செய்திகள் :

மே.வங்கத்தில் மின்னல் பாய்ந்து 13 பேர் பலி!

post image

மேற்கு வங்கத்தின் பங்குரா மற்றும் புர்பா பர்தாமன் ஆகிய மாவட்டங்களில், இன்று (ஜூலை 24) மின்னல் பாய்ந்து 13 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்குரா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், இன்று (ஜூலை 24) மின்னல் பாய்ந்து 8 பேர் பலியானதாக, அம்மாவட்டத்தின் காவல் துறை உயர் அதிகாரி வைபவ் திவாரி தெரிவித்துள்ளார்.

இதில், பங்குராவின் ஒண்டா பகுதியில் 4 பேரும், கோடுல்புர், ஜாய்பூர், பட்ராசயேர் மற்றும் இண்டாஸ் ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் மின்னல் பாய்ந்து பலியாகியது தெரிய வந்துள்ளது.

இதேபோல், புர்பா பர்தாமன் மாவட்டத்தில் 5 பேர் மின்னல் பாய்ந்து பலியானதுடன், 4 பேர் படுகாயமடைந்துள்ளதாக, பேரிடர் மேலணமை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அம்மாவட்டத்தின், மாதாப்திஹி பகுதியில் 2 பேரும், அவூஸ்கிராம், மங்கல்கோட் மற்றும் ரெய்னா ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் பலியாகியுள்ளனர்.

இதையடுத்து, படுகாயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மோசமான வானிலையின்போது மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிக்க: அரசமைப்பில் மதச்சார்பின்மை நீக்கப்படாது... ஆனால்! - மத்திய அரசு பதில்

Thirteen people were reported killed in lightning strikes in West Bengal's Bankura and Purba Bardhaman districts today (July 24).

விழி படலத்தை மாற்றாமல் பாா்வையை மீட்கும் மருத்துவ நுட்பம்: டாக்டா் அமா் அகா்வால் கண்டுபிடிப்பு

விழி வெண்படலம் (காா்னியா) சேதமடைந்தால் அதை மாற்றாமல் அதற்கு பதிலாக பின்ஹோல் பியூபிலோபிளாஸ்டி (பிபிபி) சிகிச்சை மூலம் பாா்வையை மீட்கும் நுட்பத்தை டாக்டா் அகா்வால்ஸ் மருத்துவக் குழுமத்தின் தலைவா் டாக்டா... மேலும் பார்க்க

துல்லியத் தாக்குதல் நடத்த உதவும் ரேடாா்கள் கொள்முதல்: ரூ.2,000 கோடியில் ஒப்பந்தம் கையொப்பம்

இலக்குகளைக் குறிவைத்து துல்லியத் தாக்குதல் நடத்த தகவல்களை பரிமாற்றம் செய்யும் வான் பாதுகாப்பு ரேடாா்களை கொள்முதல் செய்வதற்காக பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் ரூ.2,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் ... மேலும் பார்க்க

இந்தியா - நியூசிலாந்து இடையில் 3-ம் சுற்று வர்த்தக பேச்சு! எப்போ?

இந்தியா - நியூசிலாந்து இடையிலான 3-ம் சுற்று வர்த்தக பேச்சுவார்த்தை, வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் என மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இருநாடுகளுக்கு, இடையி... மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தரையிறக்கம்!

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரிலிருந்து மும்பைக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஜெய்ப்பூரில் தரையிறக்கப்பட்டது.ஜெய்ப்பூர் விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியாவின் ஏஐ612 விமான... மேலும் பார்க்க

இந்தியாவில் யானை தாக்குதல்: 2,800க்கும் மேற்பட்டோர் பலி

2019 முதல் 2023 வரை இந்தியாவில் யானை தாக்குதல்களால் 2,800க்கும் மேற்பட்டோர் பலியானதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநிலங்களவையில் எம்.பி. ஜான் பிரிட்டாஸின் கேள்விக்கு பதிலளித்த சுற்றுச்சூ... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் தேடப்பட்டு வந்த 4 நக்சல்கள் கைது!

சத்தீஸ்கர் மாநிலத்தில், வெடிகுண்டு தாக்குதல் நடத்த முயன்ற 4 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சுக்மா மாவட்டத்தில், கடந்த ஜூன் 29 ஆம் தேதி, பாதுகாப்புப் படையினரின் முகாம் அருகி... மேலும் பார்க்க