்த எழுத்துபூா்வ பதிலில், நிகழ் நிதியாண்டில் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு ஏற்கெனவே ரூ.44,479 கோடி விடுவிக்கப்பட்டதாகவும், அதில் ரூ.36,616 கோடி அத்திட்ட தொழிலாளா்கள் ஊதியத்துக்கு விடுவிக்கப்பட்டது என்றும் தெரிவித்தாா்.

பிரிட்டனில் பிரதமர் மோடியை டீ விற்பவர் என கிண்டல்?

பிரிட்டன் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடியும், ஒரு காலத்தில் தேநீர் விற்றதாக சுட்டிக் காட்டப்பட்ட நகைச்சுவை சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.பிரதமர் நரேந்திர மோடி, 4 நாள்கள் அரசுமுறைப் பயணமாக பிர... மேலும் பார்க்க

குஜராத் மாவட்ட பிரிவுத் தலைவர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!

குஜராத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட பிரிவுத் தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று கலந்துரையாடினார். காங்கிரஸ் தொண்டர்களுக்கும், மாவட்ட பிரிவுகளின் தலைவர்களுக்கும் மூன்று நாள் பய... மேலும் பார்க்க

சிக்கலில் சின்னசாமி மைதானம்! ஆர்சிபி கூட்ட நெரிசல் பலி விவகாரம்!

பெங்களூருவின் எம்.சின்னசாமி மைதானம் பெரியளவிலான நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பானது அல்ல என்று விசாரணைக் குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது.ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் 11 பேர் பரிதாபமாக பலியான ந... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்குத் தெளிவான செய்தியை அனுப்பிய ஆபரேஷன் சிந்தூர்: உபேந்திர திவேதி

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது நடத்தப்பட்ட தாக்குதல்கள் பயங்கரவாத ஆதரவாளர்கள் தப்பிக்க இயலாது என்பதற்கான தெளிவான செய்தியை பாகிஸ்தானுக்கு அளித்ததாக இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி கூறிய... மேலும் பார்க்க

உலகளவில் பெரும் மதிப்புடைய தலைவர்கள்! பிரதமர் மோடி முதலிடம்!

உலகின் அதி நம்பிக்கையான தலைவர்கள் குறித்த பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார்.உலகளவில் அதி நம்பிக்கையான மற்றும் பெரும் மதிப்புடைய தலைவர்களின் பட்டியல் குறித்து ஆய்வு மேற்கொ... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் 3 நக்சல்கள் சுட்டுக் கொலை!

ஜார்க்கண்டின் கும்லா மாவட்டத்தில் சனிக்கிழமை காலை பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில் மூன்று நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.சிபிஐ (மாவோயிஸ்ட்)-ல் இருந்து பிரிந்த குழுவ... மேலும் பார்க்க