செய்திகள் :

இஸ்ரேலின் தீர்மானத்துக்கு இந்தோனேசியா கண்டனம்!

post image

மேற்கு கரையை ஆக்கிரமித்து இணைக்க, இஸ்ரேலின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு, இந்தோனேசியா அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனர்களின் வெஸ்ட் பாங்க் என்ற அழைக்கப்படும் மேற்கு கரை நகரத்தை, ஆக்கிரமித்து இணைப்பதற்கு இஸ்ரேலின் நாடாளுமன்றத்தில், நேற்று (ஜூலை 23) தீர்மனம் நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தீர்மானம் சட்ட ரீதியான தாக்கங்களைக் கொண்டிருக்காது எனக் கருதப்பட்டாலும், சர்வதேச நாடுகள் சில அதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், பாலஸ்தீன பகுதிகளின் மீது இஸ்ரேலுக்கு எந்தவொரு உரிமையும் இல்லை எனக் கூறி, அந்நாட்டின் தீர்மானத்துக்கு இந்தோனேசியா அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, இந்தோனேசியாவின் வெளியுறவுத் துறை இன்று (ஜூலை 24) வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

”இஸ்ரேலின் இந்த நடவடிக்கை, நிலப்பகுதிகளை வலுக்கட்டாயமாகக் கையகப்படுத்தக் கூடாது எனும் அடிப்படை கொள்கைகளை மீறியுள்ளது.

இரு மாநில தீர்மானத்துக்கு இணங்கி, கிழக்கு ஜெருசலேமை அதன் தலைநகராகக் கொண்ட, 1967-க்கு முந்தைய எல்லைகளுக்குள் பாலஸ்தீனத்தை நிறுவி, இறையாண்மைக் கொண்ட அரசை உருவாக்குவதற்கான எங்களது ஆதரவை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளோம்” எனக் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் மற்றும் சர்வதேச நாடுகள் இணைந்து இஸ்ரேலின் சட்டவிரோத நடவடிக்கைகளை, உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் இந்தோனேசிய அரசு வலியுறுத்தியுள்ளது.

இதையும் படிக்க: யூதர்கள் என்பதால் பயணிகள் வெளியேற்றம்? ஸ்பெயின் விமான நிறுவனம் விளக்கம்!

The Indonesian government has strongly condemned the resolution passed by the Israeli parliament to annex the West Bank.

இத்தாலியில் சாலையில் திடீரென விழுந்து தீப்பிடித்த சிறிய ரக விமானம்: 2 பேர் பலி

இத்தாலியில் சாலையில் விழுந்து சிறிய ரக விமானம் தீப்பிடித்ததில் 2 பேர் பலியாகினர். இத்தாலியின் பிரெசியா மாகாணத்தில் உள்ள அஸ்ஸானோ மெல்லா நகருக்கு அருகே நெடுஞ்சாலையில் சிறிய ரக விமானம் ஒன்று திடீரென வெள்... மேலும் பார்க்க

இலங்கை: 40 நாடுகளுக்கு இலவச விசா!

இலங்கைக்கு வருகை தரும் சுமார் 40 வெளிநாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு இலவச சுற்றுலா விசா வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு வருகை தரும், இந்தியா, சீனா, இந்தோனேசியா, ரஷியா, தாய்லாந்து, மலே... மேலும் பார்க்க

தாய்லாந்தில் அவசரநிலை பிரகடனம்: பதற்றமான சுழல்!

கம்போடியாவுடன் சண்டை தீவிரமடைந்துள்ளதால் தாய்லாந்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளுக்கிமிடையே புராதனக் கோவில் விவகாரத்தால் வியாழக்கிழமை(ஜூலை 24) சண்டை மூண்டு பிற பகுதிகளுக்கும் ... மேலும் பார்க்க

துருக்கியில்.. இ3 நாடுகள் - ஈரான் இடையில் அணுசக்தி பேச்சுவார்த்தை!

துருக்கியில், இ3 நாடுகள் (E3) மற்றும் ஈரான் இடையில் அணுசக்தி பேச்சுவார்த்தை இன்று (ஜூலை 25) துவங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கியின் இஸ்தான்புல் நகரத்தில், இ3 என்றழைக்கப்படும் ஜெர்மனி, பி... மேலும் பார்க்க

வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், இன்ஸ்டாவில் இனி அரசியல் பதிவுகளுக்கு கட்டுப்பாடு!

அரசியல் சம்பந்தப்பட்ட விளம்பரங்களை மெட்டா நிறுவனத்தின் சமூக ஊடக தளங்களில் பதிவிட அந்நிறுவனம் தடை விதிக்கவுள்ளது.அமெரிக்காவைs சேர்ந்த மெட்டா நிறுவனம் தங்கள் சமூக ஊடக தளங்களில் (வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், இன... மேலும் பார்க்க

வியட்நாமில் பேருந்து விபத்து: குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

வியட்நாமில் பேருந்து கவிழ்ந்ததில் குழந்தைகள் உள்பட 9 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வியட்நாமில் ஹனோயிலிருந்து டானாங்கிற்கு பேருந்து இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. அப்போது இந்த பேர... மேலும் பார்க்க